Author: Sathish
•1:50 PM
இந்திய சுற்று பயணத்தை முடித்து [பெரிய அயல்நாட்டு அதிபர்..டேய் டேய் போதும்டா...] அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் என் மேனேஜர் கால்பண்ணி, புது ப்ராஜெக்ட் ஒன்னு...2 வாரம் "Guatemala" போகனும்னார்... கோடேமல வா?? எனக்கு தெரிந்தது வைஜயந்திமாலா தானே!!! அத்திப்பட்டி மாதிரி Map லே கூட  அது எங்கே இருக்குனு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமுங்க...[உனக்கு எது தான் easy ???] ஒரு சின்ன Flashback....
ஸ்கூல்லே தொடர்ச்சியா அரபிக்கடலையும், வங்காள விரிகுடாவையும் மாத்தி மாத்தி போட்டு பிரபலமான காலம்...[தூ மானங்கெட்டவனே!!]...ஸ்கூல் inspection ...DEO கிளாஸ்க்கு வந்து எல்லோரையும் கேள்வி கேட்க, அவரிடமிருது மறைந்து வாழ்ந்த சமயம்...[பெருமை டா...] என்னோட வாத்தி என் அலாதி புவியியல் அறிவை உணர்ந்து, புத்திசாலிதனமாய் இந்த முறை, ஹிமாலய மலையை காட்ட சொல்ல...அசல் அஜித் ஸ்டைல்லே நானும் Map கிட்ட போய், வடக்கு பக்கமா குச்சியே வச்சி கோலம் போட்டேன்..DEO முதற்கொண்டு கிளாஸ்ல  எல்லோரும் சிரிச்சாங்க...என் வாத்தி கண்ணு மட்டும் விஜயகாந்த் கண்ணு மாதிரி செவப்பா ஆச்சு... என்னை தீவிரவாதிய பார்கற மாதிரி பார்த்தார்...கண்ணுல அவ்வளவு கொலைவெறி...என் சீட்டுக்கு போய், பக்கத்துல இருந்த என் நண்பனிடம், "என்னடா தப்பா?நான் வடக்கு பக்கம் தானே காட்டினேன்" னு பரிதாபமாய் கேட்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "நீ ஆப்ரிகாவோட வடக்குலே  காட்டினே" ன்னு சொன்னான்....இந்திய வரைபடம் வைக்காம, உலக வரைபடம் வச்சது என் வாத்தி தப்பு...நான் என்ன செய்ய? ஆனாலும், எனக்கு ஒரு சின்ன டவுட் இருந்தது...என்னடா இந்தியா பெருசா இருக்கே? கீழ வேற இலங்கையே காணோமேனு தோனுச்சு ஒரு டவுட்டோடதான் காட்டினேன்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......   சரி விடுங்க வெகுளித்தனமாவே இருந்திருக்கேன்...

சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... Guatemala  வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் நடுவே உள்ள ஒரு சின்ன நாடு. கரிபியன் மற்றும் பசிபிக் கடல் சூழ்ந்த நாடக இருப்பதால், அழையா விருந்தாளியாக பூகம்பம், கடுஞ் சூறாவளி போன்றவைகள் வந்து போகும்; மேலும் ஆங்காங்கே எரிமலைகள் வெடித்து, அப்பபோ கொஞ்சம் தீக்கொழம்பு வெளியேறும்... மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை.... [இதுக்குமேல என்னத்த பயப்படறது...]கொஞ்சம் சூடு அதிகமா இருந்தா சிக்கன் கொழம்புகே பயப்படற எனக்கு தீக்கொழம்பு  தேவையா? [என்ன கொடும சரவணா!!!] முன்பு  ஸ்பெயின் ஆதிக்கம் இருந்ததாம் ஆனால் இப்போது அங்கே mexicans தான் இருகிறார்கள்...ஸ்பானிஷ் தான் அங்கு பேசுகிறார்கள்...அபீசியல் language ஸ்பானிஷ் தான்..  எனக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை 'அடியோ சாமிகோ' அதுவும் முதல்வன்லே சுஷ்மிதா சொன்னதால தெரியும்...அங்குள்ளவர்களுக்கு இங்கிலீஷ் அவ்வளவா வராது...சிலருக்கு அவ்வளவும் வராது ...சுருக்கமா சொன்னா விக்ரம் படத்துலலே வர 'சலாமிய' நாடு மாதிரி.. ஜனகராஜ் மாதிரி என் கூடவே ஒருதன் இருந்தான்....அவன் தான் என் translator . நான் அவன்கிட்ட இங்கிலீஷ் லே சொல்ல அத அவன் ஸ்பானிஷ்லே அவங்களுக்கு புரிய வச்சு, அவங்க சொல்றத எனக்கு இங்கிலீஷ் சொல்ல ஒரே காமெடி தான் போங்க...Client கூட நேருக்கு நேர்  பேசினாலே ப்ராஜெக்ட் முடிய லேட் ஆகும்,  இதுல இதுவேறைய???

வழக்கம் போலவே இந்த முறையும், தங்குவதற்கு ஹை கிளாஸ் ஹோட்டல்,,,நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்லாவே இருந்தது....சகலமும் இருந்தது இந்த ஹோட்டல் லே...இந்த படத்துல நீங்க பார்க்கறது நான் தங்கி இருந்த ஹோட்டல், Barcelo   நான் இந்த ஊரை அமெரிக்காவின் அத்திப்பட்டினு சொல்வதற்கு காரணமுண்டு... முதல் நாள் வேலைக்கு சென்றதும், customer ஊர பத்தி பேசும்போது, ஆபீஸ் ஜன்னல் வழியா எரிமலைய காட்டினார்...அய்யோ இவ்வளவு கிட்ட இருக்கா? னு கேட்ட போது, என்ன இதுக்கு போய் பயபடுற; இந்த ஊர்லே இயற்க்கை உபாதைகள் அதிகம்...போன மாசம் கூட நிலநடுக்கம் வந்தது...நீ 2 வாரம் இருக்கலே கிளம்பறதுக்குள்ள ஒரு தடவ பார்க்கலாம்" என்றார்..அடப்பாவி , நிலநடுக்கம் வரர்த நமிதா வரமாதிரி சொல்றே நெனச்சிட்டு வந்துட்டேன்..  இப்போ இருக்க கோடேமலா version 3
இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ பூகம்பத்துல அழிந்து பிறந்த மூன்றாவது கோடேமலா தான் இது.... அடிக்கடி அழிந்து பிறப்பதால் நான் இதற்கு அத்திப்பட்டினு பேரு வச்சேன். [என்ன புத்திசாலித்தனம்] ஹி ஹி  ஹி ...இந்த படத்துல (இடப்பக்கம்) பார்க்கறது பழைய கோடேமலா sample ...பூகம்பத்தால் அழிந்துபோன, இத மாதிரி இடிஞ்சி போய் இருக்குற இடம் தான் அங்கே இப்போ tourist spot ...இந்த இடத்தோட பேரு 'AntiGua ' ... இந்த படத்துல இருக்கறது ஒரு restaurant பழமை அழியாம இருக்கணும்னு இங்கே இருக்க, இடிஞ்சிபோன  வீடுகளை கொஞ்சம் ஆல்டெர் பண்ணி ஹோட்டல் கட்டி இருக்காங்க.. "படுபாவிகளா... சாப்பாட்ல பல்லி விழுந்தாலே தாங்காதுடா என் பாடி...இங்கே உட்கார்ந்து  சாப்பிட்டா,  பில்டிங்கே சாப்பாட்லே விழுமே..." இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாப்பிட்டேன்... பின்னர் இரவு முழுவதும்  ஊரைச சுற்றி பார்த்தேன்...மேல உள்ள இன்னொரு படம், AntiGua பகல்லே எடுத்தது.. பின்னாடி பாருங்க எரிமலையை... ஆத்தாடி.... வித்தியாசமான அனுபவம்... இன்னொரு வித்யாசமான அனுபவம் என்னனா, நான் முதல்முறையா முழுக்க முழுக்க வெள்ளகார பசங்க அதுவும் டீன் ஏஜ் பசங்களோட வேலை செய்த அனுபவும்....அரசல் புரசலா சில விஷயத்த கேள்வி பட்டு இந்த ஊரு பசங்கலபத்தி, நெறைய தப்பான அபிப்பிராயம் இருந்தது... பழகின பிறகு, அடடா இவங்களும் நம்மள மாதிரி தான்னு தோனுச்சு...'உதாரணத்துக்கு...15 வயசுக்கு மேல இந்த ஊரு பசங்க, பொண்ணுங்கலாம் பெற்றோரை விட்டு தனியா பிரிஞ்சி வந்துடுவாங்க....பந்த பாசம்லா கொஞ்சம் கம்மி என்பதெல்லாம் நான் தப்பா எடுத்த சில விஷயங்கள்....வெகு சிலரே, அதுவும் கட்டயாமிருப்பின் பெற்றோரை பிரிந்து இருகிறார்கள்...மற்றபடி இவர்களும் தங்கள் பெற்றோர் மற்றும் கூட பிறந்தவர்கள் மீது வெகுவும் பாசமாகவே இருக்கிறார்கள்...என்ன நம்ம ஊரு பெற்றோர்கள் மாதிரி இங்கு ஊட்டி ஊட்டி வளர்க்கறது இல்ல..பிள்ளைகள ரொம்பவே தனிச்சையாய் முடிவுஎடுக்க விடறாங்க....அத சிலதுங்க தப்பா எடுத்து தறிகெட்டு அலையுதுங்க....வெள்ளகார புள்ளைங்களுக்கும் நம்ம ஊரு கலாசாரம் பத்தி நெறைய நல்ல விஷயங்களும் சொன்னேன்..[நீயான்னு கேக்காதீங்க..அப்பப்போ நான் நல்லவன்தான்] முக்கியமா பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணம், கூட்டுகுடும்பம் இதெல்லாம் ரொம்பவே ஆச்சர்யமா கேட்டாங்க...எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியா ஒருத்தன் கேட்ட கேள்விய பார்த்து எனக்கு அழுகாச்சியே வந்த்டுச்சு..எப்படி ஒரு டெஸ்ட் டிரைவ் கூட பண்ணாம, உன் parents சொல்ற பொண்ணெல்லாம் கல்யாணம் பண்றீங்கன்னு? கேட்டான். அடப்பாவி இதென்ன ஹோண்டா காரா? ஓட்டி பார்த்து வாங்கறதுக்கு?

இந்த ஊர்லே நெறைய விஷயங்கள் நம்ம ஊர ஞாபக படுத்துத்து. 'Latin அமெரிக்கா'  என்பதால், இதுவும் அமெரிக்காவா என்றால் பல விஷயங்களில் 'நோ'.. உதாரணத்துக்கு, இங்கே Gallonக்கு பதில் லிட்டர் தான் use பண்றாங்க..கிலோமீட்டர் அளவுகளும் நடைமுறையில் உள்ளது. முக்கியமா trafficla நம்ம ஊர அப்படியே follow பண்றாங்க....ஒன்னையும் மதிக்கறதில்ல.... ரோடு எல்லாம், நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு, lanes இருந்தாலும் அதெல்லாம் சும்மா தமாஷுக்கு தான்..ஒரு சக்கரம் இந்த லேன் அண்ட் மற்றொன்று இன்னொரு லேன் தான்... இந்த படத்துல பார்த்தா தெரியும் நான் ஏன் நம்ம ஊர் போல தான் சொல்ற காரணம். நம்ம ஊரு பெட்டிகட மாதிரி ரோட்டோரமா நெறைய கடைகள்...

