Author: Sathish
•9:42 AM
முன்குறிப்பு:

தீபாவளி பற்றிய பதிவை எப்போ எழுதறான் பாருன்னு அவசரப்பட்டு  யாரும்  திட்டாதீங்க...கொஞ்சம்  உடம்பு  சரியில்லை... எந்த நேரத்துல கிறிஸ்டல், ஸ்டோன்ஸ்  னு கதை எழுதுனேனோ எனக்கு கிட்னி ஸ்டோன்ஸ் வந்து பெரிய அவஸ்தை.. ச்ச்சப்பா.. முடியல.... அதில்லாம  வேலை  பளுவும் அதிகம்..  ஆரம்பிச்சதென்னவோ தீபாவளி சமயம் தான்... முடிக்க  இவ்வளவு  காலதாமதமாகி  விட்டது ...[நல்ல வேலை அடுத்த தீபாவளி இன்னும் வரல...ஹி ஹி ஹி ]

வழக்கம் போல நைட் லேட்டா வேலை செஞ்சி, காலைலே  நல்ல தூக்கம் அன்னிக்கு... யாரோ என்னை முதுகில் தட்டி [செல்லமாதான்] எழுப்புவதை அரை தூக்கத்தில் உணர்ந்தேன்..வழக்கத்துக்கு மாறாக என் தர்மபத்தினி எனக்கு முன்னே எழுந்து குளிச்சி என்னை எழுப்பிக் கொண்டிருந்தாள்... அரை கண்ணில் மணி பார்த்தேன் அதிகாலை 8 : 00 மணி.. மெல்ல கண் விழித்த நான் சற்று கிண்டலாக, "குட் மார்னிங் ...என்ன டா உடம்பு சரியில்லையா?... சீக்கிரம் எழுந்துட்டே " என்று கேட்ட பொழுது அவள் கண்களின் தென்படும் கோபத்தை ரசித்தவாறே எழுந்தேன்..."குட் மார்னிங் டியர்...நல்ல நாளு அதுவுமா ஏன் .காலங்காத்தாலே வம்புக்கு வறீங்க?...இன்னிக்கு   தீபாவளி மறந்தாச்சா? ...ஹாப்பி தீபாவளி..." என்றாள் என் மனைவி...என் உள்ளத்தில் ஒரு இனம் புரியாத கிளர்ச்சி..."ஹே ...ஹாப்பி தீபாவளி...டா....நைட் ஆபீஸ் கால் முடிச்சு படுக்கவே ரொம்ப லேட் ஆயிடுச்சு,,." என்று சொல்லிக்கொண்டே அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஜீன்ஸ் அண்ட் சாம்பல் நிற  டிஷர்ட் பார்த்தேன்....என்னை பற்றி நல்லாவே தெரிஞ்சவளாசசே...  சற்று கோபமாய், "அமெரிக்கா லே புதுப் புடவைக்கு நான் எங்கே போறது? புது டிரஸ் போடாம, இருக்க பழைய சேலை கட்டிக்கவா? சொல்லுங்க ..." என்றாள். லக்ஷ்மி வெடி எப்பெக்ட் தெரிந்தது அவள் குரலில் .. என் கண்ணுக்கு கிராபிக்ஸில் ஒரு செகண்ட் விஜயகாந்த் மாதிரி மாறி மீண்டும் என் மனைவியாய் காட்சி கொடுத்தாள்... அவள் சொல்வதிலும் நியாயம் இருந்தது.... இருப்பினும் அவள் காதில் விழுமாறு  "தீபாவளி ஆரம்பிச்சிடுச்சு டோய்" என்று கூறிக் கொண்டே பாத்ரூம் நோக்கி சென்றேன்.

பள்ளி விடுமுறை விடுகிற எந்த ஒரு நிகழ்வா இருந்தாலும் சிறு வயதில ரொம்ப ஆர்வம் இருக்கும்...அதுவும் தீபாவளி பண்டிகை என்றால் சின்ன வயசுல வர ஆர்வமும், மகிழ்ச்சியும் கட்டுக்கடங்காத ஒன்று. அப்பேர்ப்பட்ட தீபாவளி திருநாளா இன்று என யோசிக்கும் அளவுக்கு இருந்தது என்னுடைய அமெரிக்கா தீபாவளி...காலைலே எழுந்து நல்ல குளிர் லே, தலைமுழுகி, கட்டின டவலோட ஓடி நான் தான் எங்க தெருவுலே முதல் சரம் வைப்பேன்...[படிப்ப தவிர மீதி எல்லாத்துலேயும் முதல...ஹி ஹி ஹி ] அடுத்து புது டிரஸ் போட்டு, அம்மா பண்ணுற பூஜையே அவசர அவசரமா முடிச்சி ஓடிவர   அதே  நேரம் என் அப்பா,  டிவி லே மங்கள இசை நிகழ்ச்சியே தொடங்கிடுவார் ; அம்மா தோசை, இட்லி , ஆட்டுக்கால்னு அசத்துவாங்க..ஒரு புல் கட்டு கட்டிட்டு, டிவி லே பட்டி மன்றம், புதுப் பாடல்கள் என்று வரிசையாக தீபாவளி நிகழ்ச்சிகள் அரங்கேற விளம்பர இடைவெளிலே முதல்  நாளே தம்பி தங்கச்சியோட சண்டை போட்டு பிரிச்சி வச்ச பட்டசுகல   வெடிச்சி ....ம்ஹ்ஹ்ஹஹு... இதெல்லாம் யோசிச்சுகிட்டே  டைம் பார்த்தா மணி 8:15 ..ஐயோ status கால், ஸ்டான்டப் கால் னு பல கால் என் நினைவுக்குவர ..அவசர அவசரமா குளிச்சி முடிச்சு வெளியே வந்தா, என் மனைவி எனக்கு ஒரு புது ஷர்ட் வாங்கி வச்சிருந்தா..."ஹே... தேங்க்ஸ் மா...நல்ல இருக்குனு" சொல்லி அதை அணிந்து,  என்னோட breakfast  டிரைவ் பண்ணிடே சாப்பிட்டுகறேன்னு டோஸ்ட் பண்ண பிரட் எடுத்துட்டு ஆபீஸ் கெளம்பினேன்...என் மனைவி என் கையில் மற்றொரு பாக்ஸ் ஐ தின்னித்து, "அத்தை செஞ்ச அதிரசம், முறுக்கு கொஞ்சம் வச்சிருக்கேன்...ஆபீஸ் friends க்கு குடுங்க: என்றாள்.. கார்லே போகும்போதே  கால் லே join பண்ணி, டீம் லே இருக்க 34 பேரும் சேர்ந்து  யார் யார் எந்த ஆணியே புடுங்கறது ன்னு ஒரு discussion ...கால்லே இருக்கும் போதே மீண்டும் பழைய நினைவுகள் என்னை உரச ஆரம்பித்தது....

சின்ன வயசில பட்டசுல இருக்க ஆர்வம், அந்த வெடிச்சத்தாமோ, இல்ல அதில் வரும் வர்ண ஜாலங்கள் மட்டுமில்ல ...  யார் வீட்டுல வெடி வெடிச்சி அதிக பேப்பர்களும், வெடி குப்பைகளும் சேர்ந்திருக்குன்னு போட்டி வேறு.....என் தம்பியோ , தங்கையோ என் வீட்டு வாசல விட்டு சற்று தள்ளி வெடிச்சாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும்..ஒரு வெடிக் குப்பைகளையும் விடாம. மெனக்கெட்டு என் காலாலே எல்லாத்தையும் தள்ளி என் வீடு முன்னாலே போடுவேன்....அப்படியே யாரேனும்  பார்க்கிறார்களான்னு நோட்டம் விட்டுக் கொண்டே, பக்கத்துக்கு அக்கத்து வீட்டு வெடி குப்பைகளையும் என் வீட்டின் முன்னே சேர்ப்பேன்..[ரொம்ப பெருமை...த்தூ..] நெனச்சி பார்த்தா சிப்பு சிப்பா வருது...ஹி ஹி ஹி [உனக்கு மட்டுமில்லடா இதுக்கப்புறம் ஊரே உன்னை பார்த்து சிரிக்கப் போகுது...லூசுப் பயலே...] யோசித்துகொண்டிருக்கும் வேளையில் ஆபீஸ் வந்துட்டேன்...நானிருக்கும் Virginia ஸ்டேட்ல் இந்தியர்கள் மிக அதிகம்...அதுவும் தெலுங்கின மக்கள் முக்கால்வாசி பேர்...பயலுங்க பக்கா அமெரிக்கா வாசிகள் மாதிரிதான் திரிவார்கள்...அண்ணன், தம்பி, மனைவி, மனைவ்யோட தம்பினு தன் சொந்தகாரப்பசங்க எல்லோருக்கும் ஒரு வேலைய பார்த்து இங்கேயே செட்டில் செஞ்சி ஒரு சின்ன திருப்பதி மாதிரி ஆக்கி வச்சிட்டாங்க...நம்ம ஊர்லே தெலுங்கான வருதோ இல்லையோ இங்கே, Virginia லே ஒரு தெலுங்கானவ  உருவாக்கி ஒபாமாவ ஒபாமா ராவ் / ஒபாமா ரெட்டி ன்னு மாத்துற காலம் வெகு தொலைவில் இல்லை...;) பார்கிங் லாட்லே ஆரம்பிச்சி என்னோட டெஸ்க் செல்லுகிற வரை அனைவருக்கும் போலிச் சிரிப்பை விற்பனை செய்தவாறே "குட் மார்னிங்" சொல்லிக் கொண்டே என் இடத்தை சென்றடைந்தேன்...ஒட்டு மொத்தமாக அனைவரும் தீபாவளியை மறந்திருந்தனர். மொக்கையா பேசிட்டுப் போனாங்களே தவிர  ஒரு வாழ்த்துகளும் பரிமாறிக்கொள்ளவில்லை.... மதியம் வரை பொறுமையாகவே இருந்த நான், என் மனைவி கொடுத்தனுப்பிய snack பாக்ஸ் எடுத்து, :" ஹே... இன்னிக்கு தீபாவளி லே...அதான் snacks கொண்டுவந்தேன்...என் அம்மா prepare பண்ணது taste பண்ணி பாருங்க" என்று கொடுத்தேன்..."ohh yeah! I totally forgot ...Probably I willl call my Mom today..." னு நம்ம அக்னி நட்சத்திரம் "கார்த்திக்" இங்கிலீஷ் பேசராபுல வாயிலே கூழங்கள்ள போட்டுக்கிட்டு பேசுகிற மாதிரி ஒருத்தி சொன்னா...இதான் அமெரிக்கா ஆகசென்ட் ... தீபாவளிக்கு ஒரு வாரம் மின்ன வந்த "ஹலோவீன் [Halloween] பண்டிகையா விமர்சனமா கொண்டாடிய பல பேர் நம்ம ஊரு தீபாவளியே சுத்தமா  மறந்திருந்தார்கள்...  இவங்களுக்கு அதிரசம், முறுக்கும் ரொம்ப முக்கியமா? என்ற கேள்வி என்னுள்...ச்சே என்ன கொடுமை சரவணா...தீபாவளி நாளும் ஒரு சராசரி நாளாகவே கழிய, சாயந்திரம் 5:30 வீட்டை வந்தடைந்தேன்.... என் மனைவி அடுப்பங்கறையில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்...முகம் கழுவி பிரெஷா வந்து சோபா லே உடகார்ந்தா, ஒரு தட்டுலே சுசியம், அதிரசம் னு மீண்டும் தீபாவளிப் பலகாரங்கள்...மனதினுள் ஒரு சந்தோசம்...நம்ம வீடு தீபாவளி மாதிரி இருக்குனு நெனசிகிட்டு, சுசியம் சுவைக்க ஆரம்பித்தேன்... "சாப்பிட்டுவிட்டு பக்கவது வீட்டுக்கு போய் பலகாரம் கொடுத்து வரலாமா?" என்றாள் என் மனைவி...."ஒன்னும் வேணாம். எல்லாம் அமெரிக்கா வாசிகள் ஆயிட்டாங்க ஹல்லோவீன், Valentine's டே னு இருப்பவர்களுக்கு  எதுக்கு தீபாவளி பலகாரங்கள்?" னு கேட்டு முடிக்கும் முன், "நாம் இந்த புது வீட்டுக்கு வந்து மூணு மாசமாகுது...இன்னும் ஒரு வருஷம் இங்கே தான் காலத்த ஓட்டனும்...நீங்களும் ஆபீஸ் போய்ட்டா  பக்கத்துக்கு அக்கத்து வீட்லே இருப்பவர்களை நான் அனுசரித்து நடந்தாதான் ஒரு அவசரத்திற்கு  ஏதாவது உதவி பண்ணுவாங்க...நான் தனியா  போக முடியாது... நீங்களும் வாங்க"  என்று என் மனைவி வற்புறுத்தினாள்.. சரி என்று கெளம்பி பக்கத்துக்கு வீட்டுக்கு போனோம்...வீட்டினுள் "தாறங்கம் தாறங்கம்" னு ஏதோ ஒரு பாட்டு "youtube " ல் ஓடிக்கொண்டிருந்தது....எங்களை வரவேற்று உட்கார செய்த அதே நேரம், அவசர அவசரமாக அவர்  கை ரிமோட்டை தேடிப்ப் பிடித்து, "Dora the explorer " போட்டுவிட்டு, பிறகு அவர்  எங்களுடன் பேச ஆரம்பித்தார்... என் மனைவி தீபாவளி பலகாரங்களை கொடுத்தாள். ..." After 3 years, என் மனைவியும், குழந்தையும் இந்தியா போய், போன  வாரம் தான் திரும்ப வந்தார்கள்...சோ தீபாவளிக்கு ஒன்னும் பண்ணல " என்றார். அவர்.. "ஒஹ்ஹ ஓகே..ஒரு வாரம் தள்ளி வந்திருந்தா, உங்க குழந்தை அங்கே தீபாவளி கொண்டாடி இருப்பாளே...தீபாவளி அனுபவத்த மிஸ் பண்ணி இருக்க மாட்டா லே " என்று கேட்டேன் ..." நீங்க வேற... அவளுக்கு இந்தியா climate , சத்தம், polution இதெல்லாம் சுத்தமா பிடிக்கல...அழுது கொண்டே இருந்தா ...இப்போ தான் அவளுக்கு எல்லாம் செட் ஆகி இருக்கு" என்றார்....இதில்லென பெருமை...என்று எரிச்சல் எனக்கு.....என் மனைவி வேறு சும்மா இல்லாம அந்த குழந்தையிடம் ," உனக்கு இந்தியா பிடிக்கல? " என்று கேட்க அந்த குழந்தை "ஐ லவ் அமேழிக்கா...." என்று கூறியது....வாயிலே கூழங்கள்ள போட்டுக்கிட்டு பேசுகிற அதே அமெரிக்கா ஆகசென்ட்..." நான் சொல்ல லே" என்று ரொம்ப பெருமையாய் அவர் என்னைப் பார்க்க நானும் என் மனைவியும் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்....

அமெரிக்காவிலிருந்து சென்ற ஒபாமா தீபாவளியை சிறப்பாக கொண்டாட, இங்கே பிஜிலி வெடிக்கு கூட வழியில்லாம நான்.... என் மனது ஏனோ தெரியவில்லை, இருக்கமாய் இருப்பதை உணர்ந்தேன்...



