Author: Sathish
•8:30 AM
இந்நாட்களில்  அலுவலகப்பணி முடித்து சற்றே தாமதமாக வீட்டிற்கு [ஹோட்டல் தான் என் வீடு client   place இல்... ] வருகிறேன்... மீண்டும் ஒரு ப்ராஜெக்ட் அட்லாண்டாவில்...அனால் இம்முறை வேற client ... பட் அதே ஆணி.... [ என் அட்லாண்டாவில் ஆணி பதிவை படித்தவர்களுக்கு என் வலி தெரியும்....] கூட பணிபுரியும் சகபணியாளர் (70 வயது வாலிபர்...) அநியாயத்துக்கு வேலை வாங்குவார்... மனுஷன் ஹோட்டல் சாப்பிடும் போதும் Tissue பேப்பர் லே கூட requirements எழுதுவார்...[என்ன கொடுமை சார் இது.....]

வழக்கத்துக்கு மாறா, இன்று அலுவலகத்தில், ஒரு ஆணியும் புடுங்காததால் சீக்கிரம் வீட்டை சென்றடைந்தேன்...கொஞ்சம் களைப்பு என் கண்ணை கட்டிய நிலையில், கட்டிலின் அருகிலிருந்த Boss head set  என் கண்ணில் பட்டது...அமெரிக்காவில் நான் மிகவும் ரசித்து வாங்கிய பொருட்களில் இதுவும் ஒன்று...Noice Cancellation  உடன் சின்ன சின்ன ஒலிகளையும் துள்ளியமாக செவிகளுக்கு கொண்டு செல்லும் என் backup காதலி!!! காதில் பொருத்திய அடுத்த கணம், என்னை மிகவும் நெருடிய பாடலை கேட்க தோன்றிய என் மனம், என் விரல்களுக்கு உத்தரவிட,IPhone ல் பாட்டை போட்டது விரல்....

15 நொடிகள் வீணை என்னை மூழ்கடித்தது ...இந்த ஓசைக்கு நிகர் ஏதும் உள்ளதோ என்றெண்ணி முடிக்கும் முன், சுதா தன்யாசி ராகத்தில் P. சுசீலாவின் குரல் வீணை ஓசையை வெல்லும் வகையில்...

"மாலை பொழுதின் மயக்கத்திலே நான்.... கனவு கண்டேன் தோழி.....
     மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன்  தோழி? ....."

என்று பாடல் ஒலிக்க, சுசீலா அவர்களின் குரலும், பாடிய விதமும் இனம் புரியாத ஒருவித அழுத்தம்... என் மனதில்....

பாடலின் வரிகள்....chance இல்ல.... சத்தியமா, கண்ணதாசன் என்ற உன்னத கலைஞனுக்கு நிகர் எவரும் இலர் என்பதனை யாரும் மறுக்கவே முடியாது...ஒவ்வொரு வரியிலும் வார்த்தைகளை அல்ல வைரங்களை தொடுத்திருக்கிறார் கண்ணதாசன்... ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு யோசிக்க முடியும்?

"மனம் முடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி...
     மங்கை என் கையில் குங்குமம் தந்தார்...மாலை இட்டார் தோழி...
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி...
     அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்துவிட்டார் தோழி...மறந்துவிட்டார் தோழி..."

" கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி....
    கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
 இளமை எல்லாம் வெறும் கனவு மையம் இதில் மறைந்தது சில காலம்...
    தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்.....
   மயங்குது எதிர்காலம்....." 

 ஒரு இளம் விதவையின் குமுறலை இதை விட எடுத்துக் காண்பிக்க முடியுமா? இந்த வைரவரிகளை வித்திட்ட கண்ணதாசன் அவர்களின் மறைவுக்கு மீண்டும் வருத்தப்பட்டேன் அக்கணம்..

பாடல் முடிந்து 15 வினாடிகளாவது இருக்கும்.... இன்னமும் மூடியிருந்த என் கண்களை  திறக்கத்   தோன்றவில்லை... என்னை முழுவதும் மறந்து பரவச நிலையில் இருந்த போது [என்ன நித்யானந்தா மாதிரி பேசறேன்? ] "இஸ்க்கு ...இஸ்க்கு..." என்று ஒரு சத்தம் கேட்டது...வேறொன்றும் இல்லை அது என் phone ...நண்பர் பிரதீப் 'Viber" ல் அழைக்க, எடுத்து 'வணக்கம் தலைவரே ! எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" என்று ஆரம்பித்தேன்..

முன்னதாக பிரதீப் பற்றி கண்டிப்பாக நான் சொல்லியே ஆக வேண்டும்... பிரதீப் தான் என்னை முதன்முதலில் பதிவுலகிற்கு அறிமுகம் செய்து எழுதுங்கள் என்று தூண்டியவர்...[அவனா நீ?....] நல்ல படைப்பாளி..பல சிறுகதைகள், சுவாரசியமான சம்பவங்கள் என்று எழுதி தள்ளுவார்...தவிர, எங்களுக்குள் அடிக்கடி கருத்துப் பரிமானகள் நிறையவே இருக்கும்... போனவாரம் தான் அவருக்கு "viber " என்று ஒரு இலவச app  இருக்கு சொன்னேன்...பாருங்க அதுக்குள்ளே இலவசமா கொடுத்தவன அழ வைக்கிற அளவுக்கு உபயோகப்படுத்துரத.... எங்க உரையாடலின் துவக்கம் கண்ணதாசனின் பாடலா போச்சு..."நல்ல நேரத்துல அழைச்சீங்க பிரதீப்..இப்போ தான் ஒரு அட்டகாசமான பாட்ட ரசித்துக் கொண்டிருந்தேன்.." என்றேன் நான்...
"என்ன அசல் படத்துல வர "டோட்டடோய் ...டோட்டடோய்..." பாட்டா என்றான் பிரதீப்..."மவன நேர்ல மட்டும் இப்படி சொல்லி இருந்த, பக்கத்துலேயே இருந்திருந்தாலும்,  விஜயகாந்த் மாதிரி  'chair, மேஜை, சுவர், ceiling  என்று அனைத்திலும் ஏறி உன் தவடைலேயே அடிப்பேன்.." என்றேன் கடுப்பாக..."பாக்ய லட்சுமி" படத்திலிருந்து "மாலை பொழுதின் மயக்கத்திலே..." பாட்டு கேட்கிற என்னைப் பார்த்து...என்று சொல்லி முடிப்பதற்குள்..."செம பாட்டு டா அது....MSV  தானே இசை" என்றான்...  MSV மட்டும் இல்ல....விஸ்வநாதன் ராமமூர்த்தி ன்னு சொல்லு...அவங்க ரெண்டு பேரும் நட்போடு இருந்த சமயம் பின்னி, பெசஞ்சி...பேத்தெடுத்த பாடல் தான் அது..."  அவங்களுக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது...ஆனா அவங்க பிரிஞ்சதுல நாம நெறைய நல்ல நல்ல பாட்ட விட்டிருக்கோம்  என்று தோணுது..."உண்மை தான்....அப்படி யோசிக்கையில் இளையராஜா - வைரமுத்து பிரிவு தான் எனக்கு ரொம்ப சோகத்தைக் கொடுக்குது..." என்றான் பிரதீப்..."100% நீ சொல்வது சரிதான்...சரி விடு பிரதீப்...ஆமா உனக்கு பிடித்த பாடல் என்ன?" என்று கேட்டேன்... "நாயகன் படத்தில் புலமைப்பித்தன் எழுதி இளையராஜா இசையமைத்த - நீயொரு காதல் சங்கீதம்" என்றான்...மேலும் தொடர்ந்தான் பிரதீப்...

தமிழ் சினிமாவில், இசையில், மொழியில், காட்சியமைப்பில் இந்த பாடல் ஒரு கவிதை என்றே எனக்கு தோன்றுகிறது... இந்த படலை நான் முதன் முதலில் தூர்தஷனில் வாரம் அரைமணி நேரம் மட்டும் திரைப்பாடல்களைக் காட்டும் ‘ஒலியும் ஒளியுமி’ல் பார்த்ததாய் ஞாபகம் .... நான் ஐந்தாவதோஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ....பாடலை முதலில் பார்க்கும்போதே ஒரு மாதிரி இருந்தது. அது ஒரு தமிழ் படம் மாதிரியே இல்லை. கமலுக்கு மீசை இல்லை, சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டை போட்டிருக்கிறார், காட்சிகளில் வரும் இடம் பழக்கமானதாய் இல்லை. அடிக்கடி இரண்டு பேர் எங்கேயோ நடந்து போய் கொண்டே இருப்பார்கள். கமல் சரண்யாவை அடிக்கடி கட்டிப் பிடித்துக் கொள்வார்...."நிறுத்து நிறுத்து ....ஐந்தாவதோஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது அதென்ன சரண்யா மங்கம்மா கை வைத்த பாவாடை சட்டைய ரசிச்சிருக்க...கமல் கட்டிப்பிடிக்கிற காட்சியே உன்னிப்பா கவனிச்சிருக்க? " என்றேன் விளையாட்டாய்..."டேய் ...அடங்குடா ...என்று கூறி மேலும் தொடர்ந்தான் பிரதீப்.." இசையை பற்றி ஒன்றும் தெரியாதவனும், இந்த பாடலில் லயித்துவிடுவான்...ராஜாவின் இசை மேதைமைக்கு இந்த ஒரு பாடல் போதும்.  பாடல், ஒரு சீரான வயலின்களின் பிரவாகத்தோடு ஆரம்பிக்கிறது. அதன் இசை, காட்டாறு போல பொங்கி வரும் வெள்ளம் ஒன்று ஒரு சின்ன மலை முகடுகளில் சிக்கியது போல் சிக்கி நெளிந்து, குழைந்து, வளைந்து சென்று முடிகிறது. அது முடிந்த இடத்தில் ஒரு தபலா ஆரம்பிக்கிறது. அந்தத் தபலாவின் இசை ஒரு அழகிய சுகமான வீணையின் இசையுடன்  இணைகிறது. ஆஹா, அந்த இசையில் என்ன ஒரு ஆனந்தம். இதை விட ஒரு புதிய உறவின் தொடக்கத்தை எப்படி விளக்க முடியும்?" 

மனோவின் குரல் வழக்கத்தைக் காட்டிலும் கணம் கூடி வழிகிறது. அவருடன் சித்ராவின் எளிமையான இனிமையான குரல் ஒன்று கலக்கிறது. இந்தப் பாடலை கண் மூடிக் கேட்டாலும் சுகம், கண் திறந்து காட்சிகளை பார்த்தாலும் சுகம். Preluds, Interluds மனதை கொள்ளை கொண்டு விடும். Interlud ல் ஒற்றை வயலினுடன் புல்லாங்குழலை இணைத்து ஒரு இசைக் கொண்டாட்டமே நடத்தி  இருப்பார் ராஜா. வீணையும், தபலாவும், அந்த இருவரின் ஜாலம் முடியும் வரை காத்திருந்து சமத்தாய் வந்து சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து கொள்வதை போல் இருக்கும்

பிரதீப்பின் ரசனை கண்டு முதலில் வியந்தேன் நான்..... புரியாத விஷயமெல்லாம் பேசறான்..Prelud  என்கிறான்...interluds என்கிறான் ....எனக்கு தெரியாது அன்று அடிச்சிவிடுரானோ? பயபுள்ள பாட்டையும் இல்ல ரசிச்சிருக்கான்....இவன பொய் தப்ப நெனச்சிடோமே" என்று தோணியது...



என் நிசப்தத்தை கவனித பிரதீப், "என்னடா இருக்கியா? " என்றான் ...." ஆமாண்டா ...நீ மேல போ" என்றேன் நான்... சிரித்துக்கொண்டே தொடர்ந்தான் பிரதீப்..."இந்தப் பாட்டின் காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும். பாடலின் ஆரம்பத்தில் வீணை தொடங்கும் இடத்தில் திருமணம் ஆகி புதிதாய் வரும் தம்பதியரை வரவேற்க அந்த வட்டாரமே கூடி இருக்கிறது. அது ஒரு மங்கிய மாலை. அப்போது தான் வீடுகளில் விளக்குகள் எரியத் துவங்கி இருக்கின்றன. அந்தக் காட்சியே வேறு ஒரு வடிவத்தையும், மனோநிலையையும் அளிப்பதாய் இருக்கிறது. அதுவரை தமிழ் சினிமா அப்படி ஒரு காட்சியை பார்த்ததில்லை என்றே எனக்குப் படுகிறது. அப்படி ஒரு மங்கிய மாலை வேளையில் அவர்களின் உறவு, அவர்களின் வாழ்வு, அந்த நாயகனின் முதுகில் வேர்வைத் துளியுடன் தொடங்குகிறது. [அடடா...இவன் நல்லவனா கெட்டவனா....அநியாயத்துக்கு கவனிக்கிறானே ???] அதோடு பாடலும் துவங்குகிறது.

இந்தப் பாடலின் பாடல் வரிகளும் நானும் இங்கு இருக்கிறேன் என்று எந்த இடத்திலும் வெளியில் துருத்திக் கொண்டு நிற்கவில்லை! அத்தனை இயல்பாய், எதார்த்தமாய், இசைக்கும், காட்சிகளுக்கும் வழி விட்டு ஒரு தெளிந்த நீரோட்டம் போல நிற்கிறது

"மணல் வெளி யாவும் இருவரின் பாதம், நடந்ததை காற்றே மறைக்காதே!" 
அருமையான வரி..

"தினமும் பயணம் தொடரட்டுமே...." வரியில் வரும் காட்சியை பாரு... என்ன ஒரு ஃபிரேம். என்ன ஒரு டோன்! என்ன ஒரு பீல்! கணவனுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அவளின் முகம் என்னவோ செய்கிறது.  என்ன உன்னதமான இசையை கொடுத்தாலும், ராஜாவின் பாடல்களை கந்தரகோலமாய் படமாக்கிக் கொண்டிருந்த பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குனர்களின் மத்தியில் ராஜாவின் இசைக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் காட்சிப்படுத்திய இயக்குனர் மணிரத்னத்தை பாராட்டியே ஆக வேண்டும்! என்ன சொல்ற? என்றான் பிரதீப்....இதற்க்கு மேல் நான் சொல்ல என்னடா விட்டு வைச்ச என்றேன் சிரித்துக்கொண்டே...

இந்த இரண்டு பாடலுக்கும்  உள்ள வித்தியாசத்தை யோசித்துப் பார்க்கையில், நான் ரசித்த பாடல்...ஒரு உறவு தொடரும் முன் முடிந்துவிட்ட  ஒரு இளம் விதவை சோகத்தை, குமுறலை பற்றியது ... என் நண்பனின் ரசனை, புதிதாய் தொடங்கும் ஒரு உறவை, அதன் ஆனந்தத்தை பற்றியது...இரண்டும் வேறு வேறு பரிமாணங்கள், கருத்துக்கள் ஆனால் இரண்டுமே  "மாயக் கம்பளங்கள்"! எத்தனை சுலபமாய் நம்மை நம் கடந்த காலத்துக்கு இட்டுச் செல்கின்றன! 
Author: Sathish
•7:58 PM
வெகு நாட்களுக்குப்  பிறகு பல தமிழ் நெஞ்சங்களை ஒரு கூரைக்குள் பார்த்த திருப்தி 04/26/2014 (சனிக்கிழமை ) அன்று கிடைத்தது...அமெரிக்கா வந்த புதிதில் ஒரு இந்தியனை பார்த்தாலும் நம் உறவினரை பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றி மறையும்...நாளடைவில் பல இந்தியர்களை ஆங்காங்கே காண்பதினால் என்னவோ அவ்வுணர்வு சாதரணமாகி விட்டது.. ஆனால் தமிழர்களை காண நேர்கையில் இன்னமும் உடன்பிறந்தாரை கண்ட சந்தோஷம் தான் .... இந்தியன் என்ற உணர்வு இருப்பினும், தமிழன் என்ற உணர்வு சற்றே மேலோங்கி இருக்கத்தான் செய்கிறது...

நான் இருந்த இடம் , வள்ளுவன் தமிழ் மையம் மூன்றாம் ஆண்டு விழா  கொண்டாட்டம் அரங்கேறிய அனடெல் மேல் நிலை பள்ளி வளாகம். விழாவில் நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில்
குழந்தைகளும் பெற்றோர்களும் கூடி இருந்தனர். நம் கலாச்சார உடை அணிந்து, ஆங்கங்கே தமிழ் ஒலிக்க, "ஆட்டோகிராப்"  படப்பாடல் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் கதாநாயகியை சுற்றி சுற்றி வருவது போல் எனைச் சுற்றி வந்தன.... 

அறிவித்திருந்தபடி விழா சரியாக மூன்று மணியளவில் தமிழ்த் தாய் வாழ்த்து முழங்க துடங்கியது. பின்னர், வேல்முருகன் பெரியசாமி -வள்ளுவன் தமிழ் மையத்தின் தலைவர் வரவேற்புரை நல்க ஆடல், பாடல் என விழா கலைக்கட்ட ஆரம்பித்தது. குழந்தைகள் பாடிய அஞ்சலி அஞ்சலி - பாடல் உண்மையாகவே என்னை வியப்பில் ஆழ்த்தியது.. பலரால் அது karaoke என நம்ப முடியவில்லை. அவ்வளவு அருமையாக ஸ்ருதி தப்பாமல் பாடிய விதம் கண்டிப்பாக அனைவரின் உள்ளத்தையும்  கொள்ளைக் கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  முன்னதாக விழாவை முன்னிட்டு பல நிலைகளில் உதவிக்கு தன்னார்வாளர்கள்  தேவை என்று  தமிழ் மையத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது;  நான் விழா  அரங்க பொறுப்பாளர் உதவிக்கு என் பெயரை பதிவு செய்திருந்தேன். (இந்த மாதிரி நல்ல விஷயம் கூட நீ பண்ணுவியா ???) என் வேலை, விழா அரங்கத்தில் திண்பண்டங்களை எடுத்து செல்வதை அனுமதிக்காமல் இருத்தல்,
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான வசதிகளை அரங்கத்தினுள் செய்தல் என சின்ன சின்ன அலுவல்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன்...உண்மையில் அதில் உள்ள கடினம் அங்கு தான் உணர்ந்தேன்..சின்ன குழந்தைகள் கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு அரங்கத்தினுள் செல்ல முர்ப்படுகையில், தடுத்து நிறுத்தும் போது  பாவமாக பார்க்கும் அதன் கண்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம் ங்க .....பல குழந்தைகள் அந்த தின்பண்டங்களை"இந்தாங்க நீங்க வச்சிக்கோங்க" என்று என் கிட்ட கொடுக்கும்...அடப்பாவி சின்ன பசங்களோட பிஸ்கட் புடுங்கி தின்றான்னு அவங்க பெற்றோர் நினைக்கப் போறாங்கன்னு   மனசு பத பதைக்கும் .... இந்த குட்டீஸ் கூட்டத்துல ஒன்னு என் கிட்ட வந்து விவகாரமா பார்த்து "உள்ளே போய் சாப்பிட்டதானே தப்பு...நான் பாக்கெட் பிரிக்கவே இல்லயே.. " என்று கேட்டது. [எம காதகப் பைய...வெஷம்...வெஷம்...வெஷம்...அம்புட்டும் வெஷம்... என வடிவேல் பாணியில் தலையில் கொட்ட நினைத்தது என் மனம்...  ] நான் படும் பாட்டைப் பார்த்து என் மனைவி தூரத்தில் நின்று ரசி[சிரி] த்துக்கொண்டிருந்தாள்.. 