மற்றொரு சுவாரசியமான, கிளுகிளுப்பான  விஷயம்...பொதுவா இங்கு ஒருவரை அறிமுகப்படுத்தும் போது பசங்க கைகொடுகறாங்க சில சமயம் தழுவிக்கிறாங்க... ஆனால், பொண்ணுங்க ஒவ்வொரு சமயமும், கன்னத்தோடு கன்னம் வச்சு நச்சுனு ஒரு கிஸ் பண்றாங்க ...[அடடா....] இந்த deal எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...ரெண்டு வாரமா கன்னத்த  கழுவ மனசே வரலனா பார்த்துகூங்களேன்...

சாப்பாடு கொஞ்சம் கொடுமையான விஷயம்...ரெண்டு வாரமா சோறு இல்லாம grilled சிக்கன், பிச்சா,பர்கர்னு காலத்த ஓட்டினேன்...லஞ்சச்கு 4 கோஸ் இலைகளும், 4 துண்டு சின்ன காரட் , ஐஸ் டி யும் கொடுகரானுங்க....அப்போகூட எனக்கு வலிகளா, ஐஸ் டி பிடிக்காம கொஞ்சூண்டு வச்சதுக்கு, ஒருத்தன் fulla குடிங்க ஜீரணத்துக்கு நல்லது சொல்றான்...அடேய் ஒரு முழு ஆட்டையே பார்ட் பார்ட் பிரிச்சி மெய்யற ஆளுடா நான்...யானை பசிக்கு சோள பொரியா...

மற்றபடி ஊர சுத்தி பார்க்கலாம் னா எரிமலைய தவிர வேற ஒன்னும் இல்ல...ஆனா ஒண்ணுங்க, கோடேமலா சென்றுவந்த ஒரே இந்திய குடிமகன் நானாகத் தான் இருப்பேன்னு நினைக்கிறன்...ஒரிஜினல் அத்திப்பட்டிலே தல, 'நான் தனி ஆளு இல்ல, தனி ஆளு இல்ல' ன்னு  சொல்லுவார், ஆனால் அமெரிக்காவின் அத்திப்பட்டிலே இந்த (தரு)தல  'நான் தனி ஆளு' ன்னே சொல்லிட்டு திரிஞ்சேன்...ஸ்டார்ட் பண்ணதுல இருந்து திரும்ப வர வரை ஒரு இந்தியர்களையும் பார்க்கவே இல்ல[ இந்திய பாஸ்போர்ட் இருந்தா கோடேமல் செல்ல  விசா தேவை இல்லைன்னு சொல்லும்போதே நான் உஷார் ஆகி இருக்கனும்] பரவாலே போனதுக்கு பலனா 40 - 50 வெள்ளைக்கார பொண்ணுக கிஸ் கடச்சதுள்ளே... வாழ்க கோடேமலா !!!
Author: Sathish
•7:52 PM
நம்ம ஊருக்கு வந்தாலே போதும்! நேரம் போறதே தெரியாது...இப்போ தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே நாள் ஓடுது... அமெரிக்காவில என்ன தான் ஆடம்பர வாழ்கையும், பிரம்மாண்டமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நம்ம ஊரோட, நம்ம மக்களோட இருக்குற ஒரு மனநிம்மதி அங்க இல்ல என்பத அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் சில நேரத்துல, நம்ம மக்கள் நடந்துக்கிற சில விஷயங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு. படிச்சவன், படிக்காதவன் எல்லோருமே சில விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது மனசு ஏத்துக்க மாட்டேங்குது..ஏண்டா, US போய்வந்தா இப்படி தான் பேசுவியானு சொல்ற நண்பர்களே, இந்த பதிவு மூலமா நான் பேசறது நான் ரொம்ப நாளா  வெறித்தனமா யோசிக்கிற, நடைமுறை படுத்தனும்னு நெனைக்கிற ஒரு விஷயம்.

