Author: Sathish
•9:09 AM
வழக்கம் போல Sep 8th காலை எழுந்து thatstamil.com அலசுகையில் அதிர்ச்சியான செய்தி...நடிகர் முரளி மாரடைப்பால் இறந்தது...அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சக மனிதர், நன்கு பரிட்ச்யப்பட்ட நபர் திடீரென இறந்தது மனதை வெகுவே பாதித்தது...

ஒரு சில வாரங்கள் முன்புதான் Coffe with Anu நிகழ்ச்சியில் அவரையும். அவரது மகன் பேட்டியும் பார்த்தேன்...சின்ன வயசு, ஆரோக்யமான உடல் வாகு...அவருக்கா மாரடைப்பு? பூவிலங்கில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, மணிரத்தினத்தின் முதல் படமான, பகல் நிலவில் பலரது உள்ளங்களை கவர்ந்தவர் முரளி...அதன் பிறகு சில தொய்வு அவரது திரை உலக வரலாற்றில் இருப்பினும் மீண்டும் புது வசந்தம் மூலம் திரையுலகில் தனக்கோர் இடத்தைப் பிடித்தார் முரளி.

மைக் என்றால் மோகன் என்பதுபோல் கல்லூரி மாணவன் என்றல் நினைவுக்கு வருவது முரளி தான்....காதல் கதைகளில் சற்றே புதுமையான, வித்யாசமான கதைகள் கொண்ட படங்களை தமிழுக்கு தந்தவர் முரளி... இதயம் படத்தை ரசிக்காத தமிழ் இதயம் இருக்குமா? அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகான சிரிப்பும் இன்னும் நம் கண்முன்னே நிற்கிறது...

திரை உலக வாழ்வில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்தவர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். தன் மகன் அறிமுகமாகி அவரது வளர்ச்சியை காண மனுஷன் எவளவு ஆசை பட்டிருப்பார். அதற்குள் இந்த திடீர் சம்பவம் திரை உலகத்தினரை மட்டும் அல்ல பலரது உள்ளங்களையும் கசக்கி இருக்கும்....அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும்  தைரியத்தை தமிழ் நெஞ்சங்கள் தரட்டும்....முரளி அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்... 
This entry was posted on 9:09 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: