Author: Sathish
•7:30 AM
நேரம் : இரவு 9:35



பெல்ட் அணிந்துகொண்டே பீரோ கண்ணாடி வழியே, கோபமாய் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் கமலாவைப் பார்த்து சிரித்தான் சங்கர்; வடபழனி R 8 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்  ஆக பணிபுரிகிறான். கல்யாணமாகி 2 வருடமாகியும், இரவு நேர ரோந்துப் பணிக்கு எப்போது கிளம்பினாலும் "உம்ம"மென்று இருப்பது கமலாவின் வாடிக்கை."கோபத்துல்ல தாண்டி செல்லம் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று கூறிக் கொண்டே சுவற்றோரம் நின்று கொண்டிருந்த கமலாவின் அருகில் சென்றான் சங்கர்." விடிகாலையில் தான் வருவீகளா?" என்று தயக்கமாய் கேட்டாள் கமலா. "ஆமா..அடுத்த வாரம் அயோத்தி பிரச்சனை தீர்ப்பு. So சிட்டிலே பாதுகாப்பு அதிகப்படுத்த சொல்லி கமிஷனர் உத்தரவு போட்டிருக்கார். உள்பக்கம் 
தாப்பாள் போட்டு நீ ஒழுங்கா தூங்கு. ஓகே?" என்று சொல்லிக் கொண்டே கமலாவின் மிக அருகில் நெருங்கி, சேலை வழி தெரிந்த அவளது இடுப்பில் எதையோ தேடியது அவனது கைகள். சிலிர்த்து கண்மூடி நின்றாள் கமலா. அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்தது.




நேரம் : இரவு 10:35


அவசர அவசரமாக அந்த கேசுவாளிட்டி வார்டில் நுழைந்த சீப் டாக்டர்  "எத்தனை பேரு?" என்று கேட்டுகொண்டே க்ளௌஸ் அணிந்தார். "மொத்தம் 18 பேரு டாக்டர். அடல்ட்ஸ் 13 , 5 குழந்தைகள். ஆக்ஸிடென்ட் ஆன போது, டிரைவர் சீட் பக்கமா உட்கார்ந்திருந்த 7 பேர் ரொம்ப அடிபட்டு சீரியசா இருக்காங்க." என்று பதிலளித்தாள் நர்ஸ். அது ஒரு அரசு மருத்துவமனை..கழிப்பறைகள் சுத்தமா இருக்குதோ இல்லையோ, பினாயில் வாசம் பஞ்சமில்லாமல் மருத்துவமனை முழுவது வீசிக் கொண்டிருந்தது. அந்த கேசுவாளிட்டி வார்டில் சுமார் 10 பெட் இருக்கும். ரத்த கரையும், வலியின் புலம்பல்களும் மிகுதியாக இருந்தது அறை முழுவதும்.  


கடைசி பெட்டில் இருந்த காமினி, மெல்ல கண்விழித்தாள் அவளை சுற்றிலும் வயர்கள். பயத்தில் அவளின் ரோஸ்மில்க் நிற முகம் மேலும் சிவந்தது.. "டா... டாக்டர்...  டாக்டர்.." என்று முனகிக் கொண்டிருந்த காமினியின் அருகில் சென்றார் டாக்டர்; நிழலாய் தொடர்ந்தாள் நர்ஸ்.." ஒன்னும் பயப்படாதேமா..உனக்கு ஒன்னும் இல்லை...யு ஆர் எ லக்கி கேர்ள். ஒன்னும் பெருசா அடிபடலை. அதிர்ச்சிலே கொஞ்சம் மயக்கமாயிட்டே அவளவுதான்.. . நர்ஸ் 30 மினிட்ஸ் கழிச்சு ஆக்சிகேன் மாஸ்க்கை எடுத்துடுங்க" என்று சொல்லிக் கொண்டே அடுத்த பேஷன்ட் அருகில் சென்றார். தலையில் உள்ள கட்டு இருக்கமாய் இருப்பதை உணர்ந்த காமினி, சுற்றும்   முற்றும் பார்த்தாள். தன் வலக்கைப் பக்கமாய் இருந்த பழுப்பு நிற இரும்பு மேஜையின் ஓரத்தில் தன் ஹேன்ட் பேக்கை கண்டதும் காமினி ஒரு பெரு மூச்சு விட்டாள்...அவள் நினைவு முழுவதும் சிவா நிரம்பியிருந்தான்.

"ஆக்ஸிடென்ட் கேஸ், FIR காபி எல்லாம் ஒழுங்கா  கலெக்ட்  பண்ணி ரிசெப்ஷன் லே கொடுத்துடுங்க" என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார் சீப்.  டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். அந்த விபத்து சிகிச்சை பிரிவின் வராண்டாவில் நான்கைந்து போலீஸ்காரர்கள், அடிப்பட்டவர்களின் உறவுக்காரர்கள் என்று ரொம்ப பிஸியாக இருந்தது அந்த ஹாஸ்பிடல்.  யார் கண்ணுலேயும் படாமல்  வெளியேறிய காமினி, தன்னை கடந்த ஆட்டோவைப் பார்த்து  "ஆட்டோ" என்று குரல் கொடுத்தாள்.  அடுத்தவரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் "சர்ர்ர்" என்று ப்ரேக் போட்டு நின்றது அந்த ஆட்டோ. "எங்கே மா போகணும்" என்று ஒரு கர கரப்பான குரலில் கேட்ட ஆட்டோ டிரைவரிடம் "மொதல்ல இங்கிருந்து கெளம்புபா" என்று கூறி ஓரமாய் கிழிந்திருந்த அந்த ஆட்டோ குஷன்னில் தன்னைப் பொதிந்தாள் காமினி. அவள் குரலில் அவசரம் தெரிந்தது. நன்கு நனைந்த சிகரெட் பாக்கெட்டின் வாசம் அந்த டிரைவர் மீது வர, குமட்டிக்கொண்டு வந்தது காமினிக்கு...மீண்டும் ஒருமுறை தன்  ஹேன்ட் பேக்கை திறந்து பார்த்தாள்..அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் உள்ளிருந்த கிறிஸ்டல், வெள்ளை ஒளியை அவள் கண்ணில் பாய்ச்சியது...


நேரம் : இரவு 11:05


"என்ன சிவா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? இன்னும் கால் வரல" என்று தன் வழுக்கை தலையில் இருக்கும் வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டே கேட்டார் பரந்தாமன். "அதான் எனக்கும் தெரிலே ...வழக்கமா 8 மணிக்கு ஆபீஸ் லே இருந்து கெளம்பிடுவா...இன்னிக்கு கண்காட்சியோட கடைசில் நாளு கொஞ்சம் லேட் ஆகும்,  வெளியெ வந்ததும் கால் பண்றேன் சொன்னா.. நான் கால் பண்ணி பாக்கவா?" என்று கேட்டான் சிவா.. " கொஞ்சம் பொறு சிவா..பார்ப்போம் " என்று கூறி சுற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தார் பரந்தாமன். பெரிய முள்ளும், சின்ன முள்ளும் பொறுமையாய் நகர்வந்தைக் கண்டு கடுகடுத்தது அவரது முகம்.

ஆடம்பரமாய் வளர்ந்திருந்தது  அந்த நான்கடுக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்.. அதன் நான்காவது மாடியில் தான் பரந்தாமனும் சிவாவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்..அவர்களின் அமைதியை கலைத்தது அந்த டெலிபோன்..பரந்தாமன் அவசர அவசரமாக ரிசிவரை எடுத்து  "ஹெலோ...டாக்டர் பரந்தாமன் ஹியர்" என்று நிதானமாக கூறினார். "டாக்டர் காமினி பேசறேன்...கிறிஸ்டல் என் கிட்ட பத்திரமா இருக்கு..நம்ம பிளான் படி, நாளைக்கு நீங்க சர்ஜரிக்கு ரெடி பண்ணிடுங்க...எல்லாம் நல்லபடி முடிஞ்சா போதும்..." என்றாள் காமினி மறுமுனையில்..."காமினி ஒன்னும் பயப்படாதே...என்னோட ஆராய்ச்சி கண்டிப்பா வெற்றி பெரும்...உன் கிட்ட இருக்கறது சாதாரன கிறிஸ்டல் இல்லை. மருத்துவ குணம் கொண்ட அபூர்வ கிறிஸ்டல். அதுலே இன்ப்ரா ரெட் லைட் செலுத்தி அதிலிருந்து வரும் ஒளியின் மூலம் சிவாவோட கணையப் புற்று நோயை கண்டிப்பா குணப் படுத்திடலாம்..." நீ சிவாவ அழைசிகிட்டு நேரா கிளினிக் வந்திடுமா " என்றார் பரந்தாமன். "சரிங்க டாக்டர்...நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சிவா அழைச்சிட்டு வந்துடறேன்" என்றதும் பரந்தாமன் ரிசிவரை வைத்தார்.

"சிவா காமினி இப்போ உனக்கு ட்ரை பண்ணுவா பார்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அடடா மழைடா அட மழைடா" என்று சிவாவின்  நோக்கியா பாடியது..."ஹே காமினி. என்னாச்சு? இஸ் எவரிதிங் ஆள் ரைட்?" என்றான் சிவா. மறுமுனையில் காமினி "நான் வந்த பஸ் பெரிய ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...பட் எனக்கு பெருசா ஒன்னும் இல்லை..ஐயம் ஓகே.ஏகப்பட்ட போலீஸ் ஹாஸ்பிடல்ல...சமாளிச்சு வர லேட் ஆயிடுச்சு..நீங்க எங்கே இருக்கீங்க? " என்றாள். "நான் இன்னும் வீட்லே தான் இருக்கேன். ஜஸ்ட் உன்னோட காலுக்கு தான் வெயிட்டிங். இன்னும் டென் மினிட்ஸ் லே  திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட் லே இருப்பேன் டா ...பாய் டியர் டேக் கேர் " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பரந்தாமன் அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்தார்.."சா ...சார் ..." என்றான் சிவா நடுக்கத்துடன் ...அவனது கையில் துப்பாக்கி... 

நேரம் : இரவு 11:25


அடையார் IIT அருகே, வயர்லெஸ் ஏதோ முனுமுனுக்க அதனை கவனிக்காமல்  சங்கர் தனது காரை மெதுவாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். இரவின் அமைதியில் எங்கும் நிசப்தம் நிரம்பி இருந்தது...தூரத்தில் தெரு நாய்களின் சத்தம்...ரோட்டோரத்தில் ஓர் வெள்ளை மாருதி அதன் முன்னே கருப்பு நிற ஸ்கார்பியோ நந்தியாய் நின்று கொண்டிருந்ததை பார்த்து, சங்கரின் கவனம் அங்கே திரும்பியது...ஏதோ தப்பு நடப்பதாய் உணர்ந்த சங்கர், தன் காரில் இருந்த ஒலி பெருக்கியில், "ஹலோ வெள்ளை மாருதி TN 9318 என்ன அங்கே?  கருப்பு ஸ்கார்பியோ வண்டி எடு" ன்னு அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, கையில் பெரிய அருவாளுடன் ஒருவன் ஓடிச் சென்று ஸ்கார்பியோவில் தொற்றிக் கொள்ள, விருட்டென்று கார் சீறிப் பாய்ந்தது.

வேகமாக காரை விட்டு கீழெ இறங்கிய சங்கர் மாருதி காரில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் பிணமாகியிருப்பதை கண்டான். சற்றும் தாமதிக்காமல், ஓடிசென்று   தன் காரை கிளப்பிய அதே சமயம், அவனது கை வயர்லசை தேடி எடுத்தது. "ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர்.."அடையார் IIT கிட்டே 45 வயசு ஆள அசால்ட் பண்ணிட்டு அக்கிஸ்ட்டு கருப்பு நிற ஸ்கார்பியோ லே தப்பிச்சு போறாங்க...ஐ நீட் மெடிக் அட் IIT...ஆள் இருக்கான போயிட்டான பாருங்க...நான் அக்கிஸ்ட்டுகல பாளோ  பண்றேன்..ரெண்டு போலீஸ் பற்றோள அடையார் ஏரியா லே ரெடி பண்ணுங்க  ஓவர் " என்று சொல்லிக்கொண்டே சைரன் ஆன் செய்தான்...சைரன் ஒலி நகரையே உலுக்க ஸ்கார்பியோவை  துரத்தியது சங்கரின் போலீஸ் கார்.

நேரம் : இரவு 11:55


திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட். சாலை சற்றே வெறிச்சோடிக் கிடந்தது.  சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த ஒன்றிரண்டு பேர் நடுவே சிவா, ஒரு கையில் கிங்க்ஸ் சிகரெட் மற்றொரு கையில் டி. கடைக்காரிடம் இருபது ரூபாய் கொடுத்து மீதி சில்லறையை சரி பார்க்காமல் தன் ஜீன்ஸ் பான்டில் நுந்திக் கொண்டே சற்று தொலைவில் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டியை நெருங்கினான் சிவா. டிரைவர் சீட் ஜன்னல் வழி தலை விட்டு "சார் உங்களுக்கு டி சொல்லட்டுமா?" என்று கேட்டான் சிவா. " வேண்டாம் சிவா.. அவ வர நேரம்..சீக்கிரம்  மேட்டர முடிச்சிட்டு கெளம்பலாம். அப்புறம் சொன்னது நினைவிருக்குள? அவ கொண்டு வரர்து அவளை பொறுத்தவரை ஒரு சாதாரண  கிறிஸ்டல், ஆனால் நமக்குத் தான் தெரியும் அதன் மதிப்பு. அலெக்ஸான்ரிட் - டைமண்டை விட பல மடங்கு மதிப்பு வாய்ந்த ஒரு அபூர்வ கல். புரிஞ்சுதா? புத்திசாலித்தனமா நடந்துக்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆட்டோ ரோட்டோரம் வந்து நின்றது.

