1
அவதார்
சமீபத்தில் நான் பார்த்த ஆங்கில படத்தில் என்னை ரொம்பவே கவர்ந்த படம் இந்த "அவதார்". James Cameron என்றால் பிரம்மாண்டம் என்பதை மீண்டும் நிறுபித்திருகிறார். இதுல இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படம் TITANIC அடுத்து யோசித்த படமாம். அந்த சமயத்தில் Cameron தான் யோசித்த அளவிற்கு டெக்னாலஜி இல்லை என்று தள்ளி போட்டு விட்டாராம். எப்படி தான் இப்படிலாம் யோசிப்பாங்களோ? படத்திற்கு படம் வித்யாசம், விஞ்ஞான வளர்ச்சி, மாறுபட்ட கோணங்கள் அடேங்கப்பா!!! நம்ம சினிமா எப்ப இதுபோல முன்னேற போகுதோன்னு ஏக்கம் எனக்கு. 2154 ம் வருடத்திற்கான pandora எனப்படும் ஒரு வகை கோள்களில் இருக்கும் ஜீவராசிகளின் கதை இந்த அவதார். Dreamwalk, வினோத பறவைகள், மிருகங்கள் என பல்வேறு இடங்களில் மிரள வைத்திருக்கிறார் மனுஷன். கதை ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக, காதல், செண்டிமெண்ட், ஆக்சன் என எல்லா அம்சங்களும் நிறைந்த படம் அவதார். என்னை பொறுத்தவரை மிகவும் எதிர்பார்த்த 2012 படத்தை விட அவதார் பல மடங்கு பிரமாதமான படம் என்பேன். என் கூட வேலை பார்க்கிற ஒரு தெலுங்கு பய கிட்ட அவதார் தமிழ்லே 1995 லே ரிலீஸ் ஆயிடுச்சு, நாசர் டைரக்ட் செஞ்சி நடிச்சிருக்கார்; அந்த படத்தோட ரீமேக் தான் இந்த அவதார் ன்னு சொன்ன என்னை Cameron மன்னிப்பாரா? ஹி ஹி ஹி !!!
2
வேட்டைக்காரன்
அவதார் பட விமர்சனம் எழுதின கையோட இதையும் எழுத உண்மையாவே எனக்கு கை கூசுது! படிக்கற காலத்தில [நீ எப்போ படிச்ச? ] நான் ஒரு விஜய் ரசிகனாகவும் இருந்திருகிறேன்னு நெனச்சா எனக்கு பப்பி ஷேமா இருக்கு. விஜய் சார் உங்களுக்கு கால் சீட் பிரச்சனையா? அப்புறம் எதுக்கு உங்களோட "நாளைய தீர்ப்பு" லே இருந்து "வில்லு" வரை உள்ள படத்திலிருந்து எல்லா சீன்களையும் தொகுத்து "வேட்டைக்காரன்" ரிலீஸ் பண்ணீங்க? "புலி உரும்புது" பாட்ட கேட்டு கில்லி மாதிரி படம் வரும் ன்னு ரொம்ப எதிர்பார்த்தேன். US லே நான் இருக்க ஏரியா லே எங்கே ரிலீஸ் ன்னு தேடிபிடிச்சு வச்சிருந்தேன் !!! நல்ல வேலை ; டாலர் தப்பிச்சுது.நெட்லே ப்ரீ யா கூட பார்க்க முடிலே டா சாமி....விஜய் சார்...உங்க படம் நல்லா இல்லன்னு அவ்வளவு சீக்கிரம் என் வாய்லே வராது...நீங்க ஒரு நல்ல டான்சர், நல்லா fight பண்ணுவீங்க...பட் ஏன் நல்ல கதை செலக்ட் பண்ண மாட்டேன்றீங்க? இதே மாதிரி வண்டி ஒடுச்சினா திரும்ப சங்கவிய heroina போட்டு "ரசிகன்" லே இருந்து ஸ்டார்ட் பண்ணவேண்டி இருக்கும் ! சொல்லிபுட்டேன் பார்த்து செய்ங்கோ !!! சங்கவி சொன்னதும் "சில் என சில் என நீர்த்துளி பட்டு" பாட்டு எத்தனை தடவ சவுண்ட் கூட இல்லாம பார்த்திருக்கிறேன் னு நெனச்சி பார்கிறேன். [ரொம்ப பெருமை.. மானங்கெட்டவனே ன்னு திட்ரவங்க நெஞ்சுல கை வச்சி சொல்லுங்க நீங்க பார்க்கவே இல்ல ன்னு]
3,
ரேணிகுண்டா
கல்லூரி, வெண்ணிலா கபடி குழு வரிசையில் புது முகங்களை கொண்டு யதார்த்தமாக எடுத்த படம் ரேணிகுண்டா.
ஏற்கனவே சொன்ன கதையே ஆனாலும் படம் போகிற போக்கு நல்லா
தான் இருக்குங்கோ. சின்ன பசங்க நாலு பேரு இந்த சமுதாயத்துல எப்படி
ஒரு தப்பான பாதையில போய் கெட்டு அழியறாங்க என்பதை டைரக்டர் நல்லா
சொல்லி இருக்கார். "டப்பா" கேரக்டர் பேசுற பாணி சூப்பர். கதாநாயகி சூப்பரா
இருக்கா. படம் முடிஞ்சும் அவ முகம் இன்னும் ஏன் மனசில இருக்கு?
[டேய் டேய் ....ஏன்டா ?] தொடர்ந்து நல்ல திரைகதை இல்லாத காலகட்டத்தில்
"ரேணிகுண்டா" சற்றே ஆறுதல்.
புதுசா படம் பண்ணும் டைரக்டர்களே, தயாரிபாளர்களே, ஹீரோக்களே - ரசிகர்களாகிய
நாங்கள் வெறும் கதாநாயகன், கதாநாயகி மட்டும் பார்த்து வெற்றி படமாக்கிய
நாட்கள் மலையேறி போச்சு !! நல்ல கதை இருந்தால் நாங்கள் ரசிக்கத்தான் செய்வோம்.
மாறுபட்ட கோணம் என்றால் தமிழ்லே கமல் தான் என்பதை மாற்றி அமையுங்கள்...
ரசிகர்களான எங்களுக்கே இவ்வளவு ரசனை என்றால், படைப்பாளியான உங்களுக்கு
எவ்வளவு ரசனை இருக்கும்? அதை வெளியே கொண்டு வாருங்கள்.
பிறக்கவிருக்கும் புது வருடம் தமிழ் திரையுலகின் வெற்றி வருடமாக இருக்கட்டும்....