 தமிழ் - தமிழன் இரண்டுக்குமே ஒரு தனித்துவம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது இந்த ஆண்டு விழா கொண்டாட்டம். நான் தமிழனாக இருப்பதால் இதனை சொல்லவில்லை... அன்னியனாய் இருந்திருந்தாலும் இதைத்தான்  சொல்லி இருப்பேன்... மொழி ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடு என்பதனை அங்கு நடைப் பெற்ற கலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது....குழந்தைகள் ஒன்று கூடி ஆடிய  நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் மாறுவேட நிகழ்ச்சி அனைத்திலும் தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மூதாதையர்கள் என்று அனைத்திலும் தமிழ் பறைச்சாற்றியிறுந்தது;  விழா  முழுவதும் எம்மவரின் உணர்வும், நளினமும், எளிமையும்  இருந்தது... குறிப்பாக குழந்தைகளின் "காவடி சிந்து" கண்டோர் நெஞ்சை கவர்ந்தது.

சிறப்பு விருந்தினராய் வந்து சிறப்பித்த Dr. ராஜ் S. பாபு அவர்கள் குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கிப்
பாராட்டினார். மேலும், அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் திடீர் என 2500 டாலர் காசோலையும் வழங்க, வேல்முருகன் அதை பெற்றுக்கொண்டார். குழந்தைகள் அரங்கேற்றியே வள்ளல் தேவை நாடகம் Dr. ராஜ் அவர்களை நினைவு கூர்ந்தது. இறுதியில் பாஸ்கர் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி நல்ல படி நிறைவு பெற்றது.  

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சுழலிலும் தமிழ் நிலைத்திருந்தது...
இருப்பினும், சில பெற்றோர்கள் இங்கும் அந்நிய மொழியை  ( ஆங்கிலத்தை ) தன்  குழந்தைகளிடம் பயன் படுத்தாமல் இல்லை என்பது ஒரு சிறு குறை... திருக்குறளை  ஆங்கிலத்தில் எழுதி "தங்க்லீஷ் -இல் " மேடையில் படித்த குழந்தைகளையும் காண முடிந்தது; தன் பிள்ளை தமிழில் பேசிக் கொண்டிருக்கும் போது "Now she is speaking tamil; Earlier it was so tough for her..Thanks to you and VTA" என்று சொன்ன பெற்றோரின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட கை துடித்தது... முதலில்  இவங்களை  நிலை 1 லே சேர்ந்து தமிழ்  கற்றுக் கொடுக்கனும் என என்று மனதில் நினைக்காமல் இல்லை...  வந்திருந்த கூட்டத்திலே வெகு சிலரே இவ்வண்ணம் இருப்பதை பார்த்தேன்.. அந்த விகிதம் மிக  மிகக் குறைவு தான்; இருப்பினும் நான் தோள் தட்டிக்கொள்ளவில்லை, என்னைச் சமாதனப் படுத்திக்கொள்ளவில்லை.. அமெரிக்காவில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்னும் கடினமன்று...பள்ளியில், ஏனைய குழந்தைகளிடம் விளையாடும் பொழுது என்று பல சூழலில் ஆங்கிலம் மட்டுமே பேச நேரிடுகிறது..அதனால் வீட்டில் தமிழில் மட்டுமே பேசினால் குழந்தைகளிடத்து தமிழ் மென்மேலும் வளரும் என்பதில் ஐயம் இல்லை...
Author: Sathish
•4:42 PM
கொஞ்ச நாட்களாகவே கம்பரையும், வள்ளுவரையும் யாரோ என் மேல் ஏவி விட்டது போல் ஒரே தமிழ் பற்று பீறிட்டிருந்த சமயம்.... ஞாயிறு மதியம் என் மனைவி சமையலறையில் பரபரப்பா எதையோ செய்து கொண்டிருக்கும் நேரம்...ரைஸ் குக்கர் தன்னுள் அடக்கி வைத்திருந்த கோபத்தை வெறித்தனமாக கூச்சலிட்டு அழைக்க " அந்த குக்கரை கொஞ்சம் அடக்கி விடுங்களேன்;" என்று குரல் கொடுத்தாள் என் மனைவி பாத்திரம் துலக்கிக் கொண்டு.... கூப்பிட்ட வேகத்தில் போகவில்லை என்றால், கூச்சலிடுவது குக்கர் மட்டுமிருக்காது என்பதை நன்கு உண்டர்ந்த நான் சமையலறை நோக்கி விரைந்தேன்... அடுப்பு அருகே சென்ற நான் அமைதிகாத்தேன் ஒரு நிமிடம்..."பிரியா குக்கருக்கு தமிழ் லே என்ன?" என்று கேட்ட அடுத்த கணம், ரட்சகன் படத்தில் நாகார்ஜுன் கையில் ஏறும் நரம்பு போல் என் மனைவி கையில் முறுக்கேறுவதைப் பார்த்து, உடனே அடக்கினேன்...குக்கரை....

