Author: Sathish
•2:11 PM
அசல் பார்த்த வலியிலிருந்து மீளமுடியாமல் இருந்த எனக்கு வெகுவாக தெம்பளித்த படம் அங்காடித் தெரு. டைரக்டர் வசந்த பாலனின் மூன்றாவது படம் என்று நினைக்கிறன்...முதல் படம் ஆல்பம், புது முகங்கள் தான் அதிலும்...பழம்பெரும் நடிகர் 'தேங்காய்' ஸ்ரீநிவாசன் அவர்களின் பேத்தி நடிச்சது..சிம்பிள் கதைதான் ஆனாலும் ரொம்ப நல்லா இருந்தது...அடுத்தது வெயில்..இரண்டிலும் கலக்கிய பாலன்,அங்காடி தெருவிலும், புது முகங்களையும், நல்ல கதைக் கருவையும் தேர்ந்தெடுத்து அதை ரொம்ப நல்லா தந்திருக்கிறார்...சமீப காலமாக, ஹீரோக்களை மட்டும் நம்பாமல், கதைகருவை நம்பி எடுத்த படங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கத் தான் செய்கிறது...அந்த வரிசையில், அங்காடித் தெரு 'கல்லூரி' அளவுக்கு என்னை கவர்ந்தது...ரொம்பவும் எதார்த்தமான, நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிற ஒரு கதை. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி திரைகதை அமைந்துள்ளது...

சென்னையிலிருந்த போது நானும் அந்த மாதிரி கடைகளுக்கு போய் இருக்கிறேன்...நாள் முழுவதும் நின்றுகொண்டே  வியாபாரம் பார்க்கும் அவர்களுக்கு ரொம்பவும் சின்ன வயசா தான் இருக்கும்...பாவமா இருக்கும். அவர்களின் தேவையை தனக்கு சாதகமாக்கி கொள்ளு(ல்லு)கிறார்கள், அந்த கடைகளின் முதலாளிகள் எனும் முதலைகள்...நானும் என் வீட்டில் உள்ளவர்களும்  அந்த கடைகளுக்கு செல்லும் போது, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வோம்...அனாவசியமாக இதை எடு அதை எடுன்னு சொல்லாம, ரொம்பவும் அவங்க நேரத்தை எடுத்துக்காம செலக்ட் பண்ணிடுவோம்.... ஹ்ம்ம் இப்போதைக்கு எங்களால முடிஞ்சது...:(

படத்தில் நடித்த மகேஷ்,அஞ்சலி ரொம்பவும் அசத்திட்டாங்க...இயல்பான நடிப்பு...அஞ்சலி அம்சம்...டச் பண்ணிடாங்க [யாரு தான் உன்ன டச் பண்ணல?] வாழ்த்துக்கள்...படத்தில் வரும் Black  பாண்டியின் நடிப்பும் பாராட்டதக்கது...விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' மூலம் பிரபலமான பாண்டி இந்த படத்துல ஒரு முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்கார்...

பணக்காரர்களை விள்ளதனமாகவும், ஏழைகளை ரொம்பவும் நல்லவர்களாகவும்,  வேலையாட்கள் சாப்பிடும் மெஸ் அருவருப்பாகவும், பின்னர் அதே மெஸ் சாதரணமாகவும் காண்பிக்கப் படும் சில வழக்கமான சினிமா formula  தவிர படத்தில் குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை...

தைரியமாக, சென்னை ரங்கநாதன் தெரிவில் வியாபாரம் செய்யும் வேலையாட்களின் அவல நிலையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருகிறார் வசந்தபாலன்...இந்த படத்தின் மூலம் அவர்களின் கஷ்டமறிந்து அவர்களின் அவல நிலைகள் சற்றே தகர்க்கப் படுமானால் நலமே....
This entry was posted on 2:11 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On April 11, 2010 at 1:34 PM , பிரதீப் said...

crispy and good, spelling mistake paathukkunga...

 
On April 11, 2010 at 2:08 PM , ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு!!

 
On April 11, 2010 at 2:09 PM , ரேஷன் ஆபீசர் said...

Please remove word verification.

All the best !!

 
On April 17, 2010 at 7:33 AM , Sathish said...

நன்றி பிரதீப், ரேஷன் ஆபிசர்...ரெண்டு வாரமா கொஞ்சம் வேலை அதிகம் அதான் பதிவு பக்கம் வர முடியவில்லை....

ரேஷன் ஆபிசர்,
FYI, I removed word verification...Happy to see your comment as soon as I published my post...Thanks!!

 
On August 10, 2010 at 5:30 AM , selvam said...

AAN PAAVAM padichan romba super...........