Author: Sathish
•4:13 PM
 விஷயம் ஒண்ணுமில்லையா? இல்ல என் மூளை ஒழுங்கா வேலை செய்யவில்லையா? [ரொம்ப வெகுளியாவே இருக்கேன் பாருங்க...32 வயசாகியும் இன்னமும் மூளை வேலை செய்யாதத திண்ணமா உணர முடியல ஹி ஹி ஹி ] பதிவு போட்டு பல நாள் ஆச்சு!! அப்படியே ஒரு பதிவு எழுதினாலும் அது திரை விமர்சனமா தான் இருக்கு...இது வேலைக்காகதுடியோவ்...பார்த்து பக்குவமா நடந்துக்க....இப்படியே போனா வர ஒன்னு ரெண்டு கம்மேண்டுக்கும் ஆப்பு வந்துடும்...

சரி நாம விஷயத்துக்கு வருவோம்...பல பேர் திட்டுற அளவுக்கு அப்படி ஒன்னும் வெளங்காத படம் இல்லைங்க நடுநிசி நாய்கள். கண்டிப்பாக கவுதம்மேனன் எடுத்துக்கொண்ட கதைக் களத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்பித்தது முதல் முடிவு வரை தொய்வே இல்லாத திரைக்கதை. தமிழில் ஒரு கிரைம் த்ரில்லர் திரைக்கு வந்து பல காலம் ஆகிறது...பல பதிவுகளில் இந்தப் படத்துக்கு பல எதிர்ப்புகள், வன்மையான விமர்சனங்கள் இருப்பதை என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது...மகன் தந்தை உறவு, மகன் வளர்ப்புத் தாய் உறவு என முரண்பாடான உறவை திரையில் கண்டு முகம் சுளிக்கும் இந்த சமுகம், நிஜத்தில் இருப்பது தான் திரைக்கு வருகிறது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறது...இன்றுகூட 8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்று தோற்ற கோபத்தில் சொந்த மகளைக் கொன்று ரயில் தண்டவாளம் அருகில் புதைத்த தந்தையின் செய்தி ஒன்றை செய்திதாளில் கண்டேன். எனவே வக்கிரமாக உள்ளது என்பதை விட நாம் வாழும் இந்த சமுதாயத்தில் இப்படியும் பல கொடுமைகள் நடக்கிறது என்பதை திரையிட்டுக் காட்டிய கவுதம்மேனன் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது..

இன்னொரு கவனிக்கப் படவேண்டிய ஒரு சமாச்சாரம், பாடல்களுக்காகவே  பலமுறை பார்க்க தூண்டிய கவுதம்மேனன் படங்களுக்கு மத்தியில், பாடல்கள் மட்டுமல்ல , பின்னணி இசைக்கூட இல்லாமல் ஒரு படத்தை அதுவும் ஒரு த்ரில்லர் படத்தை படைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்... 

வீராவாக நடித்த வீராவின் நடிப்பு பாரட்டும்படியுள்ளது...நாயகி சமிரா படம் முழுக்க அலறியபடியே ஓடுகிறார.மீனாட்சியம்மா இரண்டாவது பாதியில் மிரள வைக்கிறார்.. பாரதி ராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' கூட இப்படத்தை ஒப்பிடமுடியாது...[யார் ஒப்பிட்டானு கேட்காதிங்க...காபி வித் கவுதம் லே கவுதம்மேனன் சொன்னார் ] அதில் கமலை வில்லத்தனமாக காண்பித்தாலும், கடைசியில் அவர் மீது பரிதாபம் தான் வரும்.. ஆனால் வீராவின்  மேல் சுத்தமாக பரிதாபம் ஏற்படவே இல்லை..மாறாக கோபம்தான் வருகிறது...தவிர 'சிகப்பு ரோஜாக்களில்' ஒரு அழகிய காதல் கதை இருந்தது. ஸ்ரீதேவியின் பாத்திரப் படைப்பிலும் ஒரு நளினம் இருந்தது...ஆனால் இதில் சமீரவிற்கு ஒன்னும் ஸ்கோப் இல்லை...
சொல்ல மறந்துட்டேனே...சில வாரங்களுக்கு முன் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் இதே படத்தைப் போன்ற குறும்படத்தை பார்த்தேன்...இதோ உங்கள் கண்களுக்கு அந்த குறும்படம்....



கண்டிப்பாக ஆங்கில சைக்கோ கொலையாளிகள் படத்துக்கு இணையாக 'நடுநிசி நாய்கள் ' சொல்ல முடியாவிட்டாலும்  தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய  சைக்கோ படங்களில் இப்படமும் முன்னணியில் இருக்கும்... இந்த படம் உங்கள ரொம்ப [இல்ல கொஞ்சம் கூட]  இம்ப்ரெஸ் பண்ணலேனா வருத்தப்படாதீங்க...தமிழ் சினிமா இல்ல, உலக சினிமாக்கு ஒரு கலைபுயல், சினிபீறங்கி விரைவில் வெளிவர உள்ளது. அவுக கண்டிப்பாக பல உன்னத கலைப் பணிகளை செய்து உங்களை உற்சாகப் படுத்துவாக...இப்போதைக்கு யார்கிட்ட அச்சிச்டன்ட்டா சேரரது என்ற குழப்பத்தில் இருப்பதால் கொஞ்சம் லேட் ஆகுது...ஆனா முடிவெடுத்துட்டா என் பேச்சே நானே கேட்க மாட்டேன்... [அயோ களு கொடுத்துட்டேனோ?]
Author: Sathish
•8:29 AM
தொடர்ச்சியாக தோல்வியை தழுவிக் கொண்டிருந்த "விஜய்" படங்கள் வரிசையில் காவலன் சற்றே வேறுபட்டாலும், பத்து வருஷத்திற்கு முன்பு வரவேண்டிய கதையை இப்போ தூசு தட்டி படமாக்கப்பட்டதாக தோன்றுகிறது....[என்னுடைய ப்ளாக் போலதான்..எப்போவோ வந்த படத்துக்கு இப்போ விமர்சனம் எழுதறேன் பாருங்க..ஹி ஹி ஹி ]ஒரே ஆறுதல் கதையே இல்லாம நடிச்ச தளபதி, பழசோ, புதுசோ இப்போ ஒரு கதை லே நடிச்சிருக்கார் என்று ரசிகர்கள் திருப்தி அடையலாம்...

ஆரம்ப காட்சிகள பார்த்து அடடா, இதுவும் பண்டல் தானோ னு தோனுச்சு எனக்கு...எடுத்தவுடன் ஒரு fight ...வடிவேலு நான் உங்க கிட்ட அசிஸ்டண்டா சேரனும் னு வரர்து [என்ன பண்ணார்னு அசிஸ்டன்ட் ...] .இதெல்லாம் பார்த்து, வடிவேலு பாணி லே ஐயோ ஐயோ னு நெனசசிட்டே இருக்கும் போது கதை மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிச்சது ... விஜய் இந்த படத்துக்கு கொஞ்சம் work பண்ணி இருக்கார்.. டிரஸ்ஸிங் லே இருந்து...எல்லாமே கொஞ்சம் ஓகே தான்... உண்மைய சொல்லப் போனால் நான் ஒரு விஜய் ரசிகன் தான்...காலேஜ் படிக்கும் போது எந்த ஒரு கல்ச்சுரல்ஸ் என்றாலும் தளபதி விஜய் பாட்டுக்கு 'தலைவாசல்' விஜய் மாதிரி  ஆடி [துக் கருமம் கருமம்] கலக்கிய நாட்கள் எத்தனை ! எத்தனை !!  ஆனால் நல்ல படம் கொடுக்காவிட்டாலும் நான் ரசிகனாக இருப்பேன் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் ரசிகனாக இருக்க நான் விரும்பவில்லை...[ஆமா ! இதப் பார்த்து விஜய் தேம்பி தேம்பி அழப் போறாரு...போடாங்ங்ங்ங்..] ஆனால், இந்த படம் மீண்டும் என்னை விஜய் ரசிகனாக மாற்றத்தான் செய்கிறது... அடுத்து வரும் படங்களிலும் சற்றே கவனமான் செயல் பட்டால் விஜய் மீண்டும் இழந்த இடத்தைப் பெறலாம்...[ டேய் டேய்...நீ ரொம்ப பேசற...சாரி எழுதுற...உன்ன வச்சித் தான் விஜய் வாழக்கை ஓட்ற மாதிரி பில்டப் கொடுக்கற...அடங்குடா...] 

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் விஜய் பேட்டி பல டிவிகளில் ஒளிபரப்பானது ( சன் டிவி தவிர )...அதில காவலனுக்கு ஓவரான பில்ட்அப்  கொடுத்தாங்களோ னு தோணுது... என்னை பொறுத்த மட்டில் வித்யாசம் என்று சொல்வதற்கு ஒன்னும் இல்ல...விஜய் மீண்டும் ஜெயிக்க கையாண்ட உத்தி கொஞ்சம் பழசு தான் ...[இப்படி பழைய பாணி லே பிரவேசிக்கணும்னா  நம்ம சங்கவி, சுவாதி இவங்கெல்ல கூட்டி வந்திருக்கலாமே!!! ] எனக்கெனவோ 'காலமெல்லாம் காதல் வாழக - முரளி ' படத்த பார்த்தா மாதிரியே இருக்கு முதல் பாதி...

மலையாள படம் ரீமேக் என்பதை மீடியா சொல்லாமல் இருந்திருந்தாலும், மலையாளப் படத்தோட  டச்சை  பல இடங்களில் கண்டு பிடிச்சிருக்கலாம்... இந்த படத்தோட இன்னொரு ஹை லைட்  வடிவேல் காமெடி!!! ரசிக்கும் படியாதான் இருந்தது... படம் முழுக்க இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீரவேண்டும் என்ற விஜயின் ஆதங்கம் தெரிகிறது...பஞ்ச் டயலாக் இல்லாம, சாதரணமாக நடித்த விஜய்க்கு ஒரு சபாஷ்...படத்துல பஞ்ச் இருக்கலாம், தப்பில்லை...பஞ்ச்க்காக  செலவு பண்ணி படம் எடுக்கற வித்தையே மாற்றினாலே போதும், தல சாரி தளபதி நீங்க ஜெயிபீங்க....

படத்துக்கு முன்ன பின்ன அரசியல் என்ட்ரி லே அடக்கி வாசிச்ச விஜய் இப்போ மீண்டும்  அரசியல் பற்றியே பேச்சுகளில் அடிபடறது எனக்கென்னவோ சரியா படல... வாயத்தறந்து முழுசா ஒரு லைன் கூட அவரால பேச முடிலே....தெரிலே...அவர் பிரச்சாரத்துக்கு தவிக்கப் போறது, பிரசவத்துக்கு தவிக்கற மாதிர் தான் இருக்கும் நெனைக்கிறேன்... ... என்ன நடக்குது னு  பார்போம்...ஆனா எனக்கெனவோ விஜய் சனியன தூக்கி பனியன் லே போட்டுக்கிறார்  னு தோணுது... காவலனுக்கு காலம் தான் பதில் சொல்லும்.