"ஏம்பா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது? யாரு உங்கள இப்படி கேட்க வைக்கறாங்க?" என்றாள் சிரித்துக்கொண்டே...விளையாட்டாய்  அந்த உரையாடல் முடிந்தாலும், அன்று முழுவதும் குக்கருக்கு தமிழ் லே என்ன தான் மொழி பெயர்ப்பு என்ற எண்ணம்  என்னுள் ஓடிக்கொண்டிருந்தது. எனக்கும் தெரியவில்லை என் மனைவிக்கும் தெரியவில்லை...

யோசித்துப் பார்க்கையில்  பல விஷயங்கள்,.ரொம்பவும் நடைமுறையில், புழக்கத்தில் இருக்கும் / இருந்த  வார்த்தைகளாகட்டும்,அல்லது பழக்க வழக்கங்களாகட்டும்,   பல தகவல்கள் நம்மை விட்டு விலகிக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அதுவும் என்னைப்  போல அயல் நாட்டில் வந்து வாழ்போர் இடுத்து கேட்கவே வேண்டாம்...

மொழி என்பது நாம் வாழும் இடம், சமூகம் மற்றும் தொழில் இதைப் பொறுத்து வேறு படுகிறது. பல இனத்தார் தனக்கெனத் தனி  பேச்சு வழக்குகள் கொண்டிருந்தனர்.. அதனையே நாம் வட்டார வழுக்கு என்கின்றோம்... சமீபத்தில் பார்த்த "கடல்" படத்தில் கையாண்ட வார்த்தைகளை நான் அவசியம் இங்கு பதிவு செய்யவேண்டும் ..."என்ன மக்(க)ளே" என்பது நாகர்க்கோவில் மற்றும் அதனை ஒட்டிய ஊர்களில் சகஜமாக பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று.... "கடல்" பார்த்த எத்தனை பேருக்கு அவை புரிந்திருக்கும் / தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...எங்க ஊர் பக்கம் போகும்போது நான் தமிழ் தான் பேசுகிறேன் என்று நம்ப பலர் தயாராக  இல்லை ... சென்னையில் பிறந்து வளர்ந்ததால் 'சென்னை தமிழ்' எம்மவர்களின் வாயில் சிக்கிச் சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது... யோசித்துப் பார்க்கையில் வட்டார வழக்கு என்பதை விட்டு எவ்வளவு தூரம் வந்து விட்டோம் என்று மனதில் தோன்ற, அதை தேட ஆரம்பித்தது என் மனம்...

முதல் கட்டத் தேடலில் தமிழின் வட்டார மொழி வழக்குகள் பெரும்பாலும் ஒலிகளில் மட்டுமே மாறுவதை காண முடிந்தது...உதாரணமாக "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி  பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் பகுதிகளில் "இங்கை" என்றும், மட்டக்களப்பில் சில பகுதிகளில் "இஞ்ஞ" என்றும் வழங்கப்படுகின்றது....மட்டக்களப்பு "இஞ்ஞ" வை ஒரு பக்க மூக்கை மூடி சொல்லிப் பாருங்கள் "மலையாளம்" வந்துவிடும்...[ அடடே என்ன ஒரு ஆராய்ச்சி!!!]

வட்டார வழக்கு பலசமயம் கொச்சைப்பேச்சு என்று எண்ணப்படுகிறது. இதுபிழை. ஒரு தனிமனிதன் மொழியை சிதைத்துப்பேசினால் அது கொச்சை, ஒரு பகுதியின் மக்கள் முழுக்க அவ்வாறு பேசுவார்களென்றால் அது வட்டார வழக்கு.. (பல பேர் சேர்ந்து செய்தால் தப்பு, தப்பாகாது என்ற அறிய தத்துவம் போல் ....)

என் கல்லூரி நண்பன் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவன்...அவன் பேசுவதை சத்தியமாக யாராலும்  வட்டார வழக்கு என்று வகுக்க முடியாது...வேண்டுமென்றால் நான் அதனை "லூஸ்மோகன் வழக்கு" என்று சொல்வேன்... அப்புறம் என்பதை "அப்பாலிக்கா"  என்பான்... பெரும்பாலான சொற்களை குக்கரில் போட்டு 4 -5 விசில் விட்டது  போல் குழைத்து பேசுவான்... [மீண்டும் குக்கரா? அதுக்கு தமிழ் லே என்ன? யாரவது சொல்லுங்களேன்...ஹி ஹி ஹி ... 'சமைக்கலம்' என்றார் என் 'இன்டர்நெட் புலி' நண்பர்  ஒருவர்...] மொடாக் குடிகாரர்களுக்கு என்று தனியாக பாஷை இருப்பதாகவும், அவை பெரும்பாலும் 'ழ'கரத்தில் இருக்குமென்றும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா கூறியது நினைவுக்கு வருகிறது.... 

வட்டார வழக்கில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு பகுதியின் இயல்பான உறுப்பினரால் இயல்பாக கருதப்படும் அதே விஷயம் அல்லது சொற்கள் பிறரால் விபரீதமாக உணரப்படும். உதாரணமாக,  மயிர் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.. மயிர் என்றால் செம்மொழியில் முடி. தெரியாத்தனமா கூட குமரி மாவட்டம் (பெரும்பாலும் என்ன மாவட்டங்களிலும்) போய் மயிர் என்று சொல்லிடாதீங்க...மயிர் மற்றவர்களை திட்ட மட்டுமே பயன் படுத்துற சொல்லாகிவிட்டது....