நம்மில் பலருக்கு "சுயஒழுக்கம்" சற்று மங்கி போய்டுச்சோனு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..சுயஒழுக்கம் என்றால் தம் அடிகறதும், தண்ணி அடிக்கறதையும் தவறு என சொல்லி 'குடி' மக்களிடம் அடி,உதை வாங்க நான் தயாரா இல்ல...அடுத்தவனுக்கு தொல்ல இல்லாம நீ என்ன வேணும்னா பண்ணுங்கறது தான் என்னோட கூற்று...தம் அடிச்சு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம புகைய குறிபார்த்து பக்கத்துல நிக்கறவன் மூஞ்சில உடறத பார்த்தா அந்த சிகெரேட்டே அவன் வாயில இருந்து புடுங்கி, திருப்பி நெருப்பு இருக்க பக்கத்த அவன் வாயில் திரும்ப வைக்க வேண்டும் என்று வெறித்தனமா யோசிக்குது மனசு...அதே மாதிரி பொது எடத்துல தண்ணியடிச்சிட்டு விழுந்து கெடகிறவன் பார்த்தாலும், சமயத்துல கோவம் அதிகமா வருது...அது அவர்களோட அறியாமைங்கறதா, இல்ல திமிருன்னு சொல்றதானே தெரில. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயஒழுக்கத்தை அரசாங்கம் கற்றுக் கொடுக்கணும் நெனைக்காம நாம் ஏன் சில நெறிமுறைகளை பின்பற்றி அதனை வரையறுத்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாதுங்கறது தான் என்னோட கேள்வி. நான் தம் அடிகல, தண்ணி அடிக்கலனு மார் தட்ரவங்க  எல்லாம் ஒழுங்கா நடந்துக்கராங்கனு அர்த்தம் பண்ணிக்க கூடாது...இது தப்புன்னு தெரியாமலேயே நெறைய தப்பு நடக்குது..உதாரணதிற்கு, நான் என்னோட  தாய்மண்ணே வணக்கம்...( பாகம் 1 ) பதிவுல சொல்லி இருப்பேன்...விமான நிலையத்துல ஒவ்வொரு காருக்கு பின்னாடியும், பெட்டிய தூக்கி வர உதவுற கார்ட் நிக்குது...அங்க வர முக்கால்வாசி பேரு படிச்சவனாவோ அல்லது உலக அனுபவம் உள்ளவனாவோ தான் இருப்பான். ஆனால் அவங்களுக்கும் இது ஒரு தவறான விஷயமாவே தெரிலே... அத கொண்டுபோய் உறிய எடத்துல வைக்கணும்னு ஏன் தோனமாட்டேங்குது? சும்மா அரசாங்கத்தையும் மற்ற இலாக்காகளையும் குறை சொல்வதை விட்டுவிட்டு ஏன் நாம ஒழுங்கா நடந்துக்க கூடாது? சின்ன விஷயங்கள ஆரம்பிக்கலாமே, நாளடைவில அதுவே பல விஷயங்கள திருத்துற ஒரு முதற்படியாக இருக்குமே... ஒன்னுமில்லேங்க சென்னை லே இருந்த நேரத்துலே நான் கவனித்த ஒரு விஷயம், டிராபிக் சிக்னலே நம்ம ஆளுங்க தமாஷா எடுக்கறாங்க....ஒரு நாள் நான் சிக்னலே நிக்கறேன்...எனை கடந்து எத்தன வண்டி போகுது...அதிலும் சில பேரு ஒரு லுக் வேற விடறானுங்க...அடேய் ரெட் சிக்னல் டா...நில்லுங்கப்பா....ஒரு PTC பஸ் பின்னாடி வந்து ஹோர்ன் அடிசசு கெட்ட வார்த்தைலே திட்டறான்..எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுச்சு...உண்மைய சொல்லப்போனா என்ன மாதிரி யோசிக்கிறவங்க நெறைய பேர் இருக்கோம்...ஆனா அதற்கான முயற்சிய எங்கே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சியே நாளா கடத்துறோம்....இன்னும் சில பேர் சொல்ற காரணத்துக்கு எனக்கு, என்ன பதில் சொல்றதுன்னு புரியல...என்னோடநெருங்கிய நண்பன் "பிரதீப்"...ஹைதராபாத்லே இருக்கான்...ரொம்ப நல்ல பையன்..நல்ல திறமைசாலி...[அப்புறம் உனக்கு எப்படி நண்பன்..ஹி ஹி ஹி ] "மச்சி இது பொது பிரச்சனைடா நீ ஒழுங்கா இரு...உன்ன பார்த்து மற்றொருவன் ட்ராபிக் ரூல்ஸ் மதிப்பான் சொன்னா..." போட லூசுப்பயலே ! நான் மட்டும் நின்னா அடிச்சி தூக்கிடுவான்..அப்புறம் எப்படி இன்னொருவன் என்ன பார்த்து நிப்பான்னு" கேக்கற கேள்விக்கு சத்தியமா எனக்கு பதில் தெரிலே...சின்ன சின்ன விஷயத்துல ஆரம்பிக்கிற தப்பு தான் நாளைக்கு பழக்கமாகவே மாறுது. சின்ன சின்ன நல்ல விஷயங்கள கடைபிடிப்போமே....அதை பழகிப்போமே!!! நான் என் நண்பர்களோட நீண்ட நாட்களாக ஒரு பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருகிறேன்...ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயம் உருவாக முதலில் தனிமனித ஒழுக்கம் - "சுயஒழுக்கம்" ரொம்ப அவசியம் என்பது என்னோட கருத்து...சுயஒழுக்க கோட்பாடுகள் சிலவற்றை வரையறுத்து, அதை கடைபிடிக்கும் ஒரு குழு ஒன்று ஆரம்பிக்க வேண்டும். அதுல இன்னிக்கு அஞ்சு பேரு, ஆனால் அந்த ஆஞ்சு பேரும் 100% அந்த கோட்பாடுகளை மதிப்பவராக இருக்க வேண்டும்...அவர்கள் இந்த குழுவின் நோக்கங்களை மற்றவர்களுக்கு எடுத்துசொல்லி ஐந்தை, ஐநூறாக, ஐந்தாயிரமாக உயர்த்த முயற்சிக்க வேண்டுமென்பது என்னோட குறிக்கோள்...நான் இதை பற்றி யார்கிட்டே பேசினாலும்...எல்லோரிடமும் ரொம்ப ஆர்வம் இருப்பது சந்தோஷமா இருக்கு...அவங்களுக்குள்ள இருக்க ஆசையும், ஆக்கமும் நல்ல சமுதாயம் வராதா என்ற ஏக்கமும் என்னால் உணர முடிகிறது...சும்மா orkut , Facebook னு வச்சிக்கிட்டு  போட்டோ பிடிச்சிபோடவும் கடலை போடவும் நேரத்தை வீணாக்குவதிற்கு பதில் அதே மாதிரி ஒரு community நல்ல பொது விஷயத்திற்கு பயன்படுத்த ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்பது என்னோட ஆசை..பார்போம் எவ்வளவு சீக்கிரம் அதை நடைமுறை படுத்துகிறேன் என்று ...

மற்றபடி...வழக்கமான செண்டிமெண்ட் காட்சியுடன் என் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் இருந்து விடை பெற்று..US திரும்பினேன்...ம்ம்ம் இனி அதே மேனேஜர், அதே ப்ராஜெக்ட், வால்மார்ட், இந்தியன் grocessory ன்னு நாள கடத்தனும்..US திரும்பும்போதும் அதே விமானம்தான், அதே வசதிதான் ஆனால் கண்களில் சந்தோஷம் இல்லை கண்ணீர் தான்!!!





Author: Sathish
•11:15 PM
சிங்கார சென்னையிலே...

சென்னைக்கு வந்துட்ட போதும்....சாப்பாடு பின்னி எடுக்கும்...சாதரணமாவே எங்க வீட்லே ரெண்டு வகை குழம்பு, ரெண்டு வகை பதார்த்தம் இருக்கும். இதுலே பல நாள் சென்னை சாப்பாடு இல்லையா...சோ அம்மா நான் எப்போ us லே இருந்து வந்தாலும் நடப்பன, பறப்பன, ஊர்வன என சகலமும் என் தட்லே செஞ்சி வச்சிடுவாங்க ...

ஒரு ஞாயிற்றுகிழமை நல்லா மூக்கு முட்ட தின்னுப்புட்டு எங்க வீட்லே எல்லோரும் பேசிக்கிட்டிருகோம்...அப்போ எனக்கு ஒரு போன்....என்னோட சகாசெந்தில்.... "காலேஜ்  அலும்னிடா!! நீ  வந்த நேரத்துல  கரெக்டா வந்திருக்கு... போலாம் மாப்ளே" என்றான்... "நீ வீட்லே இருந்தாலே எவனுக்காவது மூக்குல வேர்க்கும்.... ஊர சுத்திக்கிட்டே இருன்னு"  அம்மாவோட பொலம்பல்..[இதெல்லாம் கேட்டு  எவ்வளவு நாளாச்சு ...] இன்னொரு பக்கம் நான் கட்டிகினவ....விஜகாந்த் மாதிரி கண்ணு ரெட்டாகி, தீவிரவாதிகள பார்கற மாதிரி ஒரு பார்வை...எல்லோரையும் சமாளிச்சு கார் எடுத்துகிட்டு கெளம்பியாச்சு...

மனசு ரொம்பவே என்ஜாய் பண்ணுச்சு....SSN காலேஜ், கேளம்பாக்கம்...இன்னமும் entrance exam எழுதின நாள் நினைவிருக்கு...இதே செந்திலும் நானும் தான்...மச்சீ admission கெடச்சா சேருவியா ன்னு அவன் கேட்க போ மாப்ளே இங்கேயானு கேட்டவன் நான்...ஒரே காரணம் என் வீட்லே இருந்து 140 கிலோமீட்டர் ஒரு நாளைக்கு போகணும்..வேலைக்கே ஆகாது....எனக்கெனவோ அண்ணா university oxford னு வரிசைலே நிக்கற மாதிரி ஒரு தெனாவட்டு....கடைசில எங்கேயும் சீட் கெடைக்காம இங்கே அடிச்சிபுடிச்சி ஓடி வந்தேன்... அன்று பார்த்த காலேஜ்க்கும், இப்பவும்  நிறைய மாறுதல்கள்....பட்டைய கெளப்பி இருக்காங்க...நெறைய ப்ளாக்குகள், இன்டோர் ஸ்டேடியம் னு அசத்தி வச்சிருக்காங்க...