ஆலிவ் நிற பூனம் சேலையில் உள்ளிருந்து இறங்கினாள் காமினி. ஈரம் சுமந்த காற்று அவள் மேல் வீச, காதோரம் இருந்த அவள் கூந்தலை பின்னுக்கு தள்ளிக்கொண்டே அவள் கண்கள் யாரையோ தேடியது."ஹாய் காமினி...இங்கே " என்ற சிவாவின் குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள். "ஹாய் சிவா, உடனே கிளினிக்கு  கெளம்பலாம்...நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நமக்காக அவர் வெயிட் பண்ணுவார்.." என்று மட மடவென பேசிய காமினியை இடை மரித்த சிவா "ஹே வெயிட் வெயிட் ...கிறிஸ்டல் எங்கே?" என்றான். "பத்திரமா ஹேன்ட் பேக்லே இருக்கு டா...உனக்கு உடம்பு நல்லபடி ஆகணும்னு தான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தேன். சர்ஜெரி முடிஞ்சதும், யாருக்கும் தெரியாம  திரும்ப இந்த கிறிஸ்டல கொண்டு போய் எடுத்த இடத்துலேயே வைகக வரை எனக்கு டென்ஷன் தான்" என்று சொல்லிக் கொண்டே கூழாங்கல் போலிருந்த அந்த கல்லை கையில் எடுத்தாள் காமினி. "எல்லாம் சரிதான்..ஆனால் திரும்ப வைக்கணும்ங்கற நெனப்ப விட்டுடு காமினி. எனக்கு அது வேணும். அது வெறும் கல் இல்லை வைரம்..வைரத்தை விடவும் உயர்ந்தது  " என்று சொல்லிக் கொண்டே அவனது கைகள் முதுகு பக்கமாய் போவதைக் கண்டாள் காமினி அவள் கிறிஸ்டலை மீண்டும் ஹேன்ட் பேக்லே போட்டாள்.  .அடுத்த வினாடி சிவாவின் கையில் துப்பாக்கி,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. கலங்கிப் போனாள் காமினி. " சிவா என்ன விளையாட்டு இது. உன் மேல் கொண்ட காதலால் நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த கிறிஸ்டல கொண்டு வந்தேன் தெரியுமா? எத்தனை போலிசை சமாளிக்க வேண்டியிருந்தது தெரியுமா? " என குரல் தழு தழுக்க கூறிய காமினியின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.  அவர்களின் சற்று நேர அமைதியை கலைக்கும் வண்ணம், காரை விட்டு இறங்கிக் கொண்டே  “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். "டா... டாக்டர்...நீ..நீங்களா?" மேலும் அதிர்ச்சி அவள் கண்களில், இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்தவண்ணம் தார் ரோட்டை விட்டு ஓரமாய் இறங்கினாள் காமினி. தூரத்தில் சைரன் ஒலி கேட்க திகைத்து போயினர் மூவரும்...சடாலென்று பரந்தாமன் காரில் ஏறி "சிவா..பேக்கை பிடிங்கிட்டு அவளை போட்ரு..." என்று சொல்லி முடிப்பதற்குள், நிலை தடுமாறி அங்கு வந்து கருப்பு நிற ஸ்கார்பியோ சிவாவுடன் ஹோண்டா சிட்டி யையும் அடித்து தூக்கியது... "ஐயோ..."  என்ற அலறல் சைரன் ஒலியை மீறி ஒலித்தது... 

நேரம் : இரவு 12 :05


"ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர். திருவான்மியூர் கிட்ட ECR  ரோட்லே ஆக்சிடென்ட்" என்று சங்கர் அறிவித்துக் கொண்டிருக்க இருட்டில் சென்று மறைந்தாள்  காமினி..இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்திருந்தது.....
Author: Sathish
•11:21 PM


இவன் பேரை சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும், கடலும் கை தட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்....அட்ரா ...அட்ரா இது தலைவருக்கான வரிகள் என்பதில், சிறு சந்தேகமும் இல்லை...படம்யா...இது படம்யா...தலைவா...பின்னிட்டே...அட்டகாசம்...கன கச்சிதம ஒன்னொன்னும் யோசிச்சு அசத்தியிருக்கு எந்திரன் டீம்....கொஞ்ச நெஞ்ச எதிர்ப்பார்ப்பா இருந்தது இந்த படத்திற்கு...கலாநிதிமாறனுக்கு கூட இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது...எனக்கு அவ்வளவு டென்ஷன்...200 % அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை...

படத்தோட கதை என்ன என்பதை அனைவரும் அறிவர்...ப்ளாக் லே, reviews   எல்லாத்துலேயும் இந்நேரத்துக்கு போட்டு முடிச்சத திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...ஒரு ரசிகனா, தலைவரோட வெறியனா என் கண்ணோட்டத்துல எந்திரன் எப்படி இருக்குனு பகிர்ந்துக்கணும்...அதற்காகத் தான் இந்த ப்ளாக்...

இப்போ முளைச்ச சின்ன பயலுங்க, விடலை பசங்கல்லாம் இமேஜ், ஹீரோ அறிமுகம், பஞ்ச் டயலாக் அது இதுன்னு முக்கியத்துவம் கொடுக்கற காலத்துல...நம்ம தலைவரோட அறிமுகம் படு சிம்பிள் இதுல...ச்சே ...சான்ஸ் இல்லை...தலைவர் நெனச்சிருந்தா "எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, இன்ட்ரோ லே மாஸ் வேணும் ... இப்படித்தான் வேணும் அது இதுன்னு சொல்லி ஸ்கிரிப்ட் லே, direction   லே  பல இடங்களில் தலை இட்டிருக்கலாம்...100 % ஒரு இயக்குனரின் சொல்படி நடந்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...மனசு வேணுமையா...சின்னப்ப்சங்கல்லம் நாலஞ்சு இங்க்லீஷ் படத்த காமிச்சு இத மாதிர் ஷாட் வை அத மாதிரி வைன்னு அட்வைஸ் பண்ற காலத்துல இப்படி ஒரு மனிதரா? சத்திமா தலைவர தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க முடியாது...

