•9:59 AM
நாள் : DECEMBER 31, 2012 நேரம் : விடிகாலை 4.53
நிசப்த்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அமைதியை குலைக்கும் வகையில், குடியிருப்பை ஒட்டிய அந்த ரோட்டில் காற்றை விட வேகமாய் ஒரு கார் சீறிப் பாய்ந்தது... திடுக்கென்று பயந்து எழுந்தான் நம் நாயகன்... "காதல் மன்னன்" படத்தில் அஜித் க்கு எழுதிய வரிகள் - "அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்...." இவனுக்கும் பொருந்தும்... தூங்கி எழுந்த முகம், கலைந்த தலை...இருப்பினும் அழகாய் தான் இருந்தான்...
அந்த 15 X 17 சதுர அடி உள்ள அறை முழுவதும் இருள் பரவிக் கிடந்திருந்தது... மெல்ல தன் இடது கையை போர்வையின் வெளியே நீட்டி, கட்டிலின் side table ல் எதையோ தேடியவன் கையில் சிக்கியது iPhone 5; phone ன் பொத்தானை அமுக்கிய அடுத்த நொடி கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் மணி 4.55 என்று காண்பித்தது. இனி தூங்கினா மாதிரி தான் என்று சலித்துக்கொண்டவன் மனதில் ஆயிரம் ஓட்டங்கள் ....நாளை புது வருடம் பிறக்கிறது..நாள் எவ்வளவு வேகமா ஓடுது...இப்போதான் அமெரிக்க வந்தாப்போல இருக்கு அதுக்குள்ள 5 வருடம் ஓடிவிட்டது... இந்த 5 வருஷத்துல எவ்வளவு விஷயம் நடந்திருக்கு...எவ்வளவு இனிய தருணங்கள் ...எவ்வளவு கசப்பனா விஷயங்கள்.. சொல்லப்போன இப்போதான் 2011 பிறந்தாப்போல இருந்தது அதுக்குள்ள அடுத்த வருஷப்பிறப்பு...ம்ம்ஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு, மீண்டும் ஒருமுறை மணி பார்த்தான். phone -ன் வெளிச்சத்தில் பக்கத்தில் நன்கு தூங்கிக்கொண்டிருக்கும் தன் மனைவி ப்ரியா வை பார்த்து 'இவளுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி தூக்கம் வருதோ என்று யோசித்து முடிக்கும் முன், "என்ன மாமா தூங்கலையா? அப்படி என்ன யோசனை காலையே? " என்றாள் ப்ரியா .
"ஒன்னும் இல்ல ப்ரியா நீ தூங்கு; But தூங்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கேள்வி" என்றான்..."காலிலே 5 மணிக்கு என்ன டவுட் உங்களுக்கு? சரி கேளுங்க" என்றாள் ப்ரியா சலிப்புடன்.."New Year Resolution க்கு தமிழ் லே என்ன? நான் Blog update பண்ணனும் " என்று கேட்ட அடுத்த நிமிடமே ப்ரியாவின் கண்கள் அந்த இருட்டையும் மீறி சிவப்பை கொப்பளித்தது ; அவ்வளவு கொலை வெறி...."அப்படி என்ன கேட்க கூடாத கேள்வியே கேட்டுட்டோம் என்று யோசித்தான் நம்ம ஹீரோ....அது வேற யாரும் இல்ல நான் தாங்கோவ் ...ஹி... ஹி... ஹி ....
"கொஞ்ச நாளா (இல்ல மாசமா...) இல்லாம இருந்த பிரச்சனை திரும்ப ஆரம்பிடிச்சிடா ... .ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு பட் பினிஷிங் சரி இல்லையே பா" ன்னு நீங்க சொல்றது புரிது...
இப்படிதான் போன வருஷம் december 31 லே "த்து" ன்னு ஒரு பதிவு எழுதி, நீயே உன்னை நல்லா திட்டி, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி காரி துப்பிகொண்டது மட்டுமில்லாம,
இந்த புது வருடப் பிறப்புக்கு தொடர்ச்சியா பதிவுகளை படைத்திட உறுதி மொழி எடுக்கிறேன்.. ன்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லிட்டு மொத்தம் நாளே நாலு பதிவு போட்டதுமில்லாம, காலை 5 மணிக்கு கட்டின பாவத்துக்கு பக்கத்துலே படுத்து நல்லா தூங்கற பொண்டாட்டியை எழுப்பி ."New Year Resolution க்கு தமிழ் லே என்ன? நான் Blog update பண்ணனும் " சொன்னா கொலை வெறியா லுக் விடாம; Romantic லுக்கா விடுவா?
சரி விஷயத்துக்கு வருவோம்...(அடப் பாவி 6 paragraph இடை விடாம எழுதி இருக்க; இன்னும் விஷயத்துக்கே வரலையா? ஒரு உண்மையான பதிவருக்கு உண்டான தகுதியே வச்சிக்கிட்டு ஏன்டா நெறைய எழுத மாட்டேன்கர???....) உண்மைய சொல்லப்போன எனக்கு New Year Resolution அது இது ன்னு எந்த நம்பிக்கையும் இல்ல...யாரவது அப்படி எடுத்தாலும் "எதையாவது பண்ணனும் ன்னு முடிவு பண்ணா உடனே பண்ணு அதென்ன New Year வரை ஒரு சாக்கா வச்சி காலம் கடத்தறது? ன்னு கேட்பேன்...கேட்கும் போது easy யா இருக்கு...நடைமுறையில் தான் எவ்வளவு சிக்கல்?... ஒன்னும் இல்ல பதிவு எழுதணும் ...நெறைய எழுதணும் ... ரசிகர்களின் ஆதரவை பெற்று சினிமா அரசியல் ன்னு முன்னேறனும் (அடங்க மாட்ட????) இது என்னோட போன வருஷ உறுதி மொழி ...அதுக்கு 1. நேரம் கிடைக்கணும் 2. பதிவுக்கு களம், கருத்து கிடைக்கணும் (டேய் டேய் நீ எழுதின எதிலும் அது இல்லையே ??? ) 3. கிடைச்ச பதிவு களத்துக்கு நல்ல தலைப்பு கெடைக்கணும்....இப்படி பல சிக்கல்கள்...போதா குறைக்கு நடைமுறையில் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தையை கையாளுவது....Resolution க்கு, உறுதிமொழி தான் தமிழாக்கமா? சத்தியமா எனக்கு தெரில்லே..ஆனா கண்டிப்பா வேற ஒன்னு இருக்குன்னு மட்டும் தெரியும்... அத யோசனை பண்ணா அடுத்த வருஷம் பொறந்திடும்...சரி நமக்கு தான் தமிழ் ஞானம் பத்தல ன்னு என் மனைவியே கேட்டா கண்ணு சிவக்க முறைக்கிறா ...இப்ப சொல்லுங்க நான் பாவம் இல்லையா??
யோசிச்சு பார்த்தா உண்மையில் இதெல்லாம் சிக்கல்கள் இல்லை...சும்மா சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க பயன்படுத்தும் யுக்திகள்...செய்யணும் ன்னு முடிவு பண்ணிட்ட களத்துல எறங்கி செய்யணும்... யோசிச்சிட்டே இருந்தா காலம் கடத்தலாமே தவிர ஒன்னும் உருப்படியா பண்ண முடியாது... (டேய் இப்போ என்னதான் சொல்ல வர?)
ஆக மொத்தத்துலே இந்த ஊர், பக்கத்துக்கு ஊர் அண்ட் உலகலாவிய என் ரசிக பெருமக்களுக்கு நான் சொல்ல வவரர்து என்ன நா... இந்த வருஷம் கண்டிப்பா நெறைய எழுத முயற்சி பண்ணனும் என்பது தான் என்னோட உறுதிமொழி... பார்போம்...ஆனா ஒன்னு...மறுபடியும் 2014 லே அடுத்த பதிவு போட்ட மவனே...... No... No... எழுதுறதுல எனக்கு மன நிறைவு இருக்கு; ரொம்ப பிடிச்சிருக்கு...அதுக்காக கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம காதல் மன்னன் அஜித், உலக நாயகன் கமல் ன்னு கதை லே கூட உன்ன நீயே சொன்னே ...படவா பிச்சி புடுவேன் பிச்சி ...
1 comments:
neenga nadikar visuvoda frienda? good keep it up. wife a ella ezhuthuratha.