Author: Sathish
•7:30 AM
நேரம் : இரவு 9:35



பெல்ட் அணிந்துகொண்டே பீரோ கண்ணாடி வழியே, கோபமாய் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் கமலாவைப் பார்த்து சிரித்தான் சங்கர்; வடபழனி R 8 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்  ஆக பணிபுரிகிறான். கல்யாணமாகி 2 வருடமாகியும், இரவு நேர ரோந்துப் பணிக்கு எப்போது கிளம்பினாலும் "உம்ம"மென்று இருப்பது கமலாவின் வாடிக்கை."கோபத்துல்ல தாண்டி செல்லம் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று கூறிக் கொண்டே சுவற்றோரம் நின்று கொண்டிருந்த கமலாவின் அருகில் சென்றான் சங்கர்." விடிகாலையில் தான் வருவீகளா?" என்று தயக்கமாய் கேட்டாள் கமலா. "ஆமா..அடுத்த வாரம் அயோத்தி பிரச்சனை தீர்ப்பு. So சிட்டிலே பாதுகாப்பு அதிகப்படுத்த சொல்லி கமிஷனர் உத்தரவு போட்டிருக்கார். உள்பக்கம் 
தாப்பாள் போட்டு நீ ஒழுங்கா தூங்கு. ஓகே?" என்று சொல்லிக் கொண்டே கமலாவின் மிக அருகில் நெருங்கி, சேலை வழி தெரிந்த அவளது இடுப்பில் எதையோ தேடியது அவனது கைகள். சிலிர்த்து கண்மூடி நின்றாள் கமலா. அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்தது.




நேரம் : இரவு 10:35


அவசர அவசரமாக அந்த கேசுவாளிட்டி வார்டில் நுழைந்த சீப் டாக்டர்  "எத்தனை பேரு?" என்று கேட்டுகொண்டே க்ளௌஸ் அணிந்தார். "மொத்தம் 18 பேரு டாக்டர். அடல்ட்ஸ் 13 , 5 குழந்தைகள். ஆக்ஸிடென்ட் ஆன போது, டிரைவர் சீட் பக்கமா உட்கார்ந்திருந்த 7 பேர் ரொம்ப அடிபட்டு சீரியசா இருக்காங்க." என்று பதிலளித்தாள் நர்ஸ். அது ஒரு அரசு மருத்துவமனை..கழிப்பறைகள் சுத்தமா இருக்குதோ இல்லையோ, பினாயில் வாசம் பஞ்சமில்லாமல் மருத்துவமனை முழுவது வீசிக் கொண்டிருந்தது. அந்த கேசுவாளிட்டி வார்டில் சுமார் 10 பெட் இருக்கும். ரத்த கரையும், வலியின் புலம்பல்களும் மிகுதியாக இருந்தது அறை முழுவதும்.  


கடைசி பெட்டில் இருந்த காமினி, மெல்ல கண்விழித்தாள் அவளை சுற்றிலும் வயர்கள். பயத்தில் அவளின் ரோஸ்மில்க் நிற முகம் மேலும் சிவந்தது.. "டா... டாக்டர்...  டாக்டர்.." என்று முனகிக் கொண்டிருந்த காமினியின் அருகில் சென்றார் டாக்டர்; நிழலாய் தொடர்ந்தாள் நர்ஸ்.." ஒன்னும் பயப்படாதேமா..உனக்கு ஒன்னும் இல்லை...யு ஆர் எ லக்கி கேர்ள். ஒன்னும் பெருசா அடிபடலை. அதிர்ச்சிலே கொஞ்சம் மயக்கமாயிட்டே அவளவுதான்.. . நர்ஸ் 30 மினிட்ஸ் கழிச்சு ஆக்சிகேன் மாஸ்க்கை எடுத்துடுங்க" என்று சொல்லிக் கொண்டே அடுத்த பேஷன்ட் அருகில் சென்றார். தலையில் உள்ள கட்டு இருக்கமாய் இருப்பதை உணர்ந்த காமினி, சுற்றும்   முற்றும் பார்த்தாள். தன் வலக்கைப் பக்கமாய் இருந்த பழுப்பு நிற இரும்பு மேஜையின் ஓரத்தில் தன் ஹேன்ட் பேக்கை கண்டதும் காமினி ஒரு பெரு மூச்சு விட்டாள்...அவள் நினைவு முழுவதும் சிவா நிரம்பியிருந்தான்.

"ஆக்ஸிடென்ட் கேஸ், FIR காபி எல்லாம் ஒழுங்கா  கலெக்ட்  பண்ணி ரிசெப்ஷன் லே கொடுத்துடுங்க" என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார் சீப்.  டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். அந்த விபத்து சிகிச்சை பிரிவின் வராண்டாவில் நான்கைந்து போலீஸ்காரர்கள், அடிப்பட்டவர்களின் உறவுக்காரர்கள் என்று ரொம்ப பிஸியாக இருந்தது அந்த ஹாஸ்பிடல்.  யார் கண்ணுலேயும் படாமல்  வெளியேறிய காமினி, தன்னை கடந்த ஆட்டோவைப் பார்த்து  "ஆட்டோ" என்று குரல் கொடுத்தாள்.  அடுத்தவரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் "சர்ர்ர்" என்று ப்ரேக் போட்டு நின்றது அந்த ஆட்டோ. "எங்கே மா போகணும்" என்று ஒரு கர கரப்பான குரலில் கேட்ட ஆட்டோ டிரைவரிடம் "மொதல்ல இங்கிருந்து கெளம்புபா" என்று கூறி ஓரமாய் கிழிந்திருந்த அந்த ஆட்டோ குஷன்னில் தன்னைப் பொதிந்தாள் காமினி. அவள் குரலில் அவசரம் தெரிந்தது. நன்கு நனைந்த சிகரெட் பாக்கெட்டின் வாசம் அந்த டிரைவர் மீது வர, குமட்டிக்கொண்டு வந்தது காமினிக்கு...மீண்டும் ஒருமுறை தன்  ஹேன்ட் பேக்கை திறந்து பார்த்தாள்..அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் உள்ளிருந்த கிறிஸ்டல், வெள்ளை ஒளியை அவள் கண்ணில் பாய்ச்சியது...


நேரம் : இரவு 11:05


"என்ன சிவா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? இன்னும் கால் வரல" என்று தன் வழுக்கை தலையில் இருக்கும் வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டே கேட்டார் பரந்தாமன். "அதான் எனக்கும் தெரிலே ...வழக்கமா 8 மணிக்கு ஆபீஸ் லே இருந்து கெளம்பிடுவா...இன்னிக்கு கண்காட்சியோட கடைசில் நாளு கொஞ்சம் லேட் ஆகும்,  வெளியெ வந்ததும் கால் பண்றேன் சொன்னா.. நான் கால் பண்ணி பாக்கவா?" என்று கேட்டான் சிவா.. " கொஞ்சம் பொறு சிவா..பார்ப்போம் " என்று கூறி சுற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தார் பரந்தாமன். பெரிய முள்ளும், சின்ன முள்ளும் பொறுமையாய் நகர்வந்தைக் கண்டு கடுகடுத்தது அவரது முகம்.

ஆடம்பரமாய் வளர்ந்திருந்தது  அந்த நான்கடுக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்.. அதன் நான்காவது மாடியில் தான் பரந்தாமனும் சிவாவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்..அவர்களின் அமைதியை கலைத்தது அந்த டெலிபோன்..பரந்தாமன் அவசர அவசரமாக ரிசிவரை எடுத்து  "ஹெலோ...டாக்டர் பரந்தாமன் ஹியர்" என்று நிதானமாக கூறினார். "டாக்டர் காமினி பேசறேன்...கிறிஸ்டல் என் கிட்ட பத்திரமா இருக்கு..நம்ம பிளான் படி, நாளைக்கு நீங்க சர்ஜரிக்கு ரெடி பண்ணிடுங்க...எல்லாம் நல்லபடி முடிஞ்சா போதும்..." என்றாள் காமினி மறுமுனையில்..."காமினி ஒன்னும் பயப்படாதே...என்னோட ஆராய்ச்சி கண்டிப்பா வெற்றி பெரும்...உன் கிட்ட இருக்கறது சாதாரன கிறிஸ்டல் இல்லை. மருத்துவ குணம் கொண்ட அபூர்வ கிறிஸ்டல். அதுலே இன்ப்ரா ரெட் லைட் செலுத்தி அதிலிருந்து வரும் ஒளியின் மூலம் சிவாவோட கணையப் புற்று நோயை கண்டிப்பா குணப் படுத்திடலாம்..." நீ சிவாவ அழைசிகிட்டு நேரா கிளினிக் வந்திடுமா " என்றார் பரந்தாமன். "சரிங்க டாக்டர்...நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சிவா அழைச்சிட்டு வந்துடறேன்" என்றதும் பரந்தாமன் ரிசிவரை வைத்தார்.

"சிவா காமினி இப்போ உனக்கு ட்ரை பண்ணுவா பார்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அடடா மழைடா அட மழைடா" என்று சிவாவின்  நோக்கியா பாடியது..."ஹே காமினி. என்னாச்சு? இஸ் எவரிதிங் ஆள் ரைட்?" என்றான் சிவா. மறுமுனையில் காமினி "நான் வந்த பஸ் பெரிய ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...பட் எனக்கு பெருசா ஒன்னும் இல்லை..ஐயம் ஓகே.ஏகப்பட்ட போலீஸ் ஹாஸ்பிடல்ல...சமாளிச்சு வர லேட் ஆயிடுச்சு..நீங்க எங்கே இருக்கீங்க? " என்றாள். "நான் இன்னும் வீட்லே தான் இருக்கேன். ஜஸ்ட் உன்னோட காலுக்கு தான் வெயிட்டிங். இன்னும் டென் மினிட்ஸ் லே  திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட் லே இருப்பேன் டா ...பாய் டியர் டேக் கேர் " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பரந்தாமன் அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்தார்.."சா ...சார் ..." என்றான் சிவா நடுக்கத்துடன் ...அவனது கையில் துப்பாக்கி... 

நேரம் : இரவு 11:25


அடையார் IIT அருகே, வயர்லெஸ் ஏதோ முனுமுனுக்க அதனை கவனிக்காமல்  சங்கர் தனது காரை மெதுவாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். இரவின் அமைதியில் எங்கும் நிசப்தம் நிரம்பி இருந்தது...தூரத்தில் தெரு நாய்களின் சத்தம்...ரோட்டோரத்தில் ஓர் வெள்ளை மாருதி அதன் முன்னே கருப்பு நிற ஸ்கார்பியோ நந்தியாய் நின்று கொண்டிருந்ததை பார்த்து, சங்கரின் கவனம் அங்கே திரும்பியது...ஏதோ தப்பு நடப்பதாய் உணர்ந்த சங்கர், தன் காரில் இருந்த ஒலி பெருக்கியில், "ஹலோ வெள்ளை மாருதி TN 9318 என்ன அங்கே?  கருப்பு ஸ்கார்பியோ வண்டி எடு" ன்னு அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, கையில் பெரிய அருவாளுடன் ஒருவன் ஓடிச் சென்று ஸ்கார்பியோவில் தொற்றிக் கொள்ள, விருட்டென்று கார் சீறிப் பாய்ந்தது.

வேகமாக காரை விட்டு கீழெ இறங்கிய சங்கர் மாருதி காரில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் பிணமாகியிருப்பதை கண்டான். சற்றும் தாமதிக்காமல், ஓடிசென்று   தன் காரை கிளப்பிய அதே சமயம், அவனது கை வயர்லசை தேடி எடுத்தது. "ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர்.."அடையார் IIT கிட்டே 45 வயசு ஆள அசால்ட் பண்ணிட்டு அக்கிஸ்ட்டு கருப்பு நிற ஸ்கார்பியோ லே தப்பிச்சு போறாங்க...ஐ நீட் மெடிக் அட் IIT...ஆள் இருக்கான போயிட்டான பாருங்க...நான் அக்கிஸ்ட்டுகல பாளோ  பண்றேன்..ரெண்டு போலீஸ் பற்றோள அடையார் ஏரியா லே ரெடி பண்ணுங்க  ஓவர் " என்று சொல்லிக்கொண்டே சைரன் ஆன் செய்தான்...சைரன் ஒலி நகரையே உலுக்க ஸ்கார்பியோவை  துரத்தியது சங்கரின் போலீஸ் கார்.

நேரம் : இரவு 11:55


திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட். சாலை சற்றே வெறிச்சோடிக் கிடந்தது.  சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த ஒன்றிரண்டு பேர் நடுவே சிவா, ஒரு கையில் கிங்க்ஸ் சிகரெட் மற்றொரு கையில் டி. கடைக்காரிடம் இருபது ரூபாய் கொடுத்து மீதி சில்லறையை சரி பார்க்காமல் தன் ஜீன்ஸ் பான்டில் நுந்திக் கொண்டே சற்று தொலைவில் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டியை நெருங்கினான் சிவா. டிரைவர் சீட் ஜன்னல் வழி தலை விட்டு "சார் உங்களுக்கு டி சொல்லட்டுமா?" என்று கேட்டான் சிவா. " வேண்டாம் சிவா.. அவ வர நேரம்..சீக்கிரம்  மேட்டர முடிச்சிட்டு கெளம்பலாம். அப்புறம் சொன்னது நினைவிருக்குள? அவ கொண்டு வரர்து அவளை பொறுத்தவரை ஒரு சாதாரண  கிறிஸ்டல், ஆனால் நமக்குத் தான் தெரியும் அதன் மதிப்பு. அலெக்ஸான்ரிட் - டைமண்டை விட பல மடங்கு மதிப்பு வாய்ந்த ஒரு அபூர்வ கல். புரிஞ்சுதா? புத்திசாலித்தனமா நடந்துக்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆட்டோ ரோட்டோரம் வந்து நின்றது.

ஆலிவ் நிற பூனம் சேலையில் உள்ளிருந்து இறங்கினாள் காமினி. ஈரம் சுமந்த காற்று அவள் மேல் வீச, காதோரம் இருந்த அவள் கூந்தலை பின்னுக்கு தள்ளிக்கொண்டே அவள் கண்கள் யாரையோ தேடியது."ஹாய் காமினி...இங்கே " என்ற சிவாவின் குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள். "ஹாய் சிவா, உடனே கிளினிக்கு  கெளம்பலாம்...நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நமக்காக அவர் வெயிட் பண்ணுவார்.." என்று மட மடவென பேசிய காமினியை இடை மரித்த சிவா "ஹே வெயிட் வெயிட் ...கிறிஸ்டல் எங்கே?" என்றான். "பத்திரமா ஹேன்ட் பேக்லே இருக்கு டா...உனக்கு உடம்பு நல்லபடி ஆகணும்னு தான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தேன். சர்ஜெரி முடிஞ்சதும், யாருக்கும் தெரியாம  திரும்ப இந்த கிறிஸ்டல கொண்டு போய் எடுத்த இடத்துலேயே வைகக வரை எனக்கு டென்ஷன் தான்" என்று சொல்லிக் கொண்டே கூழாங்கல் போலிருந்த அந்த கல்லை கையில் எடுத்தாள் காமினி. "எல்லாம் சரிதான்..ஆனால் திரும்ப வைக்கணும்ங்கற நெனப்ப விட்டுடு காமினி. எனக்கு அது வேணும். அது வெறும் கல் இல்லை வைரம்..வைரத்தை விடவும் உயர்ந்தது  " என்று சொல்லிக் கொண்டே அவனது கைகள் முதுகு பக்கமாய் போவதைக் கண்டாள் காமினி அவள் கிறிஸ்டலை மீண்டும் ஹேன்ட் பேக்லே போட்டாள்.  .அடுத்த வினாடி சிவாவின் கையில் துப்பாக்கி,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. கலங்கிப் போனாள் காமினி. " சிவா என்ன விளையாட்டு இது. உன் மேல் கொண்ட காதலால் நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த கிறிஸ்டல கொண்டு வந்தேன் தெரியுமா? எத்தனை போலிசை சமாளிக்க வேண்டியிருந்தது தெரியுமா? " என குரல் தழு தழுக்க கூறிய காமினியின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.  அவர்களின் சற்று நேர அமைதியை கலைக்கும் வண்ணம், காரை விட்டு இறங்கிக் கொண்டே  “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். "டா... டாக்டர்...நீ..நீங்களா?" மேலும் அதிர்ச்சி அவள் கண்களில், இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்தவண்ணம் தார் ரோட்டை விட்டு ஓரமாய் இறங்கினாள் காமினி. தூரத்தில் சைரன் ஒலி கேட்க திகைத்து போயினர் மூவரும்...சடாலென்று பரந்தாமன் காரில் ஏறி "சிவா..பேக்கை பிடிங்கிட்டு அவளை போட்ரு..." என்று சொல்லி முடிப்பதற்குள், நிலை தடுமாறி அங்கு வந்து கருப்பு நிற ஸ்கார்பியோ சிவாவுடன் ஹோண்டா சிட்டி யையும் அடித்து தூக்கியது... "ஐயோ..."  என்ற அலறல் சைரன் ஒலியை மீறி ஒலித்தது... 

நேரம் : இரவு 12 :05


"ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர். திருவான்மியூர் கிட்ட ECR  ரோட்லே ஆக்சிடென்ட்" என்று சங்கர் அறிவித்துக் கொண்டிருக்க இருட்டில் சென்று மறைந்தாள்  காமினி..இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்திருந்தது.....
Author: Sathish
•11:21 PM


இவன் பேரை சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும், கடலும் கை தட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்....அட்ரா ...அட்ரா இது தலைவருக்கான வரிகள் என்பதில், சிறு சந்தேகமும் இல்லை...படம்யா...இது படம்யா...தலைவா...பின்னிட்டே...அட்டகாசம்...கன கச்சிதம ஒன்னொன்னும் யோசிச்சு அசத்தியிருக்கு எந்திரன் டீம்....கொஞ்ச நெஞ்ச எதிர்ப்பார்ப்பா இருந்தது இந்த படத்திற்கு...கலாநிதிமாறனுக்கு கூட இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது...எனக்கு அவ்வளவு டென்ஷன்...200 % அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை...

படத்தோட கதை என்ன என்பதை அனைவரும் அறிவர்...ப்ளாக் லே, reviews   எல்லாத்துலேயும் இந்நேரத்துக்கு போட்டு முடிச்சத திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...ஒரு ரசிகனா, தலைவரோட வெறியனா என் கண்ணோட்டத்துல எந்திரன் எப்படி இருக்குனு பகிர்ந்துக்கணும்...அதற்காகத் தான் இந்த ப்ளாக்...

இப்போ முளைச்ச சின்ன பயலுங்க, விடலை பசங்கல்லாம் இமேஜ், ஹீரோ அறிமுகம், பஞ்ச் டயலாக் அது இதுன்னு முக்கியத்துவம் கொடுக்கற காலத்துல...நம்ம தலைவரோட அறிமுகம் படு சிம்பிள் இதுல...ச்சே ...சான்ஸ் இல்லை...தலைவர் நெனச்சிருந்தா "எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, இன்ட்ரோ லே மாஸ் வேணும் ... இப்படித்தான் வேணும் அது இதுன்னு சொல்லி ஸ்கிரிப்ட் லே, direction   லே  பல இடங்களில் தலை இட்டிருக்கலாம்...100 % ஒரு இயக்குனரின் சொல்படி நடந்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...மனசு வேணுமையா...சின்னப்ப்சங்கல்லம் நாலஞ்சு இங்க்லீஷ் படத்த காமிச்சு இத மாதிர் ஷாட் வை அத மாதிரி வைன்னு அட்வைஸ் பண்ற காலத்துல இப்படி ஒரு மனிதரா? சத்திமா தலைவர தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க முடியாது...

பொதுவா ரெண்டு ஹீரோ இருக்க சப்ஜெக்ட் லே உன்னை யார் மேலோங்கி இருப்பது என்பதுல நெறைய பிரச்சனை வரும்...அந்த போட்டிலே டைரெக்டர் தல தான் உருளும்...தலைவர் பல படத்துல சக நடிகர்களிடம், விட்டுக் கொடுத்து நடிப்பது ஊரன்ரிஞ்ச விஷயம்....இப்போ மனிஷங்களையும் மீறி ரோபோ கராச்டருக்கு விட்டு கொடுத்து நடிசிருகிறார்...ஒரு எடத்துல கூட விஞ்ஞானி ரஜினி தன் ஹீரோ தனத்தை காமிக்கவே இல்லை...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த யதார்த்தம்...ஒரு சீன் லே கலாபவன் மணி இடம் விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு சண்டை காட்சி வைத்திருந்திருக்கலாம்..ஆனால் கதைக்கு தேவை இல்லை என்பதால் அதுவும் தவிர்க்கப் பட்டிருக்கு....டைரெக்டர்களை ஆட்டி வைக்கும் இக்காலகட்டத்தில் இப்படி ஒரு முன்னணி நடிகரா?

விஞ்ஞானி ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, ஒரு பயம் கலந்த ஒரு பணிவு,   சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை...நடை, ஸ்டைல், body language ..நல்ல வித்தயாசத்தை காமிச்சிருக்கார்...இந்த வயசுல இப்படி ஒரு சுருசுருப்பா? தல பின்றீங்களே.....காதல் அணுக்கள் பாட்டில் தலைவர் ஒரு நடை நடப்பார். வாவ்.....சம நடைங்க அது...ஐயோ அணு அணுவா ரசிச்சேன் நான்...A .R .ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை...

ஷங்கர் சார் hats ஆப் .... ஒரு Sci -Fi படத்தை, மக்களுக்கு புரியற மாதிரி, தெளிவா, தலைவரோட usual படம் போல மசாலா தடவாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகத் தெளிவா பண்ணி இருக்கீங்க...கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்...ஐஸ்வர்யா அழகு, நளினம் எல்லாம் நெறஞ்ச ஒரு நிறைகுடம்...நல்ல முதிர்ச்சியான நடிப்பு...படத்துல தேவை இல்லாத விஷயம் என்றால், சந்தானம் கர்னாஸ்...காமெடி சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லாத போது, அசிஸ்டண்டா வேற யாரவது போட்டு தள்ளி இருக்கலாம்...தேவை இல்லாத மற்றொருவர் கலாபவன் மணி....

இவ்வளவும் சொல்லிவிட்டு நான் படம் போன அனுபவத்தை பற்றி சொல்லாம எப்படி? என் வீட்டிலிருந்து சுமார் 200 km தூரம் போய் பார்த்த படம் இது...so மொத்தம் 400 km இன்னைக்கு  நான், என் மனைவி அம்மா travel  பண்ணோம்..அங்கே தியேட்டர் லே நம்ம பசங்க தலைவரோட படம் போட்ட tshirt போட்டு கலக்கினானுங்க...நாம வழக்கம் போல விசில் பின்னி எடுத்தோம்..தியேட்டர் சும்மா அதிருசு லே......தலைவருக்கு, தலைவர் படத்துக்கு A , B ,C ன்னு கிளாஸ் எல்லாம் இல்லை...எல்லோருமே அமைதியாகச் சென்று ஆரவாரத்துடன் தான் படம் பார்ப்போம்...

படம் 100 %  ஹிட் ...சூப்பர் ஸ்டார் படம், ஸ்டைல் , அரசியல், பஞ்ச் டயலாக் அது இதுன்னு எதிர்ப் பார்க்காம தலைவர் நடிச்ச ஒரு science and fiction படம்னு போங்க..உங்க எதிர்ப்பார்ப்பு கொஞ்சமும் குறையாம படத்த ரசிப்பீங்க ... தமிழ் சினிமா வரலாற்றில் எந்திரன் ஒரு மைல் கல்....ஒரு புதிய அனுபவம்...




Author: Sathish
•10:45 AM
பிரபலமாயிட்டாலே இப்படிதான்...வாசகர்கள், நான் அடிக்கடி பதிவு எழுதணும்னு  ஆசைப் படுகிறார்கள்... நமக்குத்தான் நேரமில்லை...[உனக்கு வர ஒன்னு ரெண்டு கமெண்டுக்கு தேவையா இந்த விளம்பரம்? ஹி ஹி ஹி ]

இங்கே [US] வந்த அம்மா அடுத்த மாதம் தாயகம் திரும்புகிறார்கள்...அதனால, ஷாப்பிங் லே கொஞ்சம் பிஸி...ஒரு நாலஞ்சு வாரம் முன்னாடி, என்னோட தங்கச்சிக்கு ஒரு MP3 பிளேயர் வாங்கி இருந்தேன்...அதுல எதோ கோளாறு...இங்கே online லே வாங்கறது,அதோட return பாலிசி மிகவும் பாராட்டத்தக்கது...வாங்கிய பொருள் சரி இல்லையென்றால், 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்துவிடலாம்...இதற்கு காரணம் கூட தேவை இல்லை...ஆனால், இதை நம்ம ஊரு மக்கள் படு மட்டமாக பயன்படுத்துகிறார்கள்...வாங்கி அதனை பத்து பதினைந்து நாள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுவது அப்பட்டமானது...அதுவும் shortterm லே வரவங்க பெட், தலையணை எல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு return   கொடுத்துடரானுங்க... [ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?]  சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... நான் வாங்கின MP3 பிளேயர்லே சின்ன பிரச்சனை கடைசிவரை ON பண்ணவே முடிலே ...ஹி ஹி ஹி ..return பண்ணுவதற்காக வாங்கின கம்பனிக்கு பேசினதும், அவங்க எல்லாம்  விசாரித்து விட்டு எனக்கு ஓரு 'Packaging ஸ்லிப்' அனுப்பி வைத்தார்கள்... நான் செய்ய வேண்டியதெல்லாம் ஓரு டப்பாலே என்னோட MP3 பிளேயர் போட்டு இந்த ஸ்லிப் அதன் மேல் ஒட்டி போஸ்ட் ஆபீஸ்லே கொடுக்கணும்....எல்லாம் ரெடி பண்ணிட்டு போஸ்ட் ஆபீஸ் கெளம்பலாம்னு வெளியே வந்தா இந்த ஊரு போஸ்ட் women அவங்களுக்கே உறிய ஒரு மினி வேன்லே வந்து இறங்கினாங்க...இந்த ஊர்லேதான் எல்லாம் ஈசியாச்சேனு அவங்ககிட்டயே கொடுத்தா, வாங்கி அத ஸ்கேன் பண்ணி மேட்டர் முடிசிட்டு  போய்டே இருக்காங்க...என்னோட வேலை படு சுலபமா முடிச்சுது...அப்போ எனக்கு நம்ம ஊரு போஸ்ட் Man ஞாபகம் வந்துடுச்சு... 

சார் போஸ்ட்... நான் சின்ன வயசில அதிகமா கேட்டிருக்கேன்...காக்கி கலர் uniform  லே, சைக்கிள் லே பெல் அடிச்சிட்டு வர எங்கே தெரு postman குரல் அது... இப்போ எங்கே போச்சி அந்த குரல்? கடைசியா நான் எப்போ லெட்டர் எழுதினேன்? எனக்கு எப்போ லெட்டர் வந்துச்சு? கணினி மயமாகிவிட்ட காலகட்டத்தால் மின் அஞ்சல் படு பிரபலமாகி விட்டது...பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி, பொங்கல் என அணைத்து பண்டிகை சுபகாரியங்கள் எல்லாவற்றிற்கும் மின்வாழ்த்துகளும், மின்அஞ்சல்களும் பரிமாறிக்கொள்ளும் காலமாகிவிட்டது... ஒருத்தன் மண்டைய போட்டா கூட மின் அஞ்சல் வழியாதான் ஆறுதல் சொல்றானுங்க....அதுதவிர,   கிராமபுரங்கள் உட்பட வீட்லே  நாலு பேரிருந்தாலும் குறைந்தது 6 செல் போன், [ கேட்டா official , பர்சனல் சொல்றாங்க...]தொலை தொடர்பு நவீனமயமாகிவிடதால் இந்த தபால் உலகம் சற்றே நலிந்துவிட்டதோ?  

கடிதம் எழுதுவது ஒரு கலை. அதுவும் தமிழ்லே எழுதுவது ஒரு அற்புதமான உணர்வு... தொலைவிலிருப்பவர்கலை அருகாமையில் காட்டும் அழகிய கண்ணாடி...நான் சின்னதுலே ஏன் பாட்டி வீட்டுக்கு, நாகப்படினதிளிருந்த என்னோட அக்காவுக்கு  கடிதம் எழுதுவேன், அதுதவிர என்னோட மாமா சிங்கப்பூர்லே இருந்தார்...அப்போ அடிக்கடி நான் கடிதம் போடுவேன்.... அக்காவுக்கு எழுதும்போது இண்டு இடுக்கு ஒரு இடம்விடாம எழுதி கடைசியா மடிக்கற இடத்துலேயும், பக்கத்துக்கு வீடு ஆன்டியெ மிகவும் கேட்டதாய் சொல்லவும்னு எழுதி முடிப்பேன். [அட கர்மம் புடிச்சவனே !! அந்த வீட்லே அங்கிள்லே இல்லையா? னு கிண்டல் பண்றவன பர்த்தி எனக்கு கவலை இல்லை ஹி ஹி ஹி ]

என் பேர் போட்டு வர கடிதங்கள் அனைத்தும் நான் பத்திரப்படுதியுள்ளேன்...அதில் பல Dr  சதீஷ் M.B.B.S. என போட்டு வரும்....இப்போ நினைத்தாலும் எனக்கு சிப்பு சிப்பாவருது...8th Standard வரை நான் நல்லதான் படிச்சேன்...இருந்தாலும் Dr  சதீஷ் னு சொல்றது எனக்கே ஓவரா தான் தெரியும்..[ இப்போ அந்த லெட்டர் போட்டவங்கள தண்டிக்க ஒரே வழி என்னோட 12th மதிப்பெண்களை xerox  எடுத்து அனுபறது தான்....] நான் சொன்னேன் லே என்னோட மாமா ஒருத்தர் சிங்கப்பூர் லே இருந்து அடிக்கடி கடிதம் போடுவார்னு....அந்த கடிதம் வர பேப்பர், ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் நான் அதை பள்ளிக்கு எடுத்து சென்று பசங்களுக்கெல்லாம் காமிச்சு பெருமை அடிச்சிப்பேன்.... என் friend னு சொல்லிக்கற enemy ஒருத்தன், எனக்கு போட்டியா அவனோட அத்திம்பேர் மயிலாப்பூர் லே இருந்து எழுதிய கடிதத்த கொண்டுவருவான்...ரொம்பவும் வெகுளியான நான் மயிலாப்பூர, சிங்கப்பூர் மாதிரி ஒரு வெளிநாடுனு நெனச்சி பல தடவ ஏமாந்திருக்கேன்...[தூ...ரொம்ப பெருமை...பப்ளிக்கா சொல்ற விஷயமா டா இது...]...

ஆள் வளர, வளர சோம்பேறித்தனமும் கூடவே வளர்ந்து, நாளடைவில் கடிதம் எழுதறது ரொம்பவே குறைந்துவிட்டது...கல்லூரி இரண்டாம் ஆண்டுக்குப்பிறகு தமிழில் எழுதற சந்தர்ப்பமும் ரொம்பவே குறைந்து விட்டது.....என் தலையெழுத்து நல்ல இருக்கோ இல்லையோ...என் கையெழுத்து நல்லாவே இருக்கும்.....ரொம்ப நாள் எழுதாததால என் கையெழுத்து சின்னாபின்னமாகி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் என் கையெழுத்து அப்படியேதான் இருக்கு...அதை maintain பண்ண  நானும் பல தடவ டைரி எழுதனும்னு ஆரம்பிச்சு, பல டைரியெ ஜனவரி 1 லெ  ஆரம்பிச்சு  பொங்கலுக்குள்ள ஏறக்கட்டி இருக்கேன்...கொஞ்ச நாளா தொடர்வது இந்த மின் திரட்டுக்கள்தான்... இதுவாவது தொடர்ந்தால் சரி....ஆனால், நான் ஒன்றில் மட்டும் படுத் தெளிவாய் இருக்கேன்....கோடானகோடி தமிழ் வாசகர்களுக்காகவும், என் ப்ளாக்ன்  ரசிகர்களுக்ககவும் தொடர்வேன் என் கலைப் பணியை....அள்ளி தர நான் ரெடி ....துள்ளிப் பி[ப]டிக்க நீங்க ரெடியா?  [நோ ...நோ badwords...]


Author: Sathish
•9:09 AM
வழக்கம் போல Sep 8th காலை எழுந்து thatstamil.com அலசுகையில் அதிர்ச்சியான செய்தி...நடிகர் முரளி மாரடைப்பால் இறந்தது...அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சக மனிதர், நன்கு பரிட்ச்யப்பட்ட நபர் திடீரென இறந்தது மனதை வெகுவே பாதித்தது...

ஒரு சில வாரங்கள் முன்புதான் Coffe with Anu நிகழ்ச்சியில் அவரையும். அவரது மகன் பேட்டியும் பார்த்தேன்...சின்ன வயசு, ஆரோக்யமான உடல் வாகு...அவருக்கா மாரடைப்பு? பூவிலங்கில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, மணிரத்தினத்தின் முதல் படமான, பகல் நிலவில் பலரது உள்ளங்களை கவர்ந்தவர் முரளி...அதன் பிறகு சில தொய்வு அவரது திரை உலக வரலாற்றில் இருப்பினும் மீண்டும் புது வசந்தம் மூலம் திரையுலகில் தனக்கோர் இடத்தைப் பிடித்தார் முரளி.

மைக் என்றால் மோகன் என்பதுபோல் கல்லூரி மாணவன் என்றல் நினைவுக்கு வருவது முரளி தான்....காதல் கதைகளில் சற்றே புதுமையான, வித்யாசமான கதைகள் கொண்ட படங்களை தமிழுக்கு தந்தவர் முரளி... இதயம் படத்தை ரசிக்காத தமிழ் இதயம் இருக்குமா? அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகான சிரிப்பும் இன்னும் நம் கண்முன்னே நிற்கிறது...

திரை உலக வாழ்வில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்தவர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். தன் மகன் அறிமுகமாகி அவரது வளர்ச்சியை காண மனுஷன் எவளவு ஆசை பட்டிருப்பார். அதற்குள் இந்த திடீர் சம்பவம் திரை உலகத்தினரை மட்டும் அல்ல பலரது உள்ளங்களையும் கசக்கி இருக்கும்....அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும்  தைரியத்தை தமிழ் நெஞ்சங்கள் தரட்டும்....முரளி அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்... 
Author: Sathish
•9:12 PM
 சால்ட்...
அம்மா US  வந்த பிறகு நானும் என் மனைவியும் தியேட்டர் சென்று ஆங்கிலப் படம் பார்க்க சந்தர்பம் இல்லை..2 மாதத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த (ரசித்த) படம் சால்ட்.... பொதுவாகவே ஏஞ்சலீனா ஜுலி படம் என்றாலே ஆக்க்ஷன் தான்...சால்ட் இல் அது கொஞ்சம் கூட என்றே சொல்லலாம்...முதல் சீன்லே கொரியன் போலிசாரால் இண்டேரோகட் இல் கடுமையாகத் தெரியும் ஏஞ்சலீனா அடுத்த சீன்லே , கணவர் உதவியுடன் விடுதலையாகி வெளியே நடந்துவரும் பொழுது ததும்பி அழ முற்படுகையில் சாதாரண பெண்ணாக தெரிகிறார்...அமெரிக்காவில்  CIA agent ஆக  பணிபுரிவதாய் நகரும் கதையில், விசாரணைக்காக வரும் ரஷ்ய உளவாளி, அமெரிக்கா வரும் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் பொருட்டு ரஷ்யாவை சேர்ந்த பெண் உளவாளி அமெரிக்காவில் ஊடுருவி இருப்பதாகவும், அது ஏஞ்சலீனா என்றும் கூறுகிறான்...அப்போது சூடு பிடிகிறது கதை...அடிதடி சேஸிங் னு அம்மணி எல்லாத்துலேயும் பின்னி எடுக்கறாங்க...தான் ஒரு டபுள் agent என்ற குற்றச்சாட்டு, இதற்கிடையில் கடத்தப்பட்ட தன் கணவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி னு கதை வேகமாக நகருகிறது...ஆங்காங்கே சில twist and turns...

ஏஞ்சலீனா சற்றே வயதாகி தெரிகிறார்...கடைசியாக தியேட்டர் சென்று நான் பார்த்த ஏஞ்சலீனா படம் Wanted .... 2yrs இருக்கும் அந்த படம் பார்த்து...அதுலே அக்கா சூப்பர் figure .. [ வடிவேலுக்கு பிறகு இந்த dialgue சொல்றது நான்தான்...ஹி ஹி ஹி ] இந்த கதபாத்திரதிற்காக  ஏஞ்சலீனா நிஜ உலக CIA agents  உடன் பழகினாராம்...அவர்களுடன் பழகிய அனுபவத்தை பேசுகையில், "அவர்களிடம் எடுத்த குறிப்புகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, தன் வேலைப் பற்றி சொந்த குடும்பத்தாரிடம் கூட  பேச முடியாத அளவு அவர்கள் தனிமைப் பட்டிருகிறார்கள்..அவர்களின் தியாகம் குறிப்பிடப் படவேண்டிய விஷயம்" என்று கூறியுள்ளார்...சால்ட்.. ஆக ஓஹோ னு சொல்லக் கூடிய படமாக இல்லாவிட்டாலும், நன்றாக, விறு விருப்பாகத்  தான் இருக்கிறது...

எந்திரன் ஆடியோ ரிலீஸ்...

தலைவரோட எந்திரன் ஆடியோ ரிலீஸ் function மலேசியாவில் அரங்கேறியதை online லே பார்த்தேன்...பாட்டு அசத்தல்... A .R ரஹ்மான் இசை இளமை ததும்ப ததும்ப இருக்கு...பாட்டில் மட்டும் இல்ல தலைவரோட stills கூடத்தான்...simplela  வந்திருந்தாலும், தலையோட டிரஸ்  சூப்பர் இருந்தது...விவேக் சில எடத்துல மொக்கை போட்டாலும் நல்ல தான் ப்ரோக்ராம் ப்ரெசென்ட் பண்ணார்...ஐஸ்வரிய அழகு...decentaa டிரஸ் பண்ணி இருந்தாங்க...ஒருவருடைய நடை உடை எவள்ளவு முக்கியம் பாருங்க அவங்கள பர்த்தி பேச....ஷங்கர் பக்கத்துல ஒரு அவதாரம் உட்கார்ந்திருத்தது...[ஸ்ரேயா...] உள்ள போடவேண்டியதோட  saree கட்டி வந்திடுச்சு...கருமம்...அத எவன்யா முன்னாடி உட்கார வச்சான்....

கலாநிதிமாறன்...முதல் முறை பார்த்தேன்..எவளவு பெரிய நிறுவனத்தின் தல ....ரொம்ப சின்ன வயசு.....A .R ரஹ்மான் , ஐஷு, ஷங்கர்,வைரமுத்து  எல்லாரும் பேசினாங்க ...டீம் ரொம்ப ஹர்ட்வோர்க் பண்ணி இருக்காங்க...பெரிய ஹிட் என்பதில் சந்தேகமில்லை...

stills , தலையோட hairstyles , டிரஸ் னு செமைய இருந்தது...Trailor பார்த்து அசந்துட்டேன்... சின்ன வயசில இருந்து நான் ரஜினி யோட வெறித்தனமான ரசிகன்...இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு...மனிதன் படம் பார்த்து...கடைசி சீன்லே தல குண்டு தொங்கவிட்டு ஒரு leather டிரஸ் போட்டு வருவார்...அந்த டிரஸ் வேணும்னு [குண்டோட ]அடம் பண்ணி எங்கப்பாவ தெனரடிசிருக்கேன்...பல தடவை socks உள்ள pant போட்டு டியூஷன் சார் கிட்ட  அடி வாங்கி இருக்கேன்...ரெண்டு மூணு டம்ளர் தண்ணியே ஷர்ட் லே ஊத்திகிட்டு கைகளை மேல தூக்கி "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாளும்" பாட்ட பாடி ஆட்டம் போட்டிருக்கேன்...இவ்வளவு பண்ணிட்டு US வந்தஉடன் தல படத்த எப்படி மிஸ் பண்றது? இந்த படத்துக்கு நான், என் மனைவி அம்மா first டே போக பிளான் பண்ணி இருக்கோம்....தலைவரோட படத்துக்கு நான் பக்கத்துக்கு state போக வேண்டியிருக்கு...இருந்தாலும் பரவா இல்லை...தலை படத்த பார்த்துடுவேன்...
Author: Sathish
•10:32 AM
சமீபத்தில் நான் படித்த கல்லூரி பற்றிய செய்தியை கேட்டதும் ஆடிப் போனேன்...உலகின் நம்பர் 1  Chess Player   "Nitin .S ", ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நான் படித்த SSN  பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்து அதுல சேர்ந்திருக்கிறாராம். அண்ணா பல்கலை கழகம் போன்ற முன்னணி கல்லூரிகள் இருந்தும், முதல் இடத்தில இருக்கும் (விளையாட்டில் ) ஒரு மாணவன் தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்தது, Single Window (Sport Quota )வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விஷயத்தை கேள்வி பட்டதும், எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.. என் கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் இந்த நேரத்தில் இந்த பதிவின் மூலமாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

SSN கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் வசந்த காலம். முதன்முதல் அங்கு அடிவைத்த நாள் முதல் கடைசியாக கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்த நாட்கள் அனைத்தும் தேன் துளிகள். குறிப்பாக நான் படித்த கணினித்துறை....என்னுடைய seniors கொஞ்சம் படிப்பாளிகள்; கெடைக்கற நேரத்துல ஒன்னு படிப்பானுங்க இல்ல கடலை...சும்மா வரு வருன்னு தீய தீய வறுத்துத் தள்ளுவானுங்க..பிரச்சனை அது இதுன்னு போகாம silentaa  காலத்த ஓட்டி கெலம்பிட்டாங்க...ஆனா நம்ம  batch பசங்க ஒன்னுனுளையும் பின்னி பெடேலேடுப்பாங்க....படிப்பு, வெளையாட்டு, சண்டை,  culturals மற்றும் கடலை உட்பட (நம்ம division ஆச்சே....)தப்போ ரைட்டோ முப்பது பேரும் சேர்ந்துதான் செய்வோம்.... வாத்திகளும்  சரி,  நாங்க பண்ற அட்டுழியத்தை கண்டிச்சாலும் எங்க batch அவங்களுட favourite தான்...

எங்க டைரக்டர் க்கு நான் ரொம்பவும் செல்லம்..செல்லம் னா அப்படி இப்படி இல்ல, கைலே துப்பாக்கி இருந்தால் சுட்டு தள்ளி இருப்பார்... First semesterle ஆரம்பிச்ச பிரச்சனை..இன்னிக்கும் நான் அவரை எங்கு பார்த்தாலும், ஒரு MN நம்பியார், வீரப்பா, அசோகன் இவங்கள பார்க்கற மாதிரியே பார்ப்பார்...ஆனா அதெல்லாம் பெருசா எடுக்காம, நான் பாட்டுக்கு என்னோட அலப்பறை, ரௌசு, அடிதடின்னு காலத்தை ஓட்டி, டைம் கெடைக்கும் போது அப்பன், ஆத்தா ஆசைக்கு கொஞ்சூண்டு படிக்கவும் செஞ்சேன்..
சாதாரணமாவே ரௌசு அதிகம் பண்ணுவோம்; இதுல மத்தவங்க கவனம் செளுத்துனா கேட்கவா வேண்டும்? சினிமா லே வர கல்லூரி கலாட்டாக்கள் லே முக்கால்வாசி நான் பண்ணிட்டேன்...(ரொம்ப பெருமை...த்து....  ) இன்ஜினியரிங் காலேஜ் என்பதால் எல்லோரும் formals லே  வரும்போது, என்னோட batch லே எல்லாரும் அரசியல்வாதி மாதிரி, வெள்ளை வேட்டி,சட்டை லே போனது, பஸ் டே கலாட்டா, ராகிங் , ஸ்போர்ட்ஸ் டே அடிதடி னு ஒன்னு விடல...

போனமுறை இந்தியா சென்றபோது என் கல்லூரிக்கு சென்று, நான் வழக்கமா போற ரூட் 7  பஸ், கான்டீன், hostel, லைப்ரரி (அங்கே ஏன் நீ போனேன்னு நெனைபீங்க...தடியா ரெண்டு புக் கைலே வச்சா scenaa இருக்கும் னு பேர் கூட பார்க்காம பல தடவ எடுத்திருக்கேன்...ஹி ஹி ஹி ) லேப் எல்லா இடங்களிலும் போய் பார்த்தேன்...என்னோட சகா செந்தில் உடன் வந்திருந்தான்...நான் பண்ண ரௌசு எல்லாத்துலேயும் இவன் பங்கும் இருக்கும்....எவ்வளவு தான் படிச்சாலும், டெஸ்ட் / assignment  எதுவானாலும் சொன்ன தேதிலே கொடுக்காம திட்டு வாங்கி வேற date லே கொடுக்கறதுல பேர் போனவங்க நாங்க...இன்ஜினியரிங் departments மத்தியிலும் சரி எங்க juniors மத்தியிலும் சரி நாங்க ஒரு ஹீரோககளாகவே  வாழ்ந்த காலம் அது.....இனிமையான நினைவுகள், இனிமையான உறவுகள்...தனிமை எனும் வெயிலில்  காயும் போது, நடபு எனும் நிழலின் அருமை தெரிகிறது....மீண்டும் வருமா அந்த காலம்??
Author: Sathish
•10:11 PM
ஆடிக்கு ஒருமுறை ஆவடிக்கு ஒருமுறை சீ....அமாவாசைக்கு ஒருமுறை ப்ளாக் எழுதற உனக்கெல்லாம் ப்ளாக் ஒரு கேடான்னு திட்டாதீங்க ப்ளீஸ்...எங்க ஆபீஸ் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல...வேலை செஞ்சாதான் சம்பளம் சொல்றாங்க...அதில்லாம சின்னதா ஒரு promotion கொடுத்து Sr ப்ராஜெக்ட் Leader வேற ஆக்கிடாங்க..Promotion வந்ததுல Motion போக கூட டைம் இல்ல....அதான் கொஞ்சம் busy ...

ஆண்பாவம்....ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சிருந்த தலைப்பு...சந்தர்ப்பம் கெடைக்கல... இப்போ 10th 12th ரிசல்ட் வந்த சமயத்துல ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.[துறை ரிசல்ட் பத்தி லாம் பேசுது....] பத்தாவது ரிசல்ட் லே ஜாஸ்மின் னு ஒரு பொண்ணு 495 / 500 [என்ன கொடுமை சார்...என்ன விட சுமார் 300 அதிகமோ ] ரெண்டாவது இடத்துலேயும் மூணு பொண்ணுங்க..493 / 500 .நல்ல வேலை ஒரு பையனும் அதே மார்க் எடுத்து ரெண்டாவது இடத்துல  வந்தான்...ஒவ்வொரு பசங்க வீட்லேயும் இத சொல்லியே ரெண்டு மூணு வாரம் திட்டி இருப்பாங்க... வழக்கம் போல இந்த தடவையும் பொண்ணுங்க percentage பசங்கலவிட அதிகம்....இதற்கு என்ன காரணம்....[சின்னதா ஒரு Flashback ...Tortoise சுருள சுத்துங்கப்பா...] நான் படிச்ச காலத்துல [நீ எங்கே படிச்சே?] கஷ்டப் பட்டது இன்னும் நெனைவுல இருக்கு...எத்தனை மேட்ச், எத்தனை அடிதடி , எத்தனை கலாய்ப்புகல், எத்தனை நைட் study [அதே அதே..ஹி ஹி ஹி] இன்னும்கூட தெளிவா ஞாபகம் இருக்கு...சென்னை சூளைமேடு...அந்த மூணு மாடி வீடு ...என்னோட சகா கிரி....சுருக்கமா கிரிராஜசிம்மன் வீடு. ஒரு இரவது பேரு...டெய்லி நைட் study என்ற பேரில், செஞ்ச கலாட்டா...நைட் ஹோட்டல் மூடர சமயத்துல போய் பரோட்ட சால்நாக்கு சண்டை போட்டு தின்போம்..ஹோட்டல் பேருகூட ஞாபகம் இருக்கு ராமலிங்க விலாஸ்...[இத ஞாபகம் வசிக்க படிப்ப மறந்துடு.]ஹ்ம்ம்..எங்கப்பாவோட வெகுளித்தனத்த நெனச்சா...ஐயோ பாவம்....டாக்டர் ஆகணும்னு first குரூப் சீட்  வாங்கினாங்க....என் மார்க்குக்கு  compounter கூட ஆகா முடிலே... சரி விஷயத்துக்கு வருவோம்.பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனைலாம் கெடையாது...வீடு ஸ்கூல்... அப்போ நல்ல மார்க்தானே வரும்...சும்மாவே இந்த சமுதாயம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..இதுல அவங்க தான் நல்ல percentage என்றால், இன்னும் சுத்தம்...பசங்களுக்கு மதிப்பிலாமல் போய்டுச்சு...

படிப்புலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் பசங்களுக்கு அடி மேல அடி...ஒன்னும் இல்ல ஒரு சின்ன விபத்துன்னா கூட கீழ விழுந்த பையன தூக்கிவிட ஆளிருக்காது; ஆனா அங்கு விழுந்த பொண்ண தூக்க பல பேரு வருவாங்க...இந்த காமெடி இந்தியாலே மட்டுமில்ல உலகம் முழுவதும் இதே சீன தான்...இந்த பாதிப்புக்கு ஆளானவனில் நானும் ஒருவன்...போன winter லே நானும் என் மனைவியும் ஸ்கீயிங் போய் இருந்தோம்... New  Hamphsire இல் பனிச்சறுக்கு ரொம்ப பிரபலம்... பனிச்சருக்கின் போது ரெண்டு பேரும் ஒண்ணா தான்  விழுந்தோம்..அதுல நான் கை கால்லாம் ஏடகூடமா முறுக்கிக்கிட்டு விழுந்தேன்...என் பொண்டாட்டி சாதரனமா தான் விழுந்தா... அவளை தூக்க வெள்ளகார பசங்க ரெண்டு மூணு பேர் queue லே நிக்குறானுங்க...அங்கே அம்போன்னு விழுந்த என்னை தூக்க ஒருத்தனையும் காணோம்... சண்டாள பாவிகளானு சிரிசிட்டே திட்டிட்டு தட்டு தடுமாறி எழுந்தேன்...

சரி..இதெல்லாம் சின்ன வயசுல வர துக்கடா பிரச்சனைகள்...இத போய் பெருசு படுத்துற னு நீங்க நெனைக்கலாம்...வளர்ந்து பெரியவங்களான பிறகு, சின்ன சின்ன ஆசைகள்னு காதலிக்கும் போதும், காதலித்த பிறகும் [கல்யானத்த தாங்க சொன்னேன்....என்  பொண்டாட்டி இத படிக்க கூடாதுடா சாமி...] ஆரம்பிச்சு...யம்மாடியோவ் முடிலேடா யப்பா... அவங்க டிரஸ்க்கு மாட்சிங்கா நாம டிரஸ் பண்ணனும், கை பிடிச்சிட்டே நடக்கணும், அவங்க பக்கத்துல மட்டும் தான் உட்காரனும், phone பண்ணா ரெண்டு ரிங்க்லே எடுக்கணும், ரொம்ப நேரம் பேசணும் இத மாதிரி நெறைய விஷயங்கள்...இதுல ஏதாவது ஒன்ன மறந்தா...அட முகம் சுளிசிட்டு செஞ்சாலும் போச்சு...ஒளி மயமான எதிர்காலம் தான் அவனுக்கு...லேடீஸ்...ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க....உங்கள குறை சொல்வது என் நோக்கமல்ல....ஜஸ்ட் மனசுல படரத சொல்றேன் அவ்வளவுதான்....இத தைரியமா சொன்னா male domination சொல்றாங்க...என்ன செய்ய?

அந்த காலத்துல, பெண்கள கொஞ்சம் பூட்டி வச்சி கொஞ்சம் அடிமைதனமோட நடத்தினதென்னவோ உண்மைதான்...ஆனால் இன்றைய தேதிக்கு அது காணாம போச்சு..நல்ல விஷயம்... வரவேற்கத்தக்க விஷயம்...ஆனால் இன்னமும் பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்னு சொல்லிட்டு திரிஞ்சா அத கண்டிப்பா ஒத்துக்க முடியாதுங்கோவ் ....."மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்று பாடிய பாரதி இன்றிருந்தால், "Man கள் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்றே பாடியிருப்பார்.....சரி சரி ஓவரா பேசிட்டேன்...என் பொண்டாட்டி டூ டைம்ஸ் குரல் கொடுத்துட்டா நான் வாறேன்....



Author: Sathish
•9:47 PM
 சனியன்...சனியன்..தூ..கர்மம்...சீ..உஹ்வே..இதுக்கு மேல விமர்சனம் தேவையா?
Author: Sathish
•9:46 AM
Town House என்று சொல்லப் படும் அந்த மூன்றடுக்கு மாடியில் இருந்த Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று ஒரு கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் ஒரு அதட்டு அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டாஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்ல ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டாஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....இவள் ஒரு மின்னல்..அவளே கேள்வி கேட்டு அவளே பதில் சொல்லி...கடைசி வரை என்ன பேசவே விடல என நினைத்தவாறு மீண்டும் புறப்பட தயாராக "Wow ..Nice கார்" ன்னு மூணு ஸ்கூல் பொண்ணுங்க கமெண்ட்....தேங்க்ஸ் கூறிக்கொண்டே காரை ரோட்டினுள் இறக்கினான் பிரஷாந்த்...

அமெரிக்காவில்  ஒரு பிரபல  தனியார் அலுவலகத்தின் மேனேஜர் பிரஷாந்த். அவனது ஆபீஸ்  வீட்டிலிருந்து 35 மைல்...சுமார் 40 நிமிடமாகும்...போக 40 வர  40 ..இந்த 80  நிமிடங்கள் தான் பிரஷாந்த்தின்  தனிமையான் நேரம்...பல முக்கிய முடிவுகள், யோசனைகள் இளையராஜாவின் இசையில் இந்த நேரத்தில் உதிக்கும்...தனக்குதானே பேசிக்கொள்வான்; சிரித்துக்கொள்வான்...

"Wow ..Nice கார்" மீண்டும் ரீங்காரமிட்டது பிரஷாந்த்தின் மனதில்... சந்தோஷமாயிருந்தது.  "29,000  டாலர் செலவு பண்ணி புது கார் அவசியமா? இந்த வருடம் உங்களுடைய செலவ நெனச்சி, நீங்களே முடிவு பண்ணிகோங்க..." என்று சுசி சொல்லியும், புத்தம் புது கார் எடுத்தான்... "கார், வீடு, பொண்டாட்டி இதெல்லாம் ஒரு தடவ அமையற விஷயம் டா... நல்லதா அமஞ்சாதான் மனசு நெறைவா இருக்கும்....ம்ம்ஹம்ம்ம் பொண்டாட்டி விஷயத்துல ரொம்ப யோசிக்காம விட்டுட்டேன்... அட்லீஸ்ட் கார் விஷயத்துளையாவது கொஞ்சம் கவனமா இருக்கேன்" என்று கிண்டல் செய்யும்போது அவளின் செல்ல கோவத்தை மீண்டும் நினைத்து தனக்குதானே சிரித்துக் கொண்டான்...வழக்கமாக தான் நிறுத்தும் "STAR BUCKS" கடையின் முன்னிறுத்தி... ஒரு "Caffe Latte"  வாங்கிக்கொண்டு மீண்டும் காரை விரட்டினான்... அடுத்த சிந்தனை அவன் நினைவை  தட்டியது...  இன்று ஒரு முக்கியமான நாள்... புது contract விஷயமாக ஜெர்மனி லிருந்து வரும் கஸ்டமர்களுக்கு முக்கியமான presentation .... நான்கைந்து மாதங்களாக இதற்கான வேலைதான் ஓடியது... இந்த contract கெடச்சுட்டா 2 வருடம் ஒரு பிரச்சனையுமில்லை... வேலை சுமுகமாக போகும்...." என் ப்ளூ file ..." அதில்லல்லவா அனைத்தும் இருக்கிறது...எடுத்து வைத்தேனா? திடீர் கேள்வி பிரஷாந்தின் மனதில்... தான் highwayல் இருப்பதை சற்றும் யோசிக்காமல் கார் பெல்ட் கழட்டி பின்சீட்டில் இருக்கும் தன் லேப்டாப் பேகை  இழுக்க முற்படும் அதே சமயம், கார் சற்றே நிலைதடுமாறியது...பிரஷாந்த் சுதாரித்துக் கொள்ளுமுன், நிலைதடுமாறி ஓடிய கார், பலத்த சத்தத்துடன் அருகே சென்றுகொண்டிருந்த பெரிய truck ல் மோதி தூக்கி எறியப்பட்டது ...ஆ....என்று அலறினான் பிரஷாந்த்....

"என்னாச்சு ...என்னாச்சுங்க.." சுசியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் பிரஷாந்த்... வேர்த்துக் கொட்டியிருந்தது .....இன்னும் அதிர்ச்சியிலிருந்து அவன் மீளவில்லை... "எப்போ பார்த்தாலும் அடிதடி, thrillerனு படம் பார்த்தா இப்படிதான் கெட்ட கெட்ட கனவு வரும்...தண்ணி குடிச்சிட்டு படுங்க..." கொஞ்சம் எரிச்சலாய் சொன்னாள் சுசி.. மணி பார்த்தான் பிரஷாந்த் 2 : 20 ...ச்சே என்ன பயங்கரமான கனவு...நாளைய மீட்டிங் நினைத்துக்கொண்டே படுத்திருப்பேன்.. அதான் இப்படி... இன்னமும் தனக்கு வேர்த்து கொட்டுவதையும், முச்சு வாங்குவதையும்  நினைத்துக்கொண்டே சற்றே கண் அசர்ந்தான் பிரஷாந்த்..

பிரஷாந்த் Tie கட்டிகொண்டே, கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் சுசி அருகே சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.."என்ன! சீக்கிரம் கிளம்பியாச்சு...." நெளிந்துக்கொண்டே எழுந்த மனைவியை ரசித்தான் ... "முக்கியமான மீட்டிங் இன்னிக்கு அதான்.. Evening லேட் ஆகலாம்..பயப்படாதே" சொல்லிக்கொண்டே கிளம்பினான்.....பிரஷாந்த்.

Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி, சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்லே  ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....பிரஷாந்தின் கண்களில் பயம்...உடலெங்கும் நடுக்கம்...
Author: Sathish
•2:11 PM
அசல் பார்த்த வலியிலிருந்து மீளமுடியாமல் இருந்த எனக்கு வெகுவாக தெம்பளித்த படம் அங்காடித் தெரு. டைரக்டர் வசந்த பாலனின் மூன்றாவது படம் என்று நினைக்கிறன்...முதல் படம் ஆல்பம், புது முகங்கள் தான் அதிலும்...பழம்பெரும் நடிகர் 'தேங்காய்' ஸ்ரீநிவாசன் அவர்களின் பேத்தி நடிச்சது..சிம்பிள் கதைதான் ஆனாலும் ரொம்ப நல்லா இருந்தது...அடுத்தது வெயில்..இரண்டிலும் கலக்கிய பாலன்,அங்காடி தெருவிலும், புது முகங்களையும், நல்ல கதைக் கருவையும் தேர்ந்தெடுத்து அதை ரொம்ப நல்லா தந்திருக்கிறார்...சமீப காலமாக, ஹீரோக்களை மட்டும் நம்பாமல், கதைகருவை நம்பி எடுத்த படங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கத் தான் செய்கிறது...அந்த வரிசையில், அங்காடித் தெரு 'கல்லூரி' அளவுக்கு என்னை கவர்ந்தது...ரொம்பவும் எதார்த்தமான, நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிற ஒரு கதை. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி திரைகதை அமைந்துள்ளது...

சென்னையிலிருந்த போது நானும் அந்த மாதிரி கடைகளுக்கு போய் இருக்கிறேன்...நாள் முழுவதும் நின்றுகொண்டே  வியாபாரம் பார்க்கும் அவர்களுக்கு ரொம்பவும் சின்ன வயசா தான் இருக்கும்...பாவமா இருக்கும். அவர்களின் தேவையை தனக்கு சாதகமாக்கி கொள்ளு(ல்லு)கிறார்கள், அந்த கடைகளின் முதலாளிகள் எனும் முதலைகள்...நானும் என் வீட்டில் உள்ளவர்களும்  அந்த கடைகளுக்கு செல்லும் போது, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வோம்...அனாவசியமாக இதை எடு அதை எடுன்னு சொல்லாம, ரொம்பவும் அவங்க நேரத்தை எடுத்துக்காம செலக்ட் பண்ணிடுவோம்.... ஹ்ம்ம் இப்போதைக்கு எங்களால முடிஞ்சது...:(

படத்தில் நடித்த மகேஷ்,அஞ்சலி ரொம்பவும் அசத்திட்டாங்க...இயல்பான நடிப்பு...அஞ்சலி அம்சம்...டச் பண்ணிடாங்க [யாரு தான் உன்ன டச் பண்ணல?] வாழ்த்துக்கள்...படத்தில் வரும் Black  பாண்டியின் நடிப்பும் பாராட்டதக்கது...விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' மூலம் பிரபலமான பாண்டி இந்த படத்துல ஒரு முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்கார்...

பணக்காரர்களை விள்ளதனமாகவும், ஏழைகளை ரொம்பவும் நல்லவர்களாகவும்,  வேலையாட்கள் சாப்பிடும் மெஸ் அருவருப்பாகவும், பின்னர் அதே மெஸ் சாதரணமாகவும் காண்பிக்கப் படும் சில வழக்கமான சினிமா formula  தவிர படத்தில் குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை...

தைரியமாக, சென்னை ரங்கநாதன் தெரிவில் வியாபாரம் செய்யும் வேலையாட்களின் அவல நிலையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருகிறார் வசந்தபாலன்...இந்த படத்தின் மூலம் அவர்களின் கஷ்டமறிந்து அவர்களின் அவல நிலைகள் சற்றே தகர்க்கப் படுமானால் நலமே....
Author: Sathish
•1:50 PM
இந்திய சுற்று பயணத்தை முடித்து [பெரிய அயல்நாட்டு அதிபர்..டேய் டேய் போதும்டா...] அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் என் மேனேஜர் கால்பண்ணி, புது ப்ராஜெக்ட் ஒன்னு...2 வாரம் "Guatemala" போகனும்னார்... கோடேமல வா?? எனக்கு தெரிந்தது வைஜயந்திமாலா தானே!!! அத்திப்பட்டி மாதிரி Map லே கூட  அது எங்கே இருக்குனு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமுங்க...[உனக்கு எது தான் easy ???] ஒரு சின்ன Flashback....
ஸ்கூல்லே தொடர்ச்சியா அரபிக்கடலையும், வங்காள விரிகுடாவையும் மாத்தி மாத்தி போட்டு பிரபலமான காலம்...[தூ மானங்கெட்டவனே!!]...ஸ்கூல் inspection ...DEO கிளாஸ்க்கு வந்து எல்லோரையும் கேள்வி கேட்க, அவரிடமிருது மறைந்து வாழ்ந்த சமயம்...[பெருமை டா...] என்னோட வாத்தி என் அலாதி புவியியல் அறிவை உணர்ந்து, புத்திசாலிதனமாய் இந்த முறை, ஹிமாலய மலையை காட்ட சொல்ல...அசல் அஜித் ஸ்டைல்லே நானும் Map கிட்ட போய், வடக்கு பக்கமா குச்சியே வச்சி கோலம் போட்டேன்..DEO முதற்கொண்டு கிளாஸ்ல  எல்லோரும் சிரிச்சாங்க...என் வாத்தி கண்ணு மட்டும் விஜயகாந்த் கண்ணு மாதிரி செவப்பா ஆச்சு... என்னை தீவிரவாதிய பார்கற மாதிரி பார்த்தார்...கண்ணுல அவ்வளவு கொலைவெறி...என் சீட்டுக்கு போய், பக்கத்துல இருந்த என் நண்பனிடம், "என்னடா தப்பா?நான் வடக்கு பக்கம் தானே காட்டினேன்" னு பரிதாபமாய் கேட்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "நீ ஆப்ரிகாவோட வடக்குலே  காட்டினே" ன்னு சொன்னான்....இந்திய வரைபடம் வைக்காம, உலக வரைபடம் வச்சது என் வாத்தி தப்பு...நான் என்ன செய்ய? ஆனாலும், எனக்கு ஒரு சின்ன டவுட் இருந்தது...என்னடா இந்தியா பெருசா இருக்கே? கீழ வேற இலங்கையே காணோமேனு தோனுச்சு ஒரு டவுட்டோடதான் காட்டினேன்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......   சரி விடுங்க வெகுளித்தனமாவே இருந்திருக்கேன்...

சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... Guatemala  வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் நடுவே உள்ள ஒரு சின்ன நாடு. கரிபியன் மற்றும் பசிபிக் கடல் சூழ்ந்த நாடக இருப்பதால், அழையா விருந்தாளியாக பூகம்பம், கடுஞ் சூறாவளி போன்றவைகள் வந்து போகும்; மேலும் ஆங்காங்கே எரிமலைகள் வெடித்து, அப்பபோ கொஞ்சம் தீக்கொழம்பு வெளியேறும்... மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை.... [இதுக்குமேல என்னத்த பயப்படறது...]கொஞ்சம் சூடு அதிகமா இருந்தா சிக்கன் கொழம்புகே பயப்படற எனக்கு தீக்கொழம்பு  தேவையா? [என்ன கொடும சரவணா!!!] முன்பு  ஸ்பெயின் ஆதிக்கம் இருந்ததாம் ஆனால் இப்போது அங்கே mexicans தான் இருகிறார்கள்...ஸ்பானிஷ் தான் அங்கு பேசுகிறார்கள்...அபீசியல் language ஸ்பானிஷ் தான்..  எனக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை 'அடியோ சாமிகோ' அதுவும் முதல்வன்லே சுஷ்மிதா சொன்னதால தெரியும்...அங்குள்ளவர்களுக்கு இங்கிலீஷ் அவ்வளவா வராது...சிலருக்கு அவ்வளவும் வராது ...சுருக்கமா சொன்னா விக்ரம் படத்துலலே வர 'சலாமிய' நாடு மாதிரி.. ஜனகராஜ் மாதிரி என் கூடவே ஒருதன் இருந்தான்....அவன் தான் என் translator . நான் அவன்கிட்ட இங்கிலீஷ் லே சொல்ல அத அவன் ஸ்பானிஷ்லே அவங்களுக்கு புரிய வச்சு, அவங்க சொல்றத எனக்கு இங்கிலீஷ் சொல்ல ஒரே காமெடி தான் போங்க...Client கூட நேருக்கு நேர்  பேசினாலே ப்ராஜெக்ட் முடிய லேட் ஆகும்,  இதுல இதுவேறைய???

வழக்கம் போலவே இந்த முறையும், தங்குவதற்கு ஹை கிளாஸ் ஹோட்டல்,,,நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்லாவே இருந்தது....சகலமும் இருந்தது இந்த ஹோட்டல் லே...இந்த படத்துல நீங்க பார்க்கறது நான் தங்கி இருந்த ஹோட்டல், Barcelo   நான் இந்த ஊரை அமெரிக்காவின் அத்திப்பட்டினு சொல்வதற்கு காரணமுண்டு... முதல் நாள் வேலைக்கு சென்றதும், customer ஊர பத்தி பேசும்போது, ஆபீஸ் ஜன்னல் வழியா எரிமலைய காட்டினார்...அய்யோ இவ்வளவு கிட்ட இருக்கா? னு கேட்ட போது, என்ன இதுக்கு போய் பயபடுற; இந்த ஊர்லே இயற்க்கை உபாதைகள் அதிகம்...போன மாசம் கூட நிலநடுக்கம் வந்தது...நீ 2 வாரம் இருக்கலே கிளம்பறதுக்குள்ள ஒரு தடவ பார்க்கலாம்" என்றார்..அடப்பாவி , நிலநடுக்கம் வரர்த நமிதா வரமாதிரி சொல்றே நெனச்சிட்டு வந்துட்டேன்..  இப்போ இருக்க கோடேமலா version 3
இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ பூகம்பத்துல அழிந்து பிறந்த மூன்றாவது கோடேமலா தான் இது.... அடிக்கடி அழிந்து பிறப்பதால் நான் இதற்கு அத்திப்பட்டினு பேரு வச்சேன். [என்ன புத்திசாலித்தனம்] ஹி ஹி  ஹி ...இந்த படத்துல (இடப்பக்கம்) பார்க்கறது பழைய கோடேமலா sample ...பூகம்பத்தால் அழிந்துபோன, இத மாதிரி இடிஞ்சி போய் இருக்குற இடம் தான் அங்கே இப்போ tourist spot ...இந்த இடத்தோட பேரு 'AntiGua ' ... இந்த படத்துல இருக்கறது ஒரு restaurant பழமை அழியாம இருக்கணும்னு இங்கே இருக்க, இடிஞ்சிபோன  வீடுகளை கொஞ்சம் ஆல்டெர் பண்ணி ஹோட்டல் கட்டி இருக்காங்க.. "படுபாவிகளா... சாப்பாட்ல பல்லி விழுந்தாலே தாங்காதுடா என் பாடி...இங்கே உட்கார்ந்து  சாப்பிட்டா,  பில்டிங்கே சாப்பாட்லே விழுமே..." இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாப்பிட்டேன்... பின்னர் இரவு முழுவதும்  ஊரைச சுற்றி பார்த்தேன்...மேல உள்ள இன்னொரு படம், AntiGua பகல்லே எடுத்தது.. பின்னாடி பாருங்க எரிமலையை... ஆத்தாடி.... வித்தியாசமான அனுபவம்... இன்னொரு வித்யாசமான அனுபவம் என்னனா, நான் முதல்முறையா முழுக்க முழுக்க வெள்ளகார பசங்க அதுவும் டீன் ஏஜ் பசங்களோட வேலை செய்த அனுபவும்....அரசல் புரசலா சில விஷயத்த கேள்வி பட்டு இந்த ஊரு பசங்கலபத்தி, நெறைய தப்பான அபிப்பிராயம் இருந்தது... பழகின பிறகு, அடடா இவங்களும் நம்மள மாதிரி தான்னு தோனுச்சு...'உதாரணத்துக்கு...15 வயசுக்கு மேல இந்த ஊரு பசங்க, பொண்ணுங்கலாம் பெற்றோரை விட்டு தனியா பிரிஞ்சி வந்துடுவாங்க....பந்த பாசம்லா கொஞ்சம் கம்மி என்பதெல்லாம் நான் தப்பா எடுத்த சில விஷயங்கள்....வெகு சிலரே, அதுவும் கட்டயாமிருப்பின் பெற்றோரை பிரிந்து இருகிறார்கள்...மற்றபடி இவர்களும் தங்கள் பெற்றோர் மற்றும் கூட பிறந்தவர்கள் மீது வெகுவும் பாசமாகவே இருக்கிறார்கள்...என்ன நம்ம ஊரு பெற்றோர்கள் மாதிரி இங்கு ஊட்டி ஊட்டி வளர்க்கறது இல்ல..பிள்ளைகள ரொம்பவே தனிச்சையாய் முடிவுஎடுக்க விடறாங்க....அத சிலதுங்க தப்பா எடுத்து தறிகெட்டு அலையுதுங்க....வெள்ளகார புள்ளைங்களுக்கும் நம்ம ஊரு கலாசாரம் பத்தி நெறைய நல்ல விஷயங்களும் சொன்னேன்..[நீயான்னு கேக்காதீங்க..அப்பப்போ நான் நல்லவன்தான்] முக்கியமா பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணம், கூட்டுகுடும்பம் இதெல்லாம் ரொம்பவே ஆச்சர்யமா கேட்டாங்க...எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியா ஒருத்தன் கேட்ட கேள்விய பார்த்து எனக்கு அழுகாச்சியே வந்த்டுச்சு..எப்படி ஒரு டெஸ்ட் டிரைவ் கூட பண்ணாம, உன் parents சொல்ற பொண்ணெல்லாம் கல்யாணம் பண்றீங்கன்னு? கேட்டான். அடப்பாவி இதென்ன ஹோண்டா காரா? ஓட்டி பார்த்து வாங்கறதுக்கு?

இந்த ஊர்லே நெறைய விஷயங்கள் நம்ம ஊர ஞாபக படுத்துத்து. 'Latin அமெரிக்கா'  என்பதால், இதுவும் அமெரிக்காவா என்றால் பல விஷயங்களில் 'நோ'.. உதாரணத்துக்கு, இங்கே Gallonக்கு பதில் லிட்டர் தான் use பண்றாங்க..கிலோமீட்டர் அளவுகளும் நடைமுறையில் உள்ளது. முக்கியமா trafficla நம்ம ஊர அப்படியே follow பண்றாங்க....ஒன்னையும் மதிக்கறதில்ல.... ரோடு எல்லாம், நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு, lanes இருந்தாலும் அதெல்லாம் சும்மா தமாஷுக்கு தான்..ஒரு சக்கரம் இந்த லேன் அண்ட் மற்றொன்று இன்னொரு லேன் தான்... இந்த படத்துல பார்த்தா தெரியும் நான் ஏன் நம்ம ஊர் போல தான் சொல்ற காரணம். நம்ம ஊரு பெட்டிகட மாதிரி ரோட்டோரமா நெறைய கடைகள்...

மற்றொரு சுவாரசியமான, கிளுகிளுப்பான  விஷயம்...பொதுவா இங்கு ஒருவரை அறிமுகப்படுத்தும் போது பசங்க கைகொடுகறாங்க சில சமயம் தழுவிக்கிறாங்க... ஆனால், பொண்ணுங்க ஒவ்வொரு சமயமும், கன்னத்தோடு கன்னம் வச்சு நச்சுனு ஒரு கிஸ் பண்றாங்க ...[அடடா....] இந்த deal எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...ரெண்டு வாரமா கன்னத்த  கழுவ மனசே வரலனா பார்த்துகூங்களேன்...

சாப்பாடு கொஞ்சம் கொடுமையான விஷயம்...ரெண்டு வாரமா சோறு இல்லாம grilled சிக்கன், பிச்சா,பர்கர்னு காலத்த ஓட்டினேன்...லஞ்சச்கு 4 கோஸ் இலைகளும், 4 துண்டு சின்ன காரட் , ஐஸ் டி யும் கொடுகரானுங்க....அப்போகூட எனக்கு வலிகளா, ஐஸ் டி பிடிக்காம கொஞ்சூண்டு வச்சதுக்கு, ஒருத்தன் fulla குடிங்க ஜீரணத்துக்கு நல்லது சொல்றான்...அடேய் ஒரு முழு ஆட்டையே பார்ட் பார்ட் பிரிச்சி மெய்யற ஆளுடா நான்...யானை பசிக்கு சோள பொரியா...

மற்றபடி ஊர சுத்தி பார்க்கலாம் னா எரிமலைய தவிர வேற ஒன்னும் இல்ல...ஆனா ஒண்ணுங்க, கோடேமலா சென்றுவந்த ஒரே இந்திய குடிமகன் நானாகத் தான் இருப்பேன்னு நினைக்கிறன்...ஒரிஜினல் அத்திப்பட்டிலே தல, 'நான் தனி ஆளு இல்ல, தனி ஆளு இல்ல' ன்னு  சொல்லுவார், ஆனால் அமெரிக்காவின் அத்திப்பட்டிலே இந்த (தரு)தல  'நான் தனி ஆளு' ன்னே சொல்லிட்டு திரிஞ்சேன்...ஸ்டார்ட் பண்ணதுல இருந்து திரும்ப வர வரை ஒரு இந்தியர்களையும் பார்க்கவே இல்ல[ இந்திய பாஸ்போர்ட் இருந்தா கோடேமல் செல்ல  விசா தேவை இல்லைன்னு சொல்லும்போதே நான் உஷார் ஆகி இருக்கனும்] பரவாலே போனதுக்கு பலனா 40 - 50 வெள்ளைக்கார பொண்ணுக கிஸ் கடச்சதுள்ளே... வாழ்க கோடேமலா !!!
Author: Sathish
•7:52 PM
நம்ம ஊருக்கு வந்தாலே போதும்! நேரம் போறதே தெரியாது...இப்போ தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே நாள் ஓடுது... அமெரிக்காவில என்ன தான் ஆடம்பர வாழ்கையும், பிரம்மாண்டமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நம்ம ஊரோட, நம்ம மக்களோட இருக்குற ஒரு மனநிம்மதி அங்க இல்ல என்பத அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.

ஆனாலும் சில நேரத்துல, நம்ம மக்கள் நடந்துக்கிற சில விஷயங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு. படிச்சவன், படிக்காதவன் எல்லோருமே சில விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது மனசு ஏத்துக்க மாட்டேங்குது..ஏண்டா, US போய்வந்தா இப்படி தான் பேசுவியானு சொல்ற நண்பர்களே, இந்த பதிவு மூலமா நான் பேசறது நான் ரொம்ப நாளா  வெறித்தனமா யோசிக்கிற, நடைமுறை படுத்தனும்னு நெனைக்கிற ஒரு விஷயம்.

நம்மில் பலருக்கு "சுயஒழுக்கம்" சற்று மங்கி போய்டுச்சோனு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..சுயஒழுக்கம் என்றால் தம் அடிகறதும், தண்ணி அடிக்கறதையும் தவறு என சொல்லி 'குடி' மக்களிடம் அடி,உதை வாங்க நான் தயாரா இல்ல...அடுத்தவனுக்கு தொல்ல இல்லாம நீ என்ன வேணும்னா பண்ணுங்கறது தான் என்னோட கூற்று...தம் அடிச்சு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம புகைய குறிபார்த்து பக்கத்துல நிக்கறவன் மூஞ்சில உடறத பார்த்தா அந்த சிகெரேட்டே அவன் வாயில இருந்து புடுங்கி, திருப்பி நெருப்பு இருக்க பக்கத்த அவன் வாயில் திரும்ப வைக்க வேண்டும் என்று வெறித்தனமா யோசிக்குது மனசு...அதே மாதிரி பொது எடத்துல தண்ணியடிச்சிட்டு விழுந்து கெடகிறவன் பார்த்தாலும், சமயத்துல கோவம் அதிகமா வருது...அது அவர்களோட அறியாமைங்கறதா, இல்ல திமிருன்னு சொல்றதானே தெரில. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயஒழுக்கத்தை அரசாங்கம் கற்றுக் கொடுக்கணும் நெனைக்காம நாம் ஏன் சில நெறிமுறைகளை பின்பற்றி அதனை வரையறுத்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாதுங்கறது தான் என்னோட கேள்வி. நான் தம் அடிகல, தண்ணி அடிக்கலனு மார் தட்ரவங்க  எல்லாம் ஒழுங்கா நடந்துக்கராங்கனு அர்த்தம் பண்ணிக்க கூடாது...இது தப்புன்னு தெரியாமலேயே நெறைய தப்பு நடக்குது..உதாரணதிற்கு, நான் என்னோட  தாய்மண்ணே வணக்கம்...( பாகம் 1 ) பதிவுல சொல்லி இருப்பேன்...விமான நிலையத்துல ஒவ்வொரு காருக்கு பின்னாடியும், பெட்டிய தூக்கி வர உதவுற கார்ட் நிக்குது...அங்க வர முக்கால்வாசி பேரு படிச்சவனாவோ அல்லது உலக அனுபவம் உள்ளவனாவோ தான் இருப்பான். ஆனால் அவங்களுக்கும் இது ஒரு தவறான விஷயமாவே தெரிலே... அத கொண்டுபோய் உறிய எடத்துல வைக்கணும்னு ஏன் தோனமாட்டேங்குது? சும்மா அரசாங்கத்தையும் மற்ற இலாக்காகளையும் குறை சொல்வதை விட்டுவிட்டு ஏன் நாம ஒழுங்கா நடந்துக்க கூடாது? சின்ன விஷயங்கள ஆரம்பிக்கலாமே, நாளடைவில அதுவே பல விஷயங்கள திருத்துற ஒரு முதற்படியாக இருக்குமே... ஒன்னுமில்லேங்க சென்னை லே இருந்த நேரத்துலே நான் கவனித்த ஒரு விஷயம், டிராபிக் சிக்னலே நம்ம ஆளுங்க தமாஷா எடுக்கறாங்க....ஒரு நாள் நான் சிக்னலே நிக்கறேன்...எனை கடந்து எத்தன வண்டி போகுது...அதிலும் சில பேரு ஒரு லுக் வேற விடறானுங்க...அடேய் ரெட் சிக்னல் டா...நில்லுங்கப்பா....ஒரு PTC பஸ் பின்னாடி வந்து ஹோர்ன் அடிசசு கெட்ட வார்த்தைலே திட்டறான்..எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுச்சு...உண்மைய சொல்லப்போனா என்ன மாதிரி யோசிக்கிறவங்க நெறைய பேர் இருக்கோம்...ஆனா அதற்கான முயற்சிய எங்கே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சியே நாளா கடத்துறோம்....இன்னும் சில பேர் சொல்ற காரணத்துக்கு எனக்கு, என்ன பதில் சொல்றதுன்னு புரியல...என்னோடநெருங்கிய நண்பன் "பிரதீப்"...ஹைதராபாத்லே இருக்கான்...ரொம்ப நல்ல பையன்..நல்ல திறமைசாலி...[அப்புறம் உனக்கு எப்படி நண்பன்..ஹி ஹி ஹி ] "மச்சி இது பொது பிரச்சனைடா நீ ஒழுங்கா இரு...உன்ன பார்த்து மற்றொருவன் ட்ராபிக் ரூல்ஸ் மதிப்பான் சொன்னா..." போட லூசுப்பயலே ! நான் மட்டும் நின்னா அடிச்சி தூக்கிடுவான்..அப்புறம் எப்படி இன்னொருவன் என்ன பார்த்து நிப்பான்னு" கேக்கற கேள்விக்கு சத்தியமா எனக்கு பதில் தெரிலே...சின்ன சின்ன விஷயத்துல ஆரம்பிக்கிற தப்பு தான் நாளைக்கு பழக்கமாகவே மாறுது. சின்ன சின்ன நல்ல விஷயங்கள கடைபிடிப்போமே....அதை பழகிப்போமே!!! நான் என் நண்பர்களோட நீண்ட நாட்களாக ஒரு பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருகிறேன்...ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயம் உருவாக முதலில் தனிமனித ஒழுக்கம் - "சுயஒழுக்கம்" ரொம்ப அவசியம் என்பது என்னோட கருத்து...சுயஒழுக்க கோட்பாடுகள் சிலவற்றை வரையறுத்து, அதை கடைபிடிக்கும் ஒரு குழு ஒன்று ஆரம்பிக்க வேண்டும். அதுல இன்னிக்கு அஞ்சு பேரு, ஆனால் அந்த ஆஞ்சு பேரும் 100% அந்த கோட்பாடுகளை மதிப்பவராக இருக்க வேண்டும்...அவர்கள் இந்த குழுவின் நோக்கங்களை மற்றவர்களுக்கு எடுத்துசொல்லி ஐந்தை, ஐநூறாக, ஐந்தாயிரமாக உயர்த்த முயற்சிக்க வேண்டுமென்பது என்னோட குறிக்கோள்...நான் இதை பற்றி யார்கிட்டே பேசினாலும்...எல்லோரிடமும் ரொம்ப ஆர்வம் இருப்பது சந்தோஷமா இருக்கு...அவங்களுக்குள்ள இருக்க ஆசையும், ஆக்கமும் நல்ல சமுதாயம் வராதா என்ற ஏக்கமும் என்னால் உணர முடிகிறது...சும்மா orkut , Facebook னு வச்சிக்கிட்டு  போட்டோ பிடிச்சிபோடவும் கடலை போடவும் நேரத்தை வீணாக்குவதிற்கு பதில் அதே மாதிரி ஒரு community நல்ல பொது விஷயத்திற்கு பயன்படுத்த ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்பது என்னோட ஆசை..பார்போம் எவ்வளவு சீக்கிரம் அதை நடைமுறை படுத்துகிறேன் என்று ...

மற்றபடி...வழக்கமான செண்டிமெண்ட் காட்சியுடன் என் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் இருந்து விடை பெற்று..US திரும்பினேன்...ம்ம்ம் இனி அதே மேனேஜர், அதே ப்ராஜெக்ட், வால்மார்ட், இந்தியன் grocessory ன்னு நாள கடத்தனும்..US திரும்பும்போதும் அதே விமானம்தான், அதே வசதிதான் ஆனால் கண்களில் சந்தோஷம் இல்லை கண்ணீர் தான்!!!





Author: Sathish
•11:15 PM
சிங்கார சென்னையிலே...

சென்னைக்கு வந்துட்ட போதும்....சாப்பாடு பின்னி எடுக்கும்...சாதரணமாவே எங்க வீட்லே ரெண்டு வகை குழம்பு, ரெண்டு வகை பதார்த்தம் இருக்கும். இதுலே பல நாள் சென்னை சாப்பாடு இல்லையா...சோ அம்மா நான் எப்போ us லே இருந்து வந்தாலும் நடப்பன, பறப்பன, ஊர்வன என சகலமும் என் தட்லே செஞ்சி வச்சிடுவாங்க ...

ஒரு ஞாயிற்றுகிழமை நல்லா மூக்கு முட்ட தின்னுப்புட்டு எங்க வீட்லே எல்லோரும் பேசிக்கிட்டிருகோம்...அப்போ எனக்கு ஒரு போன்....என்னோட சகாசெந்தில்.... "காலேஜ்  அலும்னிடா!! நீ  வந்த நேரத்துல  கரெக்டா வந்திருக்கு... போலாம் மாப்ளே" என்றான்... "நீ வீட்லே இருந்தாலே எவனுக்காவது மூக்குல வேர்க்கும்.... ஊர சுத்திக்கிட்டே இருன்னு"  அம்மாவோட பொலம்பல்..[இதெல்லாம் கேட்டு  எவ்வளவு நாளாச்சு ...] இன்னொரு பக்கம் நான் கட்டிகினவ....விஜகாந்த் மாதிரி கண்ணு ரெட்டாகி, தீவிரவாதிகள பார்கற மாதிரி ஒரு பார்வை...எல்லோரையும் சமாளிச்சு கார் எடுத்துகிட்டு கெளம்பியாச்சு...

மனசு ரொம்பவே என்ஜாய் பண்ணுச்சு....SSN காலேஜ், கேளம்பாக்கம்...இன்னமும் entrance exam எழுதின நாள் நினைவிருக்கு...இதே செந்திலும் நானும் தான்...மச்சீ admission கெடச்சா சேருவியா ன்னு அவன் கேட்க போ மாப்ளே இங்கேயானு கேட்டவன் நான்...ஒரே காரணம் என் வீட்லே இருந்து 140 கிலோமீட்டர் ஒரு நாளைக்கு போகணும்..வேலைக்கே ஆகாது....எனக்கெனவோ அண்ணா university oxford னு வரிசைலே நிக்கற மாதிரி ஒரு தெனாவட்டு....கடைசில எங்கேயும் சீட் கெடைக்காம இங்கே அடிச்சிபுடிச்சி ஓடி வந்தேன்... அன்று பார்த்த காலேஜ்க்கும், இப்பவும்  நிறைய மாறுதல்கள்....பட்டைய கெளப்பி இருக்காங்க...நெறைய ப்ளாக்குகள், இன்டோர் ஸ்டேடியம் னு அசத்தி வச்சிருக்காங்க...
இப்போ சிட்டிலே டோப்மொஸ்ட் காலேஜ் னு பேரு...US லே இருக்க நம்ம ஊர் மக்களுக்கு SSN சொன்னா ஒஹ்ஹ சீட் கெடைக்கறது ரொம்ப கஷ்ட்டம் ஆச்சே ன்னு சொல்லும் போது.."ஆமா ஆமா Entrance , GD ன்னு ரொம்ப இருக்கு" நல்ல ஸ்கோர் பண்ணனும் " னு ஒரே பந்தா விடுவேன். [எனக்கு மட்டும் தானே தெரியும்..காலேஜ் தெறந்த புதுசு லே 35 பேரு எழுதி 30 பேருக்கு சீட் கெடச்ச ரகசியம்...ஹி ஹி ஹி ] என்னோட வகுப்புக்கு சென்றதும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு...நேராக கடைசி சீட்டில் சென்று உட்கார்ந்தேன்... என்னோட சீட்....சற்றே கண்மூடி பழைய நினைவுகள்.. என் வலப்பக்கம் என்னோட நண்பன் ஷ்யாம் ...எவ்வளவு கலாட்டா, ஆர்பாட்டம், சண்டைகள், சமாதானங்கள் ....எழுந்து வர மனமில்லை......முத்தமிட்டேன்...என் மேஜையை!!! ஒவ்வொருவருக்கும் பள்ளிப் பருவமும், கல்லூரிப் பருவமும் தான் வாழ்கையின் வசந்த காலங்கள் என்பதை மீண்டும் நினைவுகூர்ந்தேன்..... நான் படித்த கல்லூரியின் வளர்ச்சி என்னை ரொம்பவே ஆச்சரிய படுத்தியது.....இந்த நேரத்தில், என் கல்லூரிக்காக பணி புரிந்த, புரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் என் பணிவான வணக்கங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இருக்கும்போது கண்டிப்பாக பள்ளியையும் கல்லோரியையும் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டும்!!!
அடுத்து, என் juniors ...எவ்வளவு தான் அடிச்சாலும் வலிகலன்னு சொல்லற பசங்க...படிக்கற காலத்துல ராக்கிங்லே படுத்தின பாட்ட இன்னமும் மறக்வில்லை!!! எல்லோரும் ரொம்ப நல்லாவே செட்டில் ஆகி இருக்காங்க....பாசக்கார பசங்க இன்னமும் மரியாதை கொடுக்கறாங்க!!! எல்லோரும் சேர்ந்து staffs பிளாக் பக்கம் போனோம்.... சத்யம் பண்ணாலும் நான் US லே வேலை செய்யறதா ஒருத்தரும் நம்ப மாட்டேன்கறாங்க...அந்த ரேஞ்சுக்கு படிச்சோம் லே!! என்னோட mam ஒருவரும் வரல [நான் வரேன்னு தெரிசிருகுமோ!!!] ராம்கி சார்!! பசங்களோட ரொம்ப friendly பழகற சார்..எப்போவாவது கிளாஸ்க்கு வரதால என்னோவோ எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்....நல்ல அரட்ட அடிச்சோம்.... படிக்கிற காலத்துல நான் பண்ண அயோக்கியத்தனம், முள்ளமாரிதனம் எல்லாத்தையும் இன்னுமா மறக்காம சொல்லி காட்டனும்.....படிக்கிற காலத்தில எனக்கு நல்லா வர ஒரே விஷயம் காது கிழியற மாதிரி விசில் அடிக்கறது..முன் சீட்லே உடகர்ந்திருகிற பொண்ணுங்க எல்லாம் சும்மா அலறியடிச்சி ஓடுவாங்க....டான்ஸ் என்ற பேர்லே விஜய் பாட்டுக்கு போட்ட ஸ்டெப்பா போட்டு டான்ஸ் ஆடறது, ஸ்போர்ட்ஸ் என்ற பேர்லே கிரௌண்ட் லே சண்ட போடறதுன்னு....சினிமா லே காலேஜ் னு காமிச்சு பண்றத எல்லாம் உண்மையாவே பண்ணது எங்களோட செட் [பொல்லாத ஷேவிங் செட்...] நெறைய விஷயங்கள்...பேசிகிட்டா இருந்ததுல நேரம் போனதே தெரில....அடுத்த முறை சென்னை வரும்போதும் கண்டிப்பாக கல்லூரி சென்று பார்க்கவேண்டும் என்ற முடிவுடன் சற்றே இறுகிய மனதுடன் வீடு திரும்பினேன்.