பொதுவா ரெண்டு ஹீரோ இருக்க சப்ஜெக்ட் லே உன்னை யார் மேலோங்கி இருப்பது என்பதுல நெறைய பிரச்சனை வரும்...அந்த போட்டிலே டைரெக்டர் தல தான் உருளும்...தலைவர் பல படத்துல சக நடிகர்களிடம், விட்டுக் கொடுத்து நடிப்பது ஊரன்ரிஞ்ச விஷயம்....இப்போ மனிஷங்களையும் மீறி ரோபோ கராச்டருக்கு விட்டு கொடுத்து நடிசிருகிறார்...ஒரு எடத்துல கூட விஞ்ஞானி ரஜினி தன் ஹீரோ தனத்தை காமிக்கவே இல்லை...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த யதார்த்தம்...ஒரு சீன் லே கலாபவன் மணி இடம் விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு சண்டை காட்சி வைத்திருந்திருக்கலாம்..ஆனால் கதைக்கு தேவை இல்லை என்பதால் அதுவும் தவிர்க்கப் பட்டிருக்கு....டைரெக்டர்களை ஆட்டி வைக்கும் இக்காலகட்டத்தில் இப்படி ஒரு முன்னணி நடிகரா?

விஞ்ஞானி ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, ஒரு பயம் கலந்த ஒரு பணிவு,   சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை...நடை, ஸ்டைல், body language ..நல்ல வித்தயாசத்தை காமிச்சிருக்கார்...இந்த வயசுல இப்படி ஒரு சுருசுருப்பா? தல பின்றீங்களே.....காதல் அணுக்கள் பாட்டில் தலைவர் ஒரு நடை நடப்பார். வாவ்.....சம நடைங்க அது...ஐயோ அணு அணுவா ரசிச்சேன் நான்...A .R .ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை...

ஷங்கர் சார் hats ஆப் .... ஒரு Sci -Fi படத்தை, மக்களுக்கு புரியற மாதிரி, தெளிவா, தலைவரோட usual படம் போல மசாலா தடவாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகத் தெளிவா பண்ணி இருக்கீங்க...கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்...ஐஸ்வர்யா அழகு, நளினம் எல்லாம் நெறஞ்ச ஒரு நிறைகுடம்...நல்ல முதிர்ச்சியான நடிப்பு...படத்துல தேவை இல்லாத விஷயம் என்றால், சந்தானம் கர்னாஸ்...காமெடி சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லாத போது, அசிஸ்டண்டா வேற யாரவது போட்டு தள்ளி இருக்கலாம்...தேவை இல்லாத மற்றொருவர் கலாபவன் மணி....

இவ்வளவும் சொல்லிவிட்டு நான் படம் போன அனுபவத்தை பற்றி சொல்லாம எப்படி? என் வீட்டிலிருந்து சுமார் 200 km தூரம் போய் பார்த்த படம் இது...so மொத்தம் 400 km இன்னைக்கு  நான், என் மனைவி அம்மா travel  பண்ணோம்..அங்கே தியேட்டர் லே நம்ம பசங்க தலைவரோட படம் போட்ட tshirt போட்டு கலக்கினானுங்க...நாம வழக்கம் போல விசில் பின்னி எடுத்தோம்..தியேட்டர் சும்மா அதிருசு லே......தலைவருக்கு, தலைவர் படத்துக்கு A , B ,C ன்னு கிளாஸ் எல்லாம் இல்லை...எல்லோருமே அமைதியாகச் சென்று ஆரவாரத்துடன் தான் படம் பார்ப்போம்...

படம் 100 %  ஹிட் ...சூப்பர் ஸ்டார் படம், ஸ்டைல் , அரசியல், பஞ்ச் டயலாக் அது இதுன்னு எதிர்ப் பார்க்காம தலைவர் நடிச்ச ஒரு science and fiction படம்னு போங்க..உங்க எதிர்ப்பார்ப்பு கொஞ்சமும் குறையாம படத்த ரசிப்பீங்க ... தமிழ் சினிமா வரலாற்றில் எந்திரன் ஒரு மைல் கல்....ஒரு புதிய அனுபவம்...




Author: Sathish
•10:45 AM
பிரபலமாயிட்டாலே இப்படிதான்...வாசகர்கள், நான் அடிக்கடி பதிவு எழுதணும்னு  ஆசைப் படுகிறார்கள்... நமக்குத்தான் நேரமில்லை...[உனக்கு வர ஒன்னு ரெண்டு கமெண்டுக்கு தேவையா இந்த விளம்பரம்? ஹி ஹி ஹி ]

இங்கே [US] வந்த அம்மா அடுத்த மாதம் தாயகம் திரும்புகிறார்கள்...அதனால, ஷாப்பிங் லே கொஞ்சம் பிஸி...ஒரு நாலஞ்சு வாரம் முன்னாடி, என்னோட தங்கச்சிக்கு ஒரு MP3 பிளேயர் வாங்கி இருந்தேன்...அதுல எதோ கோளாறு...இங்கே online லே வாங்கறது,அதோட return பாலிசி மிகவும் பாராட்டத்தக்கது...வாங்கிய பொருள் சரி இல்லையென்றால், 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்துவிடலாம்...இதற்கு காரணம் கூட தேவை இல்லை...ஆனால், இதை நம்ம ஊரு மக்கள் படு மட்டமாக பயன்படுத்துகிறார்கள்...வாங்கி அதனை பத்து பதினைந்து நாள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுவது அப்பட்டமானது...அதுவும் shortterm லே வரவங்க பெட், தலையணை எல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு return   கொடுத்துடரானுங்க... [ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?]  சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... நான் வாங்கின MP3 பிளேயர்லே சின்ன பிரச்சனை கடைசிவரை ON பண்ணவே முடிலே ...ஹி ஹி ஹி ..return பண்ணுவதற்காக வாங்கின கம்பனிக்கு பேசினதும், அவங்க எல்லாம்  விசாரித்து விட்டு எனக்கு ஓரு 'Packaging ஸ்லிப்' அனுப்பி வைத்தார்கள்... நான் செய்ய வேண்டியதெல்லாம் ஓரு டப்பாலே என்னோட MP3 பிளேயர் போட்டு இந்த ஸ்லிப் அதன் மேல் ஒட்டி போஸ்ட் ஆபீஸ்லே கொடுக்கணும்....எல்லாம் ரெடி பண்ணிட்டு போஸ்ட் ஆபீஸ் கெளம்பலாம்னு வெளியே வந்தா இந்த ஊரு போஸ்ட் women அவங்களுக்கே உறிய ஒரு மினி வேன்லே வந்து இறங்கினாங்க...இந்த ஊர்லேதான் எல்லாம் ஈசியாச்சேனு அவங்ககிட்டயே கொடுத்தா, வாங்கி அத ஸ்கேன் பண்ணி மேட்டர் முடிசிட்டு  போய்டே இருக்காங்க...என்னோட வேலை படு சுலபமா முடிச்சுது...அப்போ எனக்கு நம்ம ஊரு போஸ்ட் Man ஞாபகம் வந்துடுச்சு... 

