Author: Sathish
•8:07 PM
           அயல் நாட்டிலே - அட்லாண்டாவிலே ஆணி புடுங்க சென்ற நான் வெற்றியோடு வீடு திரும்பினேன்.[உன்ன தான் யாரும் தேடல லே அப்புறம் என்ன ஒரு இன்ட்ரோ] சரி விடுங்கப்பா ரொம்ப நாளா எங்கேடா ஆளே காணும்னு நீங்க நெனைபீங்கனு சொன்னேன்....
          ரெண்டு வாரமா வேலை பின்னி எடுத்துட்டாங்க! என்னோட அப்பா சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை செய்தார். அதனால் வேலை விஷயமா அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் போவது வழக்கம். [உன் அப்பாவுமா? ன்னு கேட்காதீங்க உண்மையாவே அவர் ரொம்ப நல்லவர்!!] அவர் கூட நானும் பல முறை போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கிறேன். அங்கே புதுசா டூட்டிக்கு வர போலீஸ்காரர் அன்னிக்கு அரெஸ்ட் ஆகி பெஞ்ச்லே இருக்க கைதியே நாலு போட்டுட்டுதான் வேலை துடங்குவார்; வேலை முடிச்சி வீட்டுக்கு போற போலீஸ்ம் "இவன் பண்ணி இருப்பான் னு சொல்லி நாலு போட்டுட்டுதான் வீட்டுக்கு போவார். அத மாதிரி புதுசா போன என்ன அவனவன் வேலை விடுறானுக... அடேய் முடில டா...நீங்க எதிர் பார்க்கற அளவுக்கு நான் புத்திசாலி இல்லடானு சொல்ல [உண்மைய ஒத்துக்க] துடித்த என வாயே அடக்கி மனசுக்குள் இருங்கடா என் 12 ஸ்டாண்டர்ட் மார்க் சீட் காமிக்கறேன் சொல்லிகிட்டேன். ம்ம்ம். இந்த கணினி மென்பொறியாளர் [பேரு நல்லா தான் இருக்கு] வேலை செய்யறதுக்கு பதிலா, பொன்வண்டு அல்லது sunrise விளம்பரம் போட்ட கட் பனியன் போட்டு நாடார் கடைலே பொட்டலம் கட்ற வேலை எவ்வளவோ மேல்!! 8 - 10 மணிநேரம் வேலை செய்தாலும் நைட் நிம்மதியா தூங்கலாம். கொடுக்கற சம்பளத்துக்கு கரும்பு ஜூஸ் போடறமாதிரி பிழிஞ்சி எடுத்துட்டாங்க...சரி விடுங்க ...அட்லாண்டா எப்படி இருந்ததுனு பார்ப்போம்... 
          நான் வேலை விஷயமா பல நகரங்களுக்கு போய் வந்த அனுபவம் இருந்த போதிலும் அட்லாண்டா நியூ யார்க் நகரம் அளவிற்கு வெகுவாகவே கவர்ந்தது... காரணம் நான் டௌன்டவுன் என்று சொல்லப்படும் சாட்ச்சாத் சிட்டி லே தங்கி இருந்ததது. ஹில்டன் ஹோட்டல் 22 வது மாடியில் தங்கி இருந்தேன். நைட் view ரொம்ப பளிச்சென்று இருந்தது...சற்றே என நினைவுகள் பின்னோக்கி செல்கின்றன...[டொஇன்ன்ன்ன...background மியூசிக் பா ஹி ஹி ஹி ]சென்னைலே எங்கப்பா கூட பைக் லே மவுண்ட் ரோடு பக்கம் போனா LIC பில்டிங்க வச்ச கண்ணு வாங்காம பார்த்த காலம் உண்டு. அதே மாதிரி மீனம்பாக்கம் பக்கம் போனா ஏராகப்பல் [ aeroplane ந சின்ன வயசில நான் ஏராகப்பல் னு சொல்லுவேன் :D பெருமை..எல்லாம் தல எழுத்து] நிமிர்ந்து பார்க்காம வந்ததில்லை...இப்போ 22 வது மாடி, இந்த ரெண்டு வாரத்தில 3 முறை Virginia விற்கும் அட்லாண்டா விற்கும் பறந்தேன்.. அதெப்படி னு தெரிலே ஒரே முறை தான் மேலும் கீழும் பார்த்தாங்க ஆணி புடங்க அனுபிட்டங்க !! எப்படி தான் கண்டுபிடிகிறாங்கனு தெரிலே :(
          அட்லாண்டா வில் ஒரு நல்லா விஷயம் - Marta னு சொல்லப்படும் ரயில் வசதி இருப்பது ரொம்ப சௌகர்யமா இருந்தது. கார் கண்டிப்பாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. Aquarium,CNN, COCO COLA கம்பெனினு பலது இருந்தது.. ஆனா ஒன்னும் சுத்தி பார்க்க டைம் இல்ல படுத்தி எடுதுடானுங்க....இவ்வளவு பேசிட்டு அங்க பார்த்த பொண்ணுகள பத்தி சொல்லலைன்னா எப்படி? அதென்னமோ தெரில இந்த ஊரு பொண்ணுங்க மட்டும் த்ரிஷா படம் போட்டு வந்த புது fanta பாட்டில் மாதிரி shapeaa வளைவு நெளிவோட இருக்காங்க..ம்ம்ம் நம்ம பொண்ணுங்க 2 லிட்டர் பிஸ்லேரி பாட்டில் மாதிரி ஒரே shape ... இந்த ஊரு பசங்கலாம் ஆறடி இருக்கானுங்க அத்திக்கா மாதிரி இருந்திகிட்டு பேச்சை பாருன்னு சொல்ற பொண்ணுங்க பத்தி எனக்கு கவலை இல்லை ...[ஜான் பிள்ளையானாலும் நான் ஆண் பிள்ளை]
          ஒரு வழியா வேலை எல்லாம் முடிச்சி கிளம்பி வர ஏராகப்பல உட்கார்ந்தா அது ரன்வே லே வந்து திரும்ப கொண்டு போய் பார்க் பண்ணிட்டு ஒரு சின்ன பிரச்சனை சொல்லி, நம்ம ஊரு மப்சல் பஸ் மாதிரி காபி டி சாபிடரவன்கலாம் போய் சாப்டு வாங்க னு சொல்லி இறக்கி விட்டான்.. 4 மணிநேரம் லேட் பண்ணி கொடும.....ம்ம்ம் பக்கதுல ஒரு fanta பாட்டில் இருக்கவே அது கூட கொஞ்சம் கடலை போட்டு காலத்த ஓட்டி வீட்டுக்கு வரற்துகுள்ள போதும் போதும் னு ஆயிடுச்சு. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவே நான் எழுதுவதற்கு காரணமான அலை கடலென திரண்டு வந்திருக்கும் என கோடான கோடி ரசிகர்களே , வாசகர்களே , பத்திரிக்கை நண்பர்களே உங்களுக்கு இந்த ப்ளாக்ஐ காணிக்கையாக்குகிறேன்.
த்து னு துப்புரவங்கள வன்மையா கண்டிச்சு கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்.....Bye !!!
This entry was posted on 8:07 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: