Author: Sathish
•6:40 PM
அம்மாடி...ஒரு வழியா நம்ம ஊர்லே தேர்தல் முடிஞ்சுதுடா சாமி....ஆளாளுக்கு பண்ண ரவுசு இருக்கே ...அட்ரா...அட்ரா... நம்மை ஆளப் போற தலைவர பார்த்தா நமக்கு ஒரு முன்னுதாரமா இருக்கணும்...அப்படி ஒருத்தர கூட பார்க்க முடியவில்லையேன்னு யோசிக்கும் போது  அழுகாச்சி அழுகாச்சியா வருது....நான் இங்கே [அமெரிக்காவில் ] இது வரை ரெண்டு தேர்தலே பார்த்திருக்கேன்...1 Governer தேர்தல் 2 . President மற்றும் Senetar தேர்தல். இங்கேயும் தான் ஊர் ஊரா போய்  பிரச்சாரம் பண்ணாக... இவர் தான் வேட்பாளர், அவர் யாரு, என்ன பண்ணாரு என்ன பண்ண போறாரு என்பதை எல்லாம் ஊடகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் பார்க்க  முடிஞ்சது.... அத பாத்துப்புட்டு,  நம்ம ஊரு தேர்தல்களில் நடந்த அளப்பரையே பார்க்கும் போது, இவங்கள பார்த்து நாம கத்துக்க வேண்டியது நெறைய இருக்குன்னு தோணுது...அதெல்லாம் கத்துக்கிட்டா ரொம்ப டீஜிண்டா (I mean decent ஆ ) ஆயிடுவோமே...அது எதுக்கு? 

அது சரி, தேர்தல் முடிஞ்சி ஒரு மாசமாகுது இப்போ என்னடா அத பத்தி எழுதற? பொலம்பறன்னு நினைக்காதீங்க... தேர்தல் முடிஞ்சாலும், தேர்தலுக்கான சுவடுகள மறைவதற்குள் அடுத்த தேர்தலே வந்துடும்... நான் ஆங்காகே ஒட்டி வச்சிருக்க விளம்பர பானர்களையும், போஸ்டர்களையும் தான் சொல்றேன்...அது என்ன தெரிலே, நம்ம ஆளுங்களுக்கு விளம்பரங்களில் உள்ள மோகத்தைப் பார்த்தா எனக்கு வயித்தெரிச்சலா  இருக்கு... நம்ம ஊர்லே டிஜிட்டல் போஸ்டர் என்ன அவ்வளவு சீப்பா? அநியாயத்துக்கு காமெடி பண்றாங்க... இடப்புறம் இருக்க படத்த பார்த்ததும்  என்னோட வயித்தெரிச்சலோட வலி உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நெனைக்கிறேன்...ஏன் இந்த கொலை வெறின்னு தான் எனக்கு தெரில்லே... இவங்கெல்லாம் எவ்வளவு பெரிய தலைவர்கள்...அவங்கள இப்படி இந்த கோணத்துல பார்க்கனுமா? அதிலும் கடைசியா இருக்க வ.வூ.சி யே பாருங்க [விஜயகாந்த் வாயில தயிர் வடை வச்சுக்க சொல்லி எடுத்திருப்பான்களோ?] இந்த போஸ்டர் மூலமா என்னதான் சொல்லவறாங்க? விஜயகாந்த் சார் க்கு இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்  பட்டது தெரியுமா? தெரிஞ்சா அவருக்கே  சிரிப்பு வருமே...

சரி போகட்டும், புது தலைவரு, புது தொண்டர்கள்.. ஆர்வக்கோளாறு ஏதோ பண்றாங்கன்னு பார்த்தா, பழம் தின்னு கொட்டை  போட்ட முன்னணித் தலைவர்களும் இப்படி காமெடி பண்றத தான் என்னால ஜீரணிக்க முடிலே... எப்படி தான் யோசிப்பாங்களோ? இந்த போஸ்டரப் பார்த்தா, எனக்கு 'நாடோடிகள்'  படத்துல வர அந்த காமெடி தலைவர் ஞாபகம் தான் வருது... கோ - கோ ன்னு அடுக்கு மொழிலே போடணும் என்பதற்காகவே போட்ட விளம்பரம் இதுன்னு நெனைக்கிறேன்...இதுல வேற பின்னாடி ADMK போஸ்டர்..ஒரு செகண்ட் நான், இந்த தேர்தல்லே இவங்க ரெண்டு பேரும் கூட்டணியோ ன்னு பதறிப் போயிட்டேன்.... பாருங்க ஸ்டாலின் தல மேல இரட்டை இல்லை சின்னம், கலைஞர் தலைக்கு  மேல MGR போட்டோ..

சரி, இதெல்லாம் தேர்தல் நேரத்துலே ஒரு மெசேஜ் வச்சி, ஏதோ கடைசி பென்ச் லே உட்க்கார்ந்து இருக்க தொண்டன் பண்ணிட்டான் விடுங்க..சில போஸ்டர்களா பார்த்தா என்னடா சொல்லவறீங்கன்னு தோனும்.  இது என்ன அரசியல் வருகைக்கான போஸ்டரா? இளைய தலவலி சீ தளபதி, தமிழகம் ஆயிட்டாரே... கட்சி ஆரம்பிச்சாச்சு, கொடி போட்டாச்சு ஏன் கண்டப் போராட்டம் கூட நடத்தியாச்சு...ஆனா பிரச்சாரம், பொதுக்கூட்டம் ன்னு மேடை ஏற மாட்டோம்...கோர்வையா என்னாலா பேசக் கூட முடியாது..ஆனா நான் ரௌடி ஆயிட்டேன் , ரௌடி ஆயிட்டேன் வடிவேலு சொல்ற மாதிரி நான் அரசியல்வாதி ஆயிட்டேன்ன்னு சொல்லிக்கவேண்டியது...அவர் பாஷையிலேயே  சொல்லனும்னா..."அண்ணா...என்னகன்னா இதெல்லாம்...நான் தெரியாம தான் கேட்கறேன் இதெல்லாம் தேவையா?"

இது யாருன்னு சத்யமா எனக்கு தெரில்லங்க.. பொங்கலுக்கு பெரிய கிரீடிங் கார்டு போட்டிருக்கார்னு நெனைக்கிறேன்... ஸ்வப்ப்பா....முடிலே... எதுக்காக இந்த விளம்பரம்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஏன் இப்படி ஊற நாசம் பண்றாங்க? பல கேள்விகள் நம்மிடையில், ஆனால் பதில் இல்லை....


விடு கழுதை, இந்த அரசியல் பிரமுகர்கள் தான் இப்படி பண்றாங்க பார்த்தா, இந்த போஸ்டர பார்க்கும் போது யாரை குறை சொல்றதுன்னு எனக்கு புரிலே... அந்த வரிகளை கூர்ந்து கவனிங்க மகா ஜனங்களே..."திரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பாம்!!!!1958 S.S.L.C மாணவர்கள் ன்னு 8 பேரோட போட்டோ வேற...இதில்லென்ன பெருமை வேண்டி கெடக்கு? தள்ளாத வயசுல இப்படி தறிகெட்டு திரியனுமா?