சார் போஸ்ட்... நான் சின்ன வயசில அதிகமா கேட்டிருக்கேன்...காக்கி கலர் uniform  லே, சைக்கிள் லே பெல் அடிச்சிட்டு வர எங்கே தெரு postman குரல் அது... இப்போ எங்கே போச்சி அந்த குரல்? கடைசியா நான் எப்போ லெட்டர் எழுதினேன்? எனக்கு எப்போ லெட்டர் வந்துச்சு? கணினி மயமாகிவிட்ட காலகட்டத்தால் மின் அஞ்சல் படு பிரபலமாகி விட்டது...பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி, பொங்கல் என அணைத்து பண்டிகை சுபகாரியங்கள் எல்லாவற்றிற்கும் மின்வாழ்த்துகளும், மின்அஞ்சல்களும் பரிமாறிக்கொள்ளும் காலமாகிவிட்டது... ஒருத்தன் மண்டைய போட்டா கூட மின் அஞ்சல் வழியாதான் ஆறுதல் சொல்றானுங்க....அதுதவிர,   கிராமபுரங்கள் உட்பட வீட்லே  நாலு பேரிருந்தாலும் குறைந்தது 6 செல் போன், [ கேட்டா official , பர்சனல் சொல்றாங்க...]தொலை தொடர்பு நவீனமயமாகிவிடதால் இந்த தபால் உலகம் சற்றே நலிந்துவிட்டதோ?  

கடிதம் எழுதுவது ஒரு கலை. அதுவும் தமிழ்லே எழுதுவது ஒரு அற்புதமான உணர்வு... தொலைவிலிருப்பவர்கலை அருகாமையில் காட்டும் அழகிய கண்ணாடி...நான் சின்னதுலே ஏன் பாட்டி வீட்டுக்கு, நாகப்படினதிளிருந்த என்னோட அக்காவுக்கு  கடிதம் எழுதுவேன், அதுதவிர என்னோட மாமா சிங்கப்பூர்லே இருந்தார்...அப்போ அடிக்கடி நான் கடிதம் போடுவேன்.... அக்காவுக்கு எழுதும்போது இண்டு இடுக்கு ஒரு இடம்விடாம எழுதி கடைசியா மடிக்கற இடத்துலேயும், பக்கத்துக்கு வீடு ஆன்டியெ மிகவும் கேட்டதாய் சொல்லவும்னு எழுதி முடிப்பேன். [அட கர்மம் புடிச்சவனே !! அந்த வீட்லே அங்கிள்லே இல்லையா? னு கிண்டல் பண்றவன பர்த்தி எனக்கு கவலை இல்லை ஹி ஹி ஹி ]

என் பேர் போட்டு வர கடிதங்கள் அனைத்தும் நான் பத்திரப்படுதியுள்ளேன்...அதில் பல Dr  சதீஷ் M.B.B.S. என போட்டு வரும்....இப்போ நினைத்தாலும் எனக்கு சிப்பு சிப்பாவருது...8th Standard வரை நான் நல்லதான் படிச்சேன்...இருந்தாலும் Dr  சதீஷ் னு சொல்றது எனக்கே ஓவரா தான் தெரியும்..[ இப்போ அந்த லெட்டர் போட்டவங்கள தண்டிக்க ஒரே வழி என்னோட 12th மதிப்பெண்களை xerox  எடுத்து அனுபறது தான்....] நான் சொன்னேன் லே என்னோட மாமா ஒருத்தர் சிங்கப்பூர் லே இருந்து அடிக்கடி கடிதம் போடுவார்னு....அந்த கடிதம் வர பேப்பர், ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் நான் அதை பள்ளிக்கு எடுத்து சென்று பசங்களுக்கெல்லாம் காமிச்சு பெருமை அடிச்சிப்பேன்.... என் friend னு சொல்லிக்கற enemy ஒருத்தன், எனக்கு போட்டியா அவனோட அத்திம்பேர் மயிலாப்பூர் லே இருந்து எழுதிய கடிதத்த கொண்டுவருவான்...ரொம்பவும் வெகுளியான நான் மயிலாப்பூர, சிங்கப்பூர் மாதிரி ஒரு வெளிநாடுனு நெனச்சி பல தடவ ஏமாந்திருக்கேன்...[தூ...ரொம்ப பெருமை...பப்ளிக்கா சொல்ற விஷயமா டா இது...]...

ஆள் வளர, வளர சோம்பேறித்தனமும் கூடவே வளர்ந்து, நாளடைவில் கடிதம் எழுதறது ரொம்பவே குறைந்துவிட்டது...கல்லூரி இரண்டாம் ஆண்டுக்குப்பிறகு தமிழில் எழுதற சந்தர்ப்பமும் ரொம்பவே குறைந்து விட்டது.....என் தலையெழுத்து நல்ல இருக்கோ இல்லையோ...என் கையெழுத்து நல்லாவே இருக்கும்.....ரொம்ப நாள் எழுதாததால என் கையெழுத்து சின்னாபின்னமாகி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் என் கையெழுத்து அப்படியேதான் இருக்கு...அதை maintain பண்ண  நானும் பல தடவ டைரி எழுதனும்னு ஆரம்பிச்சு, பல டைரியெ ஜனவரி 1 லெ  ஆரம்பிச்சு  பொங்கலுக்குள்ள ஏறக்கட்டி இருக்கேன்...கொஞ்ச நாளா தொடர்வது இந்த மின் திரட்டுக்கள்தான்... இதுவாவது தொடர்ந்தால் சரி....ஆனால், நான் ஒன்றில் மட்டும் படுத் தெளிவாய் இருக்கேன்....கோடானகோடி தமிழ் வாசகர்களுக்காகவும், என் ப்ளாக்ன்  ரசிகர்களுக்ககவும் தொடர்வேன் என் கலைப் பணியை....அள்ளி தர நான் ரெடி ....துள்ளிப் பி[ப]டிக்க நீங்க ரெடியா?  [நோ ...நோ badwords...]


Author: Sathish
•9:09 AM
வழக்கம் போல Sep 8th காலை எழுந்து thatstamil.com அலசுகையில் அதிர்ச்சியான செய்தி...நடிகர் முரளி மாரடைப்பால் இறந்தது...அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சக மனிதர், நன்கு பரிட்ச்யப்பட்ட நபர் திடீரென இறந்தது மனதை வெகுவே பாதித்தது...

ஒரு சில வாரங்கள் முன்புதான் Coffe with Anu நிகழ்ச்சியில் அவரையும். அவரது மகன் பேட்டியும் பார்த்தேன்...சின்ன வயசு, ஆரோக்யமான உடல் வாகு...அவருக்கா மாரடைப்பு? பூவிலங்கில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, மணிரத்தினத்தின் முதல் படமான, பகல் நிலவில் பலரது உள்ளங்களை கவர்ந்தவர் முரளி...அதன் பிறகு சில தொய்வு அவரது திரை உலக வரலாற்றில் இருப்பினும் மீண்டும் புது வசந்தம் மூலம் திரையுலகில் தனக்கோர் இடத்தைப் பிடித்தார் முரளி.

மைக் என்றால் மோகன் என்பதுபோல் கல்லூரி மாணவன் என்றல் நினைவுக்கு வருவது முரளி தான்....காதல் கதைகளில் சற்றே புதுமையான, வித்யாசமான கதைகள் கொண்ட படங்களை தமிழுக்கு தந்தவர் முரளி... இதயம் படத்தை ரசிக்காத தமிழ் இதயம் இருக்குமா? அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகான சிரிப்பும் இன்னும் நம் கண்முன்னே நிற்கிறது...

திரை உலக வாழ்வில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்தவர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். தன் மகன் அறிமுகமாகி அவரது வளர்ச்சியை காண மனுஷன் எவளவு ஆசை பட்டிருப்பார். அதற்குள் இந்த திடீர் சம்பவம் திரை உலகத்தினரை மட்டும் அல்ல பலரது உள்ளங்களையும் கசக்கி இருக்கும்....அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும்  தைரியத்தை தமிழ் நெஞ்சங்கள் தரட்டும்....முரளி அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்... 
Author: Sathish
•9:12 PM
 சால்ட்...
அம்மா US  வந்த பிறகு நானும் என் மனைவியும் தியேட்டர் சென்று ஆங்கிலப் படம் பார்க்க சந்தர்பம் இல்லை..2 மாதத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த (ரசித்த) படம் சால்ட்.... பொதுவாகவே ஏஞ்சலீனா ஜுலி படம் என்றாலே ஆக்க்ஷன் தான்...சால்ட் இல் அது கொஞ்சம் கூட என்றே சொல்லலாம்...முதல் சீன்லே கொரியன் போலிசாரால் இண்டேரோகட் இல் கடுமையாகத் தெரியும் ஏஞ்சலீனா அடுத்த சீன்லே , கணவர் உதவியுடன் விடுதலையாகி வெளியே நடந்துவரும் பொழுது ததும்பி அழ முற்படுகையில் சாதாரண பெண்ணாக தெரிகிறார்...அமெரிக்காவில்  CIA agent ஆக  பணிபுரிவதாய் நகரும் கதையில், விசாரணைக்காக வரும் ரஷ்ய உளவாளி, அமெரிக்கா வரும் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் பொருட்டு ரஷ்யாவை சேர்ந்த பெண் உளவாளி அமெரிக்காவில் ஊடுருவி இருப்பதாகவும், அது ஏஞ்சலீனா என்றும் கூறுகிறான்...அப்போது சூடு பிடிகிறது கதை...அடிதடி சேஸிங் னு அம்மணி எல்லாத்துலேயும் பின்னி எடுக்கறாங்க...தான் ஒரு டபுள் agent என்ற குற்றச்சாட்டு, இதற்கிடையில் கடத்தப்பட்ட தன் கணவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி னு கதை வேகமாக நகருகிறது...ஆங்காங்கே சில twist and turns...

ஏஞ்சலீனா சற்றே வயதாகி தெரிகிறார்...கடைசியாக தியேட்டர் சென்று நான் பார்த்த ஏஞ்சலீனா படம் Wanted .... 2yrs இருக்கும் அந்த படம் பார்த்து...அதுலே அக்கா சூப்பர் figure .. [ வடிவேலுக்கு பிறகு இந்த dialgue சொல்றது நான்தான்...ஹி ஹி ஹி ] இந்த கதபாத்திரதிற்காக  ஏஞ்சலீனா நிஜ உலக CIA agents  உடன் பழகினாராம்...அவர்களுடன் பழகிய அனுபவத்தை பேசுகையில், "அவர்களிடம் எடுத்த குறிப்புகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, தன் வேலைப் பற்றி சொந்த குடும்பத்தாரிடம் கூட  பேச முடியாத அளவு அவர்கள் தனிமைப் பட்டிருகிறார்கள்..அவர்களின் தியாகம் குறிப்பிடப் படவேண்டிய விஷயம்" என்று கூறியுள்ளார்...சால்ட்.. ஆக ஓஹோ னு சொல்லக் கூடிய படமாக இல்லாவிட்டாலும், நன்றாக, விறு விருப்பாகத்  தான் இருக்கிறது...

எந்திரன் ஆடியோ ரிலீஸ்...

தலைவரோட எந்திரன் ஆடியோ ரிலீஸ் function மலேசியாவில் அரங்கேறியதை online லே பார்த்தேன்...பாட்டு அசத்தல்... A .R ரஹ்மான் இசை இளமை ததும்ப ததும்ப இருக்கு...பாட்டில் மட்டும் இல்ல தலைவரோட stills கூடத்தான்...simplela  வந்திருந்தாலும், தலையோட டிரஸ்  சூப்பர் இருந்தது...விவேக் சில எடத்துல மொக்கை போட்டாலும் நல்ல தான் ப்ரோக்ராம் ப்ரெசென்ட் பண்ணார்...ஐஸ்வரிய அழகு...decentaa டிரஸ் பண்ணி இருந்தாங்க...ஒருவருடைய நடை உடை எவள்ளவு முக்கியம் பாருங்க அவங்கள பர்த்தி பேச....ஷங்கர் பக்கத்துல ஒரு அவதாரம் உட்கார்ந்திருத்தது...[ஸ்ரேயா...] உள்ள போடவேண்டியதோட  saree கட்டி வந்திடுச்சு...கருமம்...அத எவன்யா முன்னாடி உட்கார வச்சான்....