இப்போ சிட்டிலே டோப்மொஸ்ட் காலேஜ் னு பேரு...US லே இருக்க நம்ம ஊர் மக்களுக்கு SSN சொன்னா ஒஹ்ஹ சீட் கெடைக்கறது ரொம்ப கஷ்ட்டம் ஆச்சே ன்னு சொல்லும் போது.."ஆமா ஆமா Entrance , GD ன்னு ரொம்ப இருக்கு" நல்ல ஸ்கோர் பண்ணனும் " னு ஒரே பந்தா விடுவேன். [எனக்கு மட்டும் தானே தெரியும்..காலேஜ் தெறந்த புதுசு லே 35 பேரு எழுதி 30 பேருக்கு சீட் கெடச்ச ரகசியம்...ஹி ஹி ஹி ] என்னோட வகுப்புக்கு சென்றதும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு...நேராக கடைசி சீட்டில் சென்று உட்கார்ந்தேன்... என்னோட சீட்....சற்றே கண்மூடி பழைய நினைவுகள்.. என் வலப்பக்கம் என்னோட நண்பன் ஷ்யாம் ...எவ்வளவு கலாட்டா, ஆர்பாட்டம், சண்டைகள், சமாதானங்கள் ....எழுந்து வர மனமில்லை......முத்தமிட்டேன்...என் மேஜையை!!! ஒவ்வொருவருக்கும் பள்ளிப் பருவமும், கல்லூரிப் பருவமும் தான் வாழ்கையின் வசந்த காலங்கள் என்பதை மீண்டும் நினைவுகூர்ந்தேன்..... நான் படித்த கல்லூரியின் வளர்ச்சி என்னை ரொம்பவே ஆச்சரிய படுத்தியது.....இந்த நேரத்தில், என் கல்லூரிக்காக பணி புரிந்த, புரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் என் பணிவான வணக்கங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இருக்கும்போது கண்டிப்பாக பள்ளியையும் கல்லோரியையும் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டும்!!!
அடுத்து, என் juniors ...எவ்வளவு தான் அடிச்சாலும் வலிகலன்னு சொல்லற பசங்க...படிக்கற காலத்துல ராக்கிங்லே படுத்தின பாட்ட இன்னமும் மறக்வில்லை!!! எல்லோரும் ரொம்ப நல்லாவே செட்டில் ஆகி இருக்காங்க....பாசக்கார பசங்க இன்னமும் மரியாதை கொடுக்கறாங்க!!! எல்லோரும் சேர்ந்து staffs பிளாக் பக்கம் போனோம்.... சத்யம் பண்ணாலும் நான் US லே வேலை செய்யறதா ஒருத்தரும் நம்ப மாட்டேன்கறாங்க...அந்த ரேஞ்சுக்கு படிச்சோம் லே!! என்னோட mam ஒருவரும் வரல [நான் வரேன்னு தெரிசிருகுமோ!!!] ராம்கி சார்!! பசங்களோட ரொம்ப friendly பழகற சார்..எப்போவாவது கிளாஸ்க்கு வரதால என்னோவோ எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்....நல்ல அரட்ட அடிச்சோம்.... படிக்கிற காலத்துல நான் பண்ண அயோக்கியத்தனம், முள்ளமாரிதனம் எல்லாத்தையும் இன்னுமா மறக்காம சொல்லி காட்டனும்.....படிக்கிற காலத்தில எனக்கு நல்லா வர ஒரே விஷயம் காது கிழியற மாதிரி விசில் அடிக்கறது..முன் சீட்லே உடகர்ந்திருகிற பொண்ணுங்க எல்லாம் சும்மா அலறியடிச்சி ஓடுவாங்க....டான்ஸ் என்ற பேர்லே விஜய் பாட்டுக்கு போட்ட ஸ்டெப்பா போட்டு டான்ஸ் ஆடறது, ஸ்போர்ட்ஸ் என்ற பேர்லே கிரௌண்ட் லே சண்ட போடறதுன்னு....சினிமா லே காலேஜ் னு காமிச்சு பண்றத எல்லாம் உண்மையாவே பண்ணது எங்களோட செட் [பொல்லாத ஷேவிங் செட்...] நெறைய விஷயங்கள்...பேசிகிட்டா இருந்ததுல நேரம் போனதே தெரில....அடுத்த முறை சென்னை வரும்போதும் கண்டிப்பாக கல்லூரி சென்று பார்க்கவேண்டும் என்ற முடிவுடன் சற்றே இறுகிய மனதுடன் வீடு திரும்பினேன்.