பிரபலமானவர்களின் அலும்பல்களுக்கு இணையாகத்தான் சாதாரண மக்களும் செயல் படுகிறார்கள். உன் வீட்டு நிகழ்ச்சிக்கு, வாழ்த்து தெரிவிக்க ஊரெல்லாம் எதுக்கு போஸ்டர் அடிக்கற? கல்யாணம் பண்றத அவ்வளவுப் பெரிய சாதனையாக கருதுகிறார்கள்...புதுமணத்   தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க, மாமா, அத்தை சித்தி சித்தாப்பா ஒன்னு விட்ட பெரியப்பா அவன் இவன்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு, முடிஞ்சா அவங்களோட போட்டோ வேற போட்டு, ரெண்டு ஆர்டின் உள்ளே கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளையோட பழைய போட்டோ போட்டு வாழத்துக்கள தெரிவிப்பாங்க... மண்டபத்தோட வாசல் லே வரவேற்க்க ஏதோ ஆசைக்கு ஒன்னு வைக்கராங்கன்னா  கூட பரவாயில்ல... அவங்க வீட்டு கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்ல ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ஓட்டறது எதுக்குங்க? இந்த போஸ்டர் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது...நான் பச்சைப்பன் கலைக் கல்லூரிலே படிக்கும் போதே என்னோட சீனியர் ஒருத்தன் படிக்கிற காலத்திலேயே கல்யாணம் பண்ணிகிட்டான்.. தலைவரு கல்யாணத்துக்கு அடிச்ச போஸ்டர்கள் போக, கொஞ்சம் புதுமையா இருக்கட்டும்ன்னு "கொடைக்கானலுக்கு தேனிலவு போய் வெற்றியுடன் திரும்பும் திருவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்' ன்னு அவன் சொந்தகாற பசங்க பேரெல்லாம் போட்டு அவன் தெரு புல்லா போஸ்டர் அடிச்சி ஒட்டி இருந்தான்... என்னோட வாய் தான் சும்மா இருக்காதே, 'என்ன சீனியர் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனியே, பாக்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சா? ன்னு கேட்டேன்...துரத்தி துரத்தி அடிக்க வந்துட்டான்..[சத்தியமா நான் கொடைக்கனால மனசுல வச்சி தான் கேட்டேன் ...ஹி ஹி ஹி ]... எதுக்கு ஓரார் வாய்க்கு அவல் போடற மாதிரி செய்திகள  போஸ்டர் லே  போடறது? பயபுள்ள அதுக்கப்புறம் போஸ்டர் போடறதில்ல லே ...

கல்யாணத்துக்கு மட்டுமில்ல...செத்தாலும் இதே மாதிரி தான்...செத்து போனவன் கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் போட்டு இரங்கல் தெரிவிகிறார்கள்...மின்னேலாம் இந்த மாதிரி போஸ்டர்லே ரெண்டு பெரிய கண்கள் போட்டு அதுலே இருந்து கண்ணீர் வரும்...இப்போ இறந்தவர்கள் கண்ணுலே இருந்தே கண்ணீர் வர மாதிரி எதுக்கு போடறாங்க? ஐயோ ஐயோ.. சிறு பிள்ளைத் தனமா லே இருக்கு... நாம சுத்தம்மா இல்லாம சும்மா சினிமாகாரர்களையும் , அரசியல்வாதிகளையும் பழிக்கக் கூடாது...நெனச்சதுக்கெல்லாம் நாமும் போஸ்டரப் போட்டு ஊர அசிங்கப்படுதிட்டு அடுத்தவர்கள்   மேல சொல்லக் கூடாது.....இப்படி அடிக்கற டிஜிட்டல் போஸ்டர் லே நான் வன்மையா கண்டிக்கறது ஒன்னு தான்....'எங்கள் வீட்டு மகாலட்சுமி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி" ன்னு சின்ன பொண்ணு போட்டோவ போட்டு ...ச்சே கொடுமைங்க இது...பாவம் அந்த புள்ள ஒழுங்கா ஸ்கூல்க்கு போயிட்டு வந்திருக்கும்....அத புடிச்சி  ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ...காளிபசங்க கிண்டல் பண்றதுக்கா? முட்டாள்தனமான போஸ்டர்லே முதல் இடமே இந்தமாதிரி சமாசாரத்துக்கு போஸ்டர் அடிக்கறது தான். நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க மக்களே!!!!