கலாநிதிமாறன்...முதல் முறை பார்த்தேன்..எவளவு பெரிய நிறுவனத்தின் தல ....ரொம்ப சின்ன வயசு.....A .R ரஹ்மான் , ஐஷு, ஷங்கர்,வைரமுத்து  எல்லாரும் பேசினாங்க ...டீம் ரொம்ப ஹர்ட்வோர்க் பண்ணி இருக்காங்க...பெரிய ஹிட் என்பதில் சந்தேகமில்லை...

stills , தலையோட hairstyles , டிரஸ் னு செமைய இருந்தது...Trailor பார்த்து அசந்துட்டேன்... சின்ன வயசில இருந்து நான் ரஜினி யோட வெறித்தனமான ரசிகன்...இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு...மனிதன் படம் பார்த்து...கடைசி சீன்லே தல குண்டு தொங்கவிட்டு ஒரு leather டிரஸ் போட்டு வருவார்...அந்த டிரஸ் வேணும்னு [குண்டோட ]அடம் பண்ணி எங்கப்பாவ தெனரடிசிருக்கேன்...பல தடவை socks உள்ள pant போட்டு டியூஷன் சார் கிட்ட  அடி வாங்கி இருக்கேன்...ரெண்டு மூணு டம்ளர் தண்ணியே ஷர்ட் லே ஊத்திகிட்டு கைகளை மேல தூக்கி "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாளும்" பாட்ட பாடி ஆட்டம் போட்டிருக்கேன்...இவ்வளவு பண்ணிட்டு US வந்தஉடன் தல படத்த எப்படி மிஸ் பண்றது? இந்த படத்துக்கு நான், என் மனைவி அம்மா first டே போக பிளான் பண்ணி இருக்கோம்....தலைவரோட படத்துக்கு நான் பக்கத்துக்கு state போக வேண்டியிருக்கு...இருந்தாலும் பரவா இல்லை...தலை படத்த பார்த்துடுவேன்...
Author: Sathish
•10:32 AM
சமீபத்தில் நான் படித்த கல்லூரி பற்றிய செய்தியை கேட்டதும் ஆடிப் போனேன்...உலகின் நம்பர் 1  Chess Player   "Nitin .S ", ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நான் படித்த SSN  பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்து அதுல சேர்ந்திருக்கிறாராம். அண்ணா பல்கலை கழகம் போன்ற முன்னணி கல்லூரிகள் இருந்தும், முதல் இடத்தில இருக்கும் (விளையாட்டில் ) ஒரு மாணவன் தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்தது, Single Window (Sport Quota )வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விஷயத்தை கேள்வி பட்டதும், எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.. என் கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் இந்த நேரத்தில் இந்த பதிவின் மூலமாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

SSN கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் வசந்த காலம். முதன்முதல் அங்கு அடிவைத்த நாள் முதல் கடைசியாக கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்த நாட்கள் அனைத்தும் தேன் துளிகள். குறிப்பாக நான் படித்த கணினித்துறை....என்னுடைய seniors கொஞ்சம் படிப்பாளிகள்; கெடைக்கற நேரத்துல ஒன்னு படிப்பானுங்க இல்ல கடலை...சும்மா வரு வருன்னு தீய தீய வறுத்துத் தள்ளுவானுங்க..பிரச்சனை அது இதுன்னு போகாம silentaa  காலத்த ஓட்டி கெலம்பிட்டாங்க...ஆனா நம்ம  batch பசங்க ஒன்னுனுளையும் பின்னி பெடேலேடுப்பாங்க....படிப்பு, வெளையாட்டு, சண்டை,  culturals மற்றும் கடலை உட்பட (நம்ம division ஆச்சே....)தப்போ ரைட்டோ முப்பது பேரும் சேர்ந்துதான் செய்வோம்.... வாத்திகளும்  சரி,  நாங்க பண்ற அட்டுழியத்தை கண்டிச்சாலும் எங்க batch அவங்களுட favourite தான்...

எங்க டைரக்டர் க்கு நான் ரொம்பவும் செல்லம்..செல்லம் னா அப்படி இப்படி இல்ல, கைலே துப்பாக்கி இருந்தால் சுட்டு தள்ளி இருப்பார்... First semesterle ஆரம்பிச்ச பிரச்சனை..இன்னிக்கும் நான் அவரை எங்கு பார்த்தாலும், ஒரு MN நம்பியார், வீரப்பா, அசோகன் இவங்கள பார்க்கற மாதிரியே பார்ப்பார்...ஆனா அதெல்லாம் பெருசா எடுக்காம, நான் பாட்டுக்கு என்னோட அலப்பறை, ரௌசு, அடிதடின்னு காலத்தை ஓட்டி, டைம் கெடைக்கும் போது அப்பன், ஆத்தா ஆசைக்கு கொஞ்சூண்டு படிக்கவும் செஞ்சேன்..
சாதாரணமாவே ரௌசு அதிகம் பண்ணுவோம்; இதுல மத்தவங்க கவனம் செளுத்துனா கேட்கவா வேண்டும்? சினிமா லே வர கல்லூரி கலாட்டாக்கள் லே முக்கால்வாசி நான் பண்ணிட்டேன்...(ரொம்ப பெருமை...த்து....  ) இன்ஜினியரிங் காலேஜ் என்பதால் எல்லோரும் formals லே  வரும்போது, என்னோட batch லே எல்லாரும் அரசியல்வாதி மாதிரி, வெள்ளை வேட்டி,சட்டை லே போனது, பஸ் டே கலாட்டா, ராகிங் , ஸ்போர்ட்ஸ் டே அடிதடி னு ஒன்னு விடல...

போனமுறை இந்தியா சென்றபோது என் கல்லூரிக்கு சென்று, நான் வழக்கமா போற ரூட் 7  பஸ், கான்டீன், hostel, லைப்ரரி (அங்கே ஏன் நீ போனேன்னு நெனைபீங்க...தடியா ரெண்டு புக் கைலே வச்சா scenaa இருக்கும் னு பேர் கூட பார்க்காம பல தடவ எடுத்திருக்கேன்...ஹி ஹி ஹி ) லேப் எல்லா இடங்களிலும் போய் பார்த்தேன்...என்னோட சகா செந்தில் உடன் வந்திருந்தான்...நான் பண்ண ரௌசு எல்லாத்துலேயும் இவன் பங்கும் இருக்கும்....எவ்வளவு தான் படிச்சாலும், டெஸ்ட் / assignment  எதுவானாலும் சொன்ன தேதிலே கொடுக்காம திட்டு வாங்கி வேற date லே கொடுக்கறதுல பேர் போனவங்க நாங்க...இன்ஜினியரிங் departments மத்தியிலும் சரி எங்க juniors மத்தியிலும் சரி நாங்க ஒரு ஹீரோககளாகவே  வாழ்ந்த காலம் அது.....இனிமையான நினைவுகள், இனிமையான உறவுகள்...தனிமை எனும் வெயிலில்  காயும் போது, நடபு எனும் நிழலின் அருமை தெரிகிறது....மீண்டும் வருமா அந்த காலம்??
Author: Sathish
•10:11 PM
ஆடிக்கு ஒருமுறை ஆவடிக்கு ஒருமுறை சீ....அமாவாசைக்கு ஒருமுறை ப்ளாக் எழுதற உனக்கெல்லாம் ப்ளாக் ஒரு கேடான்னு திட்டாதீங்க ப்ளீஸ்...எங்க ஆபீஸ் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல...வேலை செஞ்சாதான் சம்பளம் சொல்றாங்க...அதில்லாம சின்னதா ஒரு promotion கொடுத்து Sr ப்ராஜெக்ட் Leader வேற ஆக்கிடாங்க..Promotion வந்ததுல Motion போக கூட டைம் இல்ல....அதான் கொஞ்சம் busy ...

ஆண்பாவம்....ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சிருந்த தலைப்பு...சந்தர்ப்பம் கெடைக்கல... இப்போ 10th 12th ரிசல்ட் வந்த சமயத்துல ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.[துறை ரிசல்ட் பத்தி லாம் பேசுது....] பத்தாவது ரிசல்ட் லே ஜாஸ்மின் னு ஒரு பொண்ணு 495 / 500 [என்ன கொடுமை சார்...என்ன விட சுமார் 300 அதிகமோ ] ரெண்டாவது இடத்துலேயும் மூணு பொண்ணுங்க..493 / 500 .நல்ல வேலை ஒரு பையனும் அதே மார்க் எடுத்து ரெண்டாவது இடத்துல  வந்தான்...ஒவ்வொரு பசங்க வீட்லேயும் இத சொல்லியே ரெண்டு மூணு வாரம் திட்டி இருப்பாங்க... வழக்கம் போல இந்த தடவையும் பொண்ணுங்க percentage பசங்கலவிட அதிகம்....இதற்கு என்ன காரணம்....[சின்னதா ஒரு Flashback ...Tortoise சுருள சுத்துங்கப்பா...] நான் படிச்ச காலத்துல [நீ எங்கே படிச்சே?] கஷ்டப் பட்டது இன்னும் நெனைவுல இருக்கு...எத்தனை மேட்ச், எத்தனை அடிதடி , எத்தனை கலாய்ப்புகல், எத்தனை நைட் study [அதே அதே..ஹி ஹி ஹி] இன்னும்கூட தெளிவா ஞாபகம் இருக்கு...சென்னை சூளைமேடு...அந்த மூணு மாடி வீடு ...என்னோட சகா கிரி....சுருக்கமா கிரிராஜசிம்மன் வீடு. ஒரு இரவது பேரு...டெய்லி நைட் study என்ற பேரில், செஞ்ச கலாட்டா...நைட் ஹோட்டல் மூடர சமயத்துல போய் பரோட்ட சால்நாக்கு சண்டை போட்டு தின்போம்..ஹோட்டல் பேருகூட ஞாபகம் இருக்கு ராமலிங்க விலாஸ்...[இத ஞாபகம் வசிக்க படிப்ப மறந்துடு.]ஹ்ம்ம்..எங்கப்பாவோட வெகுளித்தனத்த நெனச்சா...ஐயோ பாவம்....டாக்டர் ஆகணும்னு first குரூப் சீட்  வாங்கினாங்க....என் மார்க்குக்கு  compounter கூட ஆகா முடிலே... சரி விஷயத்துக்கு வருவோம்.பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனைலாம் கெடையாது...வீடு ஸ்கூல்... அப்போ நல்ல மார்க்தானே வரும்...சும்மாவே இந்த சமுதாயம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..இதுல அவங்க தான் நல்ல percentage என்றால், இன்னும் சுத்தம்...பசங்களுக்கு மதிப்பிலாமல் போய்டுச்சு...

படிப்புலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் பசங்களுக்கு அடி மேல அடி...ஒன்னும் இல்ல ஒரு சின்ன விபத்துன்னா கூட கீழ விழுந்த பையன தூக்கிவிட ஆளிருக்காது; ஆனா அங்கு விழுந்த பொண்ண தூக்க பல பேரு வருவாங்க...இந்த காமெடி இந்தியாலே மட்டுமில்ல உலகம் முழுவதும் இதே சீன தான்...இந்த பாதிப்புக்கு ஆளானவனில் நானும் ஒருவன்...போன winter லே நானும் என் மனைவியும் ஸ்கீயிங் போய் இருந்தோம்... New  Hamphsire இல் பனிச்சறுக்கு ரொம்ப பிரபலம்... பனிச்சருக்கின் போது ரெண்டு பேரும் ஒண்ணா தான்  விழுந்தோம்..அதுல நான் கை கால்லாம் ஏடகூடமா முறுக்கிக்கிட்டு விழுந்தேன்...என் பொண்டாட்டி சாதரனமா தான் விழுந்தா... அவளை தூக்க வெள்ளகார பசங்க ரெண்டு மூணு பேர் queue லே நிக்குறானுங்க...அங்கே அம்போன்னு விழுந்த என்னை தூக்க ஒருத்தனையும் காணோம்... சண்டாள பாவிகளானு சிரிசிட்டே திட்டிட்டு தட்டு தடுமாறி எழுந்தேன்...

சரி..இதெல்லாம் சின்ன வயசுல வர துக்கடா பிரச்சனைகள்...இத போய் பெருசு படுத்துற னு நீங்க நெனைக்கலாம்...வளர்ந்து பெரியவங்களான பிறகு, சின்ன சின்ன ஆசைகள்னு காதலிக்கும் போதும், காதலித்த பிறகும் [கல்யானத்த தாங்க சொன்னேன்....என்  பொண்டாட்டி இத படிக்க கூடாதுடா சாமி...] ஆரம்பிச்சு...யம்மாடியோவ் முடிலேடா யப்பா... அவங்க டிரஸ்க்கு மாட்சிங்கா நாம டிரஸ் பண்ணனும், கை பிடிச்சிட்டே நடக்கணும், அவங்க பக்கத்துல மட்டும் தான் உட்காரனும், phone பண்ணா ரெண்டு ரிங்க்லே எடுக்கணும், ரொம்ப நேரம் பேசணும் இத மாதிரி நெறைய விஷயங்கள்...இதுல ஏதாவது ஒன்ன மறந்தா...அட முகம் சுளிசிட்டு செஞ்சாலும் போச்சு...ஒளி மயமான எதிர்காலம் தான் அவனுக்கு...லேடீஸ்...ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க....உங்கள குறை சொல்வது என் நோக்கமல்ல....ஜஸ்ட் மனசுல படரத சொல்றேன் அவ்வளவுதான்....இத தைரியமா சொன்னா male domination சொல்றாங்க...என்ன செய்ய?

அந்த காலத்துல, பெண்கள கொஞ்சம் பூட்டி வச்சி கொஞ்சம் அடிமைதனமோட நடத்தினதென்னவோ உண்மைதான்...ஆனால் இன்றைய தேதிக்கு அது காணாம போச்சு..நல்ல விஷயம்... வரவேற்கத்தக்க விஷயம்...ஆனால் இன்னமும் பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்னு சொல்லிட்டு திரிஞ்சா அத கண்டிப்பா ஒத்துக்க முடியாதுங்கோவ் ....."மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்று பாடிய பாரதி இன்றிருந்தால், "Man கள் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்றே பாடியிருப்பார்.....சரி சரி ஓவரா பேசிட்டேன்...என் பொண்டாட்டி டூ டைம்ஸ் குரல் கொடுத்துட்டா நான் வாறேன்....