Author: Sathish
•8:04 AM
கடந்த சில ப்ளாக் ஆரம்பிக்கும் போதே என்னை நான் திட்டிக் கொண்டும், மாதத்திற்கு ஒன்னு எழுதற உனக்கு எதுக்கு ப்ளாக் அப்படி,இப்படின்னு ஆரம்பிச்சு உங்கள முகம் சுளிக்க வைக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துல, என்னை திட்டிக் கொள்ளாமல் துடங்குகிறேன்.. டைட்டில் பார்த்ததுமே எல்லோருக்கும் ஒரு பொறி [அவல், வேர்கடலை...அடேய் போதும் டா ...முடியல...] தட்டி இருக்கும்.. Yes ...ஆமா.. This is about our country... இது நம்ம நாட்டை பற்றியது...[எல்லோரும் குரல் வச்சி மிமிக்ரி பண்ணுவாங்க நீ எழுத்த வச்சி...மேஜர் சுந்தர்ராஜனை ஞாபக படுதுடியப்பாவ் ....] கடந்த 5 வாரமா நான் சிங்கரா சென்னையில் இருந்தேன். அதான் ப்ளாக் கிட்ட கூட வர முடியல அதற்காக என் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரே காரணத்தால்  இந்த ப்ளாக்ஐ மூன்று பாகங்களாக எழுதி தள்ளி உங்களை இரட்டிப்பு [முரட்டிப்பு ...மூணு லே அதான்...] சந்தூஷதில் மூழ்கடிகப்போகிறேன்..[ யாரும் தப்ப முடியாது சொல்லிபுட்டேன்]

என் தாயகப்  பயணம் வழக்கம் போல கத்தார் airways இல் துடங்கியது. அப்பாவின் முதல்வருட நினைவு தினம், சொந்த வேலையாக கடந்த நான்கைந்து மாதமாக சென்னையில் இருந்த என் மனைவியை திரும்ப அமெரிக்க அழைத்து வருவது என பல்வேறு காரங்களுக்கான பயணமிது...சாதரணமாக துடங்கிய பயணம் Doha வில் கலை கட்டிடுச்சு... அடிக்கடி கத்தார் ஏராகப்பல் லே போனதால தோஹா டு சென்னை பிசினஸ் கிளாஸ்க்கு என டிக்கெட் மாற்றினார்கள். free யா [பின்ன காசு கொடுத்து போற பரம்பரையா  நீ???] ஒரே விமானத்துல இவ்வளவு வேறுபாடா?? Economy கிளாஸ் லே விமானம் கெளம்பி அரைமணி நேரம் பொறுத்துதான் ஏதாவது கொடுப்பாங்க...இங்கே சீட்லே உட்காரர்த்துக்கு முன்னாடியே, ஒரு அம்மணி [அழகான, இளமையான, எடுப்பான தோற்றத்துடன் ....] பலவகையான ஜூஸ் ஒரு தட்ட்லே வச்சி நிக்கறா...சீட்லே உடகார்ந்து பெல்ட் போட்டு..செட்டில் ஆகற வரை பக்கத்துலேயே நிக்கறா...நான் decentaana ஆளா ...சோ 10 - 15 நிமிஷத்துல சீட் பெல்ட் போட்டு ஜூஸ் எடுத்து அனுப்பிட்டேன்... ஹி ஹி ஹி ..இங்கே இருந்து retire ஆகற கேஸ் தான் economy கிளாஸ் கு போறாங்க நினைக்றேன்... அங்கே ஒன்லி ஆயாஸ் available...ஹ்ம்ம்... சீட் நல்ல  இடவசதியோட சூப்பெரா இருந்தது.. பணம் எனென்ன வேலை செய்யுது? சகல வசதியுடன் சென்னை வந்து இறங்கினேன். எப்போதுமே கடைசியாக உட்கார்ந்து [ஸ்கூல் லே ஆரம்பிச்சது...] விமானத்துல இருந்து வெளியே வரவே அரை மணி நேரமாகும். 18 மணிநேரம் அமைதியா பயணம் செய்றவன் இந்த அரைமணி நேரம்தான் நான் முன்னாடி, நீ முன்னாடி னு அடிச்சிகிட்டு இறங்குவனுங்க....இந்த முறை முதல் ஆளா நான்தான் விமானத்த விட்டு வந்தேன்...ஸ்கூல் லே  கடைசி பீரியட் முடிஞ்சி வெளியே முதலா வர சந்தோஷம்... 

விமானத்தை விட்டு விமானதளத்திற்கு போகும் நடை பாதையின் பாதி வழியில், என தம்பி, தங்கை, மச்சான் மூணு பேரும் வழியில் நின்று வரவேற்கிறார்கள். எனக்கு சரியான ஆச்சர்யம்...இவளவு தூரம் எப்படி வந்தார்கள்??? செக்யூரிட்டி பிரச்சனைகள் வரதா? எப்படி இவளவுதூரம் விமானத்திற்கு அருகில் அனுமதிகிறார்கள்??? யோசிப்பதற்குள் காவல் துறையில் பனி புரியும் என cousin வாங்க வாங்க என வரவேற்கிறான்... பணத்திற்கு பிறகு இரண்டாவதாக நான் கவனித்த விஷயம் Recommendation ...என்ன..ஷங்கர் படம் மாதிரி அங்கங்கே ஒரு பஞ்ச், பாஸ் னு நினைகறீன்களா? வரும் ப்ளாக் லே அதை பற்றி நிறைய பேசுவோம்...

வெளியே வந்ததும் நம்ம மண்வாசனை..background லே சுவர்க்கமே என்றாலும் ...அது நம்மோர போல வருமா? " னு ராஜாவின் குரல் கேட்ட  ஒரு பீலிங்...மனசுக்குள் இனம் புரியாத ஒரு கிளர்ச்சி....அடுத்த நொடி..என்னோட அப்பாவின் கவனம்...என்னை வரவேற்க எப்போதுமே வந்து ஆவலோட காத்துக்கொண்டிருக்கிற ஜீவன் இப்போ என் கிட்ட இல்ல...வெளியே காட்டிக் கொள்ளவில்லை நான்....

ரொம்ப நாளுக்கு பிறகு எங்க எஸ்டீம் காரை பார்த்து ஒரு ஹாய்..ஒவ்வொரு காருக்கு பின்னாடியும் பெட்டிகளை நகர்த்தி வர உதவும் கார்ட்; ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்து சின்னதா ஒரு எரிச்சல்...என் தம்பி கிட்ட இந்த கார்ட் எங்கே விடறதுன்னு கேட்டு முடிகறதுக்குள்ள அவன் பக்கத்துக்கு கார் பின்னாடி தள்ளி விட்டான். அவனை ஒரு அதட்டு அதட்டிவிட்டு கொண்டு போய் அத விட வேண்டிய எடுத்துல விடு சொன்னா " நீங்களே போய் பார்த்து விடுங்க " னு சொன்னான். நானும் கார்ட் எடுத்து பார்கிங் லாட் லே முழுக்க தேடி கடைசில "புறப்பாடு" போர்டு கிட்ட போய் விட்டேன். இங்கே வால்மார்ட் முதற்கொண்டு எல்லா கடைகளிலும் ஒவ்வொரு வரிசையில்லும் கார்ட் கலெக்டர் இருப்பது போல் ஏன் இங்கு வைக்க கூடாது? சின்னதா ஒரு கோவம்...இப்போ நான் படுற கோபமாகட்டும், எரிச்சல்லாகட்டும் எல்லோருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்து சீன போடுறான்னு தோனும்...சோ தருணம் வரும் வரை காத்திரு ன்னு என்னகே சொல்லிக்கொண்டு...மீண்டும் குடும்ப மற்றும் நண்பர்கள் கதைக்கு என் கவனத்தை திருப்பிக் கொண்டேன்....
வீட்டை நெருங்கி விட்டாச்சு...கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் வீடு...வழக்கம் போல ஆரத்தி எடுத்து கட்டித் தழுவிய அம்மா, சந்தோஷதில் மனைவி, என உடன்பிறப்புகள், மாமா என மழலையோடு கூப்பிட்டு, என்னை அள்ளி அணைத்த என தங்கையின் குழந்தை ப்ரீத்தி...மகிழ்ச்சி களிப்பில் மூழ்கினேன். 18 மணி நேர களைப்பு மறைந்தது நொடிப்பொழுதில்... கதவோரம் நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்த என மனைவியை பார்த்து ரொமாண்டிக் லுக் ஒன்னு வேறு...[டேய்..டேய்...போதும்டா.... இந்த நேரத்துல நாய் சேகர் ரொமாண்டிக் லுக்கா னு கிண்டலு, ஏகதாளம், நையாண்டி பண்றவங்களை வன்மையாகக ண்டிக்கிறேன்..]....நிறைய நிகழ்வுகள்... அனுபவங்கள்...முடிவுகள் என பல விஷயங்கள் இனி வரும் பதிவுகளில்..... தாய்மண்ணே வணக்கம்..பாகம் 2 ...விரைவில்.....[கண்டிப்பாக 2 மாத்தமாகாது....]

Author: Sathish
•7:38 AM
என்னுடன் பழகியவர்களுக்கு தெரியும் நான் ரொம்ப ஜாலியான, கலகலப்பான பேர்வழியென்று..எதையுமே சீரியசா எடுத்துக்கொள்ளாத நான் இந்த ப்ளாக்லே சில கஷ்டமான நிகழ்வுகளையும் பரிமாறிக் கொள்வதற்கு வருந்துகிறேன். 

2009 ஆரம்பிக்கும் போதே எனக்கு தீராத, என்றுமே மீள முடியா துயரத்துடன் ஆரம்பித்த வருடம்!!! எனதுயிர் நண்பன் ஷ்யாம் கேன்சர் ல் பெரும் அவஸ்தைப்பட்டு ஜனவரி மாதம் இவ்வுலகை விட்டு பிரிந்தான். ஷ்யாம்....எனக்கு கிடைத்த ஒரு வித்யாசமான நண்பன். ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இல்லாமல், தவறியும் யாரையும் புண்படுத்தாமல், சிரிக்க சிரிக்க பேசி எங்களை மகிழ்வித்தவன். எல்லோருக்கும் ரொம்பவும் பிடித்த ஒரு கேரக்டர். அவனுடன் பழகிய நாட்களை என்றுமே என்னால் மறக்க முடியாது.மரணம் 29 வயதில் அவனை அணைத்துக்கொண்டது! நீ எங்களை விட்டு பிரிந்தாலும் உன் நினைவுகள் என்றும் எங்களை விட்டு பிரியாது நண்பனே..

முதல் வலியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடி..அப்பட்டமான அடி... என் அப்பா பிப்ரவரி மாதம் என்னை விட்டுப்  பிரிந்தார். தாங்கமுடியவில்லை என்னால். வீட்டிற்கு மூத்த பையன் என்பதை முதல் முதல் உணர்ந்த நாள் பிப்ரவரி 3. என் அப்பாவை விட மிகச் சிறந்த ஒரு மனிதரை நான் கண்டதில்லை... தன் வாழ்நாளின் கடைசி வரை ஒரு சாதாரன அரசு அதிகாரியாக வேலை பார்த்து ஒய்வு பெற்ற ஒரு மாதத்தில் இப்படி ஒரு கோரச்சம்பவம்... மூன்று பேரை பெற்றெடுத்து அவர்களை ஒரு நல்ல நிலைக்கு ஆளாக்கி, திருமணம் செய்வித்து தன் வேலைகள் அனைத்தையும் முற்றிலும் முடித்துவிட்டு கண் மூடிவிட்டார் என் தந்தை..நான் எவ்வளவு தப்பு செய்தாலும், கோபப்பட்டாலும் ஒருவரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல் பார்த்து பார்த்து என்னை வளர்த்தவர் என் அப்பா... எங்களுக்காகவே வாழ்ந்தவர்..இன்று எங்களுடன் இல்லை.... 

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்..இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..." என்ற வரிகளின் அர்த்தம் என் மனதில் ஆழப் பதியவைத்தவர் என் அப்பா..

நம்மில் பலர் நாம் வந்த நோக்கத்தை இன்னும் அறியாமல், அதற்கான முயற்சியும் எடுக்காமல் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம்.  "வாழும் மனிதருக்குள் எத்தனை சலனம்....வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவர்களின் கவனம்..." கவனிக்ககூடிய கண்ணதாசனின் வரிகள்....

வாழ்கை...ஜனனதிர்க்கும் மரணத்திற்கும் இடையே கட்டப்பட்ட மிகச்சிறிய பாலம். அதில் எனைப்போன்ற கம்ப்யூட்டர் அலுவலர்கள்,
 "கூடு விட்டு ஆவி போயின் கூட வருவதென்பது ஒன்றும் இல்லை என்று நன்கு தெரிந்த போதும், வருங்காலத்தை எண்ணி..நிகழ் காலத்தை, இறந்த காலங்களாக்கிக் கொண்டிருக்கிறோம்". 

போகிற போக்கில் வாழ்வது வாழ்கையல்ல...போகிற பாதை உணர்ந்து போவது தான் வாழ்கை. வாழ்கையை வாழ கற்றுக் கொள்வோம்.  அதற்காக சன்யாசியை இருக்கச் சொல்லவில்லை...சராசரி மனிதனாய் இருந்தால் போதும். எடுத்த பிறப்பிற்கு பயனாய் நம்மை சார்ந்த சமுதாயத்திற்கு நம்மால் முடிந்த ஒன்று நம் பெயர் நிலைக்குமாறு செய்தால் போதும்... மண்ணில் பிறந்த அனைவரும் மகாத்மா ஆகவேண்டாம், மனிதனாய் வாழ்ந்தால் போதும்...

நான் 2009  திரும்பிப் பார்த்தபோது சில வாழ்கை உண்மைகளை உணர்ந்தேன்...சில இலக்குகளை மனதில் கொண்டு பயணிக்கப் போகிறேன்...2010 ல் நான் கடைப்பிடிக்க நினைக்கவிருக்கும் ஒன்று தொடர்ந்து எழுதுவது நிறைய படிப்பது... பிறக்கவிருக்கும் புது வருடம் புதுப் பொலிவை கொடுக்கட்டும் அனைவருக்கும்... புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.