வட்டார வழக்குகளை நூல் பிடித்தவாறே சில தூரம் செல்லலாம் என்று போனால் தலை சுத்துதுடா சாமி...அப்படியா என்றா கேட்கறீங்க? சரி... என் கை பிடிச்சு வாங்க...கொஞ்ச தூரம் போய்  பார்ப்போம்... தூயதமிழில், முடி என்றால் மகுடம். மகுடம் என்றால் நெல்லைவழக்கில் குடம் போலிருக்கும் ஒருவகை மேளம். இதே மேளத்தை குமரி மக்கள் களேபரம் என்பார்கள்... சம்ஸ்கிருதம் பேசுபோறிடத்து மேளம் என்றால் கூந்தல் என்று அர்த்தம்... கூந்தல் என்றால் குமரி வட்டாரவழக்கில் ஆடிமாத மழைமூட்டம். ஆனால் நெல்லையில் அதற்குப் பனைநுங்கு என்று பெயர்…நுங்குதல் என்றால் குமரியில் அடிபின்னுதல். பின்னுவது என்றால் மையத்தமிழ்நாட்டில் முடைதல். முடை என்றால் பணம் இல்லை என்கிறது  மதுரை வழக்கு... இப்போ சொல்லுங்க தலை சுத்துதா இல்லையா?

நாகர்கோவில் பக்கம் 'சுண்டு' என்றால் உதடு, சக்கை என்றால் பலாப்பழம்...சென்னை வாசியான எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா தோணுது...சிலசமயம் நாகை மக்கள் 'முடிஞ்சு', 'வரட்டு', 'இருக்கட்டு '  என்றெல்லாம் பேசும்போது 'ஐயா! கடைசியில் இன்னும் ஒரு எழுத்து இருக்கே' என்று சொல்ல தோன்றும் ....

நெல்லை மாவட்டதிலிருந்து நெறைய பசங்க என் கூட படிச்சாங்க...அவங்க வட்டார பாஷை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... சென்னை லே 'என்னடா' என்னப்பா' என்பது அங்கே 'என்னல', 'என்ன மக்கா'  என்றாகிறது...அது போக வார்த்தைகளின் கடைசியில் 'டே' சேர்ப்பதும் அங்கு சகஜம் ...உதாரணமாக 'வருதுடே' 'போகுதுடே' என்று சொல்லும் போது எக்ஸ்ட்ரா 'டே' ஒருவித உரிமையை, நட்பை குறிக்கிறது...[அடடே!!!] 'நீ கூட ஒத்தையிலே நிக்கறடே....' என்ற வைரமுத்துவின் கடல் பாடல் வரிகள் ஒரு எடுத்துக்காட்டு...

 வட்டார வழக்குத் தேடுதல் வேட்டையில், பல இடுகைகளில், வலையுலகில் பல தகவல்களை காண முடிந்தது... தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் வாழும் மக்கள் தான் பேசும் மொழியே தமிழ் என்றும், மற்றன தமிழே அல்ல  என்று கருதுகின்றனர் ...  எம்பளது  என்று கூறிப் பழகியே தஞ்சாவூர் மக்கள் "எண்பது" என்று சொல்பவர்களை நகைப்பர்கள். அவ்வாறே, திருநெல்வேலியை திண்ணவேலி என்று சொல்லும் அன்னியர் மொழிவளமில்லாதவர்கள் என்பது நெல்லையின் நம்பிக்கை. ஊர் சார்ந்து மட்டுமல்லாது, வட்டார வழக்கு சாதி சார்ந்தும், மதம் சார்ந்தும் மாறுபடுகிறது. உடம்பெங்கும் இதயத்துடிப்பு முக்கியமானாதாக இருப்பினும், மணிக்கட்டில் மிளிரும் நாடித்துடிப்பு போல வட்டாரவழக்கு என்பது  தனித்து, சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறது. அதில் நுண்ணிய பொருள்வேறுபாடுகளைப் பார்ப்பவர்கள் வட்டாரவழக்கு என்பதின் பெருமையை உதாசினப்படுத்த மாட்டார்கள்...

ஆராய்ந்து பார்த்தால் வட்டார வழக்கின் ஆழத்தை வரையறை செய்வதில் ஆய்வாளர் நடுவே கடுமையான விவாதமாக உருவெடுத்து வருகிறது... மனைவியர் கணவனை அழைக்கும் வட்டார வழக்குச் சொற்களை சேகரித்த ஞா.ஸ்டீபன் அவர்கள் இஞ்சேருங்க, ஏங்க, ஏனுங்க, யானுங்க, பாருங்க, இவியளே, கேட்டேளா போன்ற நானூறுக்கும் மேற்பட்ட சொற்களைப் பட்டியல் போட்டிருக்கிறார். 

 பிழைப்புக்காக அயல்நாட்டில் பணிபுரியும் நாம், வட்டார வழக்கை விடுத்து வெகுதூரம் செல்கிறோம். வட்டார வழக்கு தமிழின் சிறப்பம்சம். நம் மண்ணின் மணம்  வீச வட்டார வழக்கு பெரும் பங்கு வகிக்கிறது என்பதனை கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது...நம் குழந்தைகள் நம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது... தாய் மொழியல்லாது பிற மொழிகளை ஆர்வமாக கற்ப்போம்; தவறில்லை..ஆனால் தனித்துவம் வாய்ந்த நம் வட்டார வழக்கினை தவறாது உபயோகிப்போம்... இல்லையேல் வருங்காலம் நம் மொழியின் அடையாளத்தை 'இறந்தகாலம்' ஆக்கிவிடும்....என்று எழுதி பதிவை முடிக்கும் பொது, எங்கிருந்தோ 'இஞ்சேருங்க' என்று ஒரு குரல்...கையில் காப்பியுடன் பிரியா...' என்ன சொன்ன? என்ன சொன்ன?' என்று கேட்டேன்....அடடா இது என்ன வம்பா போச்சு...'என்னங்க' என்று சொன்னேன் என்றாள்  என் மனைவி, இல்லத்தரசி, அகமுடையாள், வூட்டுக்காரி , இல்லக்கிழத்தி, சம்சாரம், பெஞ்சாதி, ஆத்துக்காரி என் செல்ல ராஜாத்தி !!!
Author: Sathish
•11:40 AM
உலகநாயகன் என்பதின் அர்த்தத்தை மீண்டும் உணர்த்தியுள்ள படம் விஸ்வரூபம்...பத்து பைசாக்கு பிரயோஜனமில்லாத படத்தையே பத்து தடவ பாக்கற ஜாதி நான்...(அய்யய்யோ ...அப்புறம் எதாவது ஜாதி சங்கம் என் ப்ளாக் தடை செஞ்சிடப்  போறாங்க...) கமல் படம் ரிலீஸ் ன்னா  சும்மாவா..அடிச்சி புடிச்சி ப்ரிமியர் ஷோ டிக்கெட் வாங்கியாச்சு  லே ....

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம வேகம்..." என் ஆம்படிய கொஞ்சம் வேற மாதிரி" என பூஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கமலின் அறிமுகம் விஸ்வநாதனாக... வயதின் முதிர்ச்சி தெரிந்த போதும்,  கதக் நடன நளினத்தை நாட்டியத்தில் மட்டும்மல்லாமல்   நடை உடை பாவனைகளிலும் காட்டுவது கமல் என்ற ஓர் உன்னதக் கலைஞனால் மட்டுமே முடியும்.... ச்சே மனு(ஷி?)ஷன் என்னமா நடிச்சி இருக்கார்....

முதல் 30 நிமிஷம் கதக் கதக் ன்னு போன கதை, அப்புறம் ஒரே சதக் சதக் ன்னு ரத்தமும் ரத்தமுமா சிவப்பை கொப்பளித்தது... "நிஞ்சா அசாசின்ஸ்" படத்துக்கு அப்புறம் இவ்வளவு ரத்தத்தை இப்படத்தில் தான் பார்த்தேன்.. தவறில்லை கதை களம் அப்படி..."அல் -கொய்தா" வை மையமா வச்சி படம் எடுக்கும் பொது ரத்தம் இல்லாம பின்ன முத்தம்மா இருக்கும்? [ அட ஆமா... கமல் வாய் கவிதை சொன்னதே தவிர வேற ஒன்னும் பண்ணலையே... ஹி ஹி.. ஹி...]

அவ்வளவு நேரம் பிராம்ஹணன் என்று சித்தரிக்கப்பட்டு,  மென்(பெண்)மையான மனிதனாயிருந்த Wiz (விஸ்வநாதன்) பாத்திரம் ஒரு இஸ்லாமியர் என்ற அதிர்ச்சியிலிருந்து பூஜா ( நாமும் தான் )மீளும் முன், கமல் ஒரு உளவுத்துறை அதிகாரி  என்று கதையோட்டம் நகர, நான் என்னை இருக்கையின் நுனியில் காண முடிந்தது.... அந்த முதல் தடாலடி சண்டை அட்டகாசம்.. அமர்க்களம்.,.. ஆப்கனிஸ்தான் சுரங்கங்கள், மார்கெட்டில் வெடிப் பொருட்களும், வெடி மருந்துகளும் காய்கறிகள் போல் அசால்டா   விற்கப்படுவது போன்றவை தமிழ் சினிமாவிற்குப் புதிது... இதைப் போன்ற கதைக்களம் கமல் என்ற ஒருவரால் மட்டுமே நினைக்க முடியும்...

ஹோலிவுட் படத்திருக்கு இணையான கதையை சிந்திக்க மட்டுமில்லாமல் அதனை அப்படியே படைத்த கலைஞனுக்கு ஒரு சபாஷ் போடாமல் தடை போட்ட நெஞ்சங்களை எண்ணி நான் மிகவும் வருத்தப்பட்டேன்....  எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்று புரட்சிப் பேச, அதக்காக குரல் கொடுக்க பலர் இருக்க, அதே விஷயத்தைப் பேச நான் வரவில்லை... இஸ்லாம் ஒரு மதம், மார்க்கம்.. 2 மணி 20 நிமிடத்தில் ஒரு இனத்தின் அடையாளத்தை ஒரு சினிமா மாற்றிவிடுமா? தவிர,   இஸ்லாமியர்களை கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டாக தடை என்றால், கதையின் நாயகன் ஒரு இஸ்லாமியன், நல்லவன், போராளி...  என்று ஏன் தடை கேட்டவர்கள்  எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் வாதம்...

சரி விடுங்க....கமலுக்கு சர்ச்சைகளோ, சண்டைகளோ புதிதல்ல...அதனால் தான் என்னவோ "யார் என்று புரிகிறதா" என்ற விஸ்வரூபம் பாடலில்   "தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? " என்ற வரிகள் உள்ளன போலும்?? 
ஆங்காங்கே கதையில் சின்ன சின்ன தேக்கங்கள் இருப்பினும் அவை சுட்டிக் காட்டும் அளவுக்கு இல்லை.....மேலும் கதையின் கிளைமாக்ஸ் விஸ்வரூபம் 2 உருவாக உள்ளதாக எண்ண செய்கிறது...[வேண்டாம் அழுதுடுவேன் ன்னு.. வடிவேல் டயலாக்ஐ  கமல் சொல்லுவாரு...கொஞ்சம் அடங்கு...] எனவே தெளிவில்லாத கேள்விகளுக்கு பாகம் 2 தெளிவு படுத்தும் என்பதே என் கருத்து.... 

வெகு நாட்களுக்குப் பிறகு நான் முழுவதும் ரசித்துப் பார்த்த படம் விஸ்வரூபம்....கண்டடிப்பாக  தடை நீங்கி விரைவில் தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப் படும்.... பார்த்து என்ஜாய் பண்ணுங்க... என்ன, அண்ட்ரியா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தும் கமல் கமலாக இல்லாமல் போனது கொஞ்சம் "வடை போச்சே"ன்னு எண்ணச் செய்கிறது.. .ஹி... ஹி...ஹி...


Author: Sathish
•8:59 PM
வெகு நாட்களுக்குப்  பிறகு பல தமிழ் நெஞ்சங்களை ஒரு கூரைக்குள் பார்த்த திருப்தி 01/12/2013 (சனிக்கிழமை ) அன்று கிடைத்தது...அமெரிக்கா வந்த புதிதில் ஒரு இந்தியனை பார்த்தாலும் நம் உறவினரை பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றி மறையும்...நாளடைவில் பல இந்தியர்களை ஆங்காங்கே காண்பதினால் என்னவோ அவ்வுணர்வு சாதரணமாகி விட்டது.. ஆனால் தமிழர்களை காண நேர்கையில் இன்னமும் உடன்பிறந்தாரை கண்ட சந்தோஷம் தான் .... இந்தியன் என்ற உணர்வு இருப்பினும், தமிழன் என்ற உணர்வு சற்றே மேலோங்கி இருக்கத்தான் செய்கிறது...

நான் இருந்த இடம் , வள்ளுவன் தமிழ் மையம் சார்பாக நடை பெற்ற தமிழ் திருநாள் கொண்டாட்டம் அரங்கேறிய பள்ளி வளாகம். தமிழ் கற்க, கற்பிக்க இவ்வளவு ஆர்வளர்களா என்று எனக்கு மிகுந்த  ஆச்சரியம்... நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் குழந்தைகளும் பெற்றோர்களும் கூடி இருந்தனர். நம் கலாச்சார உடை அணிந்து, ஆங்கங்கே தமிழ் ஒலிக்க, "ஆட்டோகிராப்"  படப்பாடல் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் கதாநாயகியை சுற்றி சுற்றி வருவது போல் எனைச் சுற்றி வந்தன.... அந்த நேரத்தில் எங்கள் குடும்ப நண்பர், விஜய் அர்த்தனாரிக்கு என் மனம் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை... விஜய்யின் மகன் வள்ளுவன் தமிழ் மையத்தில் மழலை நிலையில் தமிழ் பயிலவே, அவர் மூலம் இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தெரிந்தது...

முன்னதாக விழாவை முன்னிட்டு பல நிலைகளில் உதவிக்கு தன்னார்வாளர்கள்  தேவை என்று  தமிழ் மையத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது;  நான் விழா  அரங்க பொறுப்பாளர் உதவிக்கு என் பெயரை பதிவு செய்திருந்தேன். (இந்த மாதிரி நல்ல விஷயம் கூட நீ பண்ணுவியா ???) என் வேலை, விழா அரங்கத்தில் திண்பண்டங்களை எடுத்து செல்வதை அனுமதிக்காமல் இருத்தல், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான வசதிகளை அரங்கத்தினுள் செய்தல் என சின்ன சின்ன அலுவல்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன்...உண்மையில் அதில் உள்ள கடினம் அங்கு தான் உணர்ந்தேன்..சின்ன குழந்தைகள் கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு அரங்கத்தினுள் செல்ல முர்ப்படுகையில், தடுத்து நிறுத்தும் போது  பாவமாக பார்க்கும் அதன் கண்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம் ங்க .....பல குழந்தைகள் அந்த தின்பண்டங்களை"இந்தாங்க நீங்க வச்சிக்கோங்க" என்று என் கிட்ட கொடுக்கும்...அடப்பாவி சின்ன பசங்களோட பிஸ்கட் புடுங்கி தின்ற ன்னு பேர் எடுக்க போற ன்னு மனசு பத பதைக்கும் .... இந்த குட்டீஸ் கூட்டத்துல ஒன்னு என் கிட்ட ஒரு விவகாரமான கேள்வி கேட்டது ..."உள்ளே போய் சாப்பிட்டதானே தப்பு...நான் பாக்கெட் பிரிக்கவே இல்லயே.. " [எம காதகப் பைய...வெஷம்...வெஷம்...வெஷம்...அம்புட்டும் வெஷம்... ] நான் படும் பாட்டைப் பார்த்து என் மனைவி தூரத்தில் நின்று ரசி[சிரி] த்துக்கொண்டிருந்தாள்.. 

 தமிழ் - தமிழன் இரண்டுக்குமே ஒரு தனித்துவம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது இந்த தமிழ் திருநாள் கொண்டாட்டம்...நான் தமிழனாக இருப்பதால் இதனை சொல்லவில்லை ...அன்னியனாய் இருந்திருந்தாலும் இதைத்தான்  சொல்லி இருப்பேன்...மொழி என்பது வெறும் ஊடகம் மட்டுமல்லாது ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடு என்பதனை அங்கு நடைப் பெற்ற கலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது....குழந்தைகள் ஒன்று கூடி ஆடிய  நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் மாறுவேட நிகழ்ச்சி அனைத்திலும் தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மூதாதையர்கள் என்று அனைத்திலும் தமிழ் பறைச்சாற்றியிறுந்தது;  விழா  முழுவதும் எம்மவரின் உணர்வும், நளினமும், எளிமையும்  இருந்தது...

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சுழலிலும் தமிழ் நிலைத்திருந்தது... இருப்பினும், சில பெற்றோர்கள் இங்கும் அந்நிய மொழியை  ( ஆங்கிலத்தை ) தன்  குழந்தைகளிடம் பயன் படுத்தாமல் இல்லை என்பது ஒரு சிறு குறை... திருக்குறளை  ஆங்கிலத்தில் எழுதி "தங்க்லீஷ் -இல் " மேடையில் படித்த குழந்தைகளையும் காண முடிந்தது; வரவேற்ப்பில் ஒரு வெள்ளை நிற துணி விரிக்கப்பட்டு, வந்திருந்த அனைத்துக் குழந்தைகளையும் தன்  பெயரை தமிழில்  எழுதும் வண்ணம் விழா  குழுமம் ஏற்ப்பாடு செய்திருந்தது... தன் பிள்ளை  தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போது "She can write her name..but I don't know how to write mine" என்று சொன்ன பெற்றோரின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட கை துடித்தது...அடக்கி கொண்டு "அப்போ நீங்களும் நிலை 1 லே சேர்ந்து தமிழ்  கற்றுக் கொள்ளலாமே " என்று விளையாட்டாய் சொல்வது போல் உணர்த்தாமல் இல்ல நான்...  வந்திருந்த கூட்டத்திலே வெறும் வெகு சிலரே இவ்வண்ணம் இருப்பதை பார்த்தேன்.. அந்த விகிதம் மிக  மிகக் குறைவு தான்; இருப்பினும் நான் தோள் தட்டிக்கொள்ளவில்லை, என்னைச் சமாதனப் படுத்திக்கொள்ளவில்ல. .. அமெரிக்காவில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்னும் கடினமன்று...பள்ளியில், ஏனைய குழந்தைகளிடம் விளையாடும் பொழுது என்று பல சூழலில் ஆங்கிலம் மட்டுமே பேச நேரிடுகிறது..அதனால் வீட்டில் தமிழில் மட்டுமே பேசினால் குழந்தைகளிடத்து தமிழ் மென்மேலும் வளரும் என்பதில் ஐயம